வெள்ளி, 13 நவம்பர், 2009

விலங்குகளை விட மோசமான முறையில் கொல்லப்படும் ஆதிவாசிகள்

மனதைப் பதறவைக்கும் மற்றும் ஓர் காணொளி இணைப்பு



http://www.youtube.com/watch?v=OVReet6b2ks

இப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே. காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது எனது தேசம்.
ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.

ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் "காமன் மேன்" கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.

இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்...

2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என (அப்படி ஏதேனும் நடந்திருந்தால்) யாரேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

மற்றபடி

வாழ்க (வல்லரசு) இந்தியா...

திங்கள், 12 அக்டோபர், 2009

தினமணியின் இந்திய-இலங்கை நட்புறவுக்கெதிரான செயல்

ஏற்கனவே பிண்ணிப் பிணைந்துள்ள இந்திய - இலங்கை உறவு தற்பொழுது மேலும் வளர்வதை பொறுக்காத தினமணியின் சதிச்செயல் பார்த்தாயா உடன்பிறப்பே???


நமது மீனவர்கள் தாக்கப்படுவது என்ன புதுத் தகவலா நமக்கு?? அதனை நமது நாடாளுமன்ற உறுப்பினர் இரு நாட்டு உறவு குறித்து பேசிய அதே தினத்தில் வெளியிடும் தினமணியின் உள்நோக்கம் என்ன?உடனடியாய் தலையிட்டு தீர்வு காண அது என்ன சினிமா நடிகர்கள் சம்பந்தப்பட்ட விவகாரமா உடன்பிறப்பே??
ஹார்வார்ட் தந்த சிந்தனைச் செம்மல் என்ன செப்பியிருக்கின்றார் என கவனித்தாயா?? "Union Home Minister P Chidambaram on Friday dismissed as wrong reports about firing on Indian fishermen by Sri Lankan Navy in the last 10 months but said cases of some excesses by them have been taken up"

உண்மை நிலை இப்படி இருக்க தினமணிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை???

ம்ம்ம்ம்ம்ம்

சரி...

வாழ்க இலங்கை-இந்திய நல்லுறவு!!



புதன், 9 செப்டம்பர், 2009

திசநாயகத்தின் சிறைத் தண்டனைக்கு எதிரான பத்திரிகையாளர்களின் கண்டன ஒன்று கூடல்

Save Tamils இயக்கம், இலங்கை தமிழ் பத்திரிகை எழுத்தாளர் திசநாயகத்தின் கைது மற்றும் 20 வருட கடும் சிறைத் தண்டனையை எதிர்த்து , பத்திரிகையாளர்கள் பலரும் பங்கேற்கும் கண்டன நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்துகொண்டு பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான அரச பயங்கரவாத அடக்குமுறைக்கு நமது எதிர்ப்பினை பதிவு செய்வோம்.

நாள்: 12/09/09

நேரம்: காலை 10.30 மணியிலிருந்து

இடம்: சி. தெய்வநாயகம் மேனிலைப் பள்ளி (திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிர்ப்புரம்), வெங்கடநாரயண சாலை, தி. நகர், சென்னை 17




கூட்டத்தில் பேசப் போகும் பேச்சாளர்கள் விபரம் பின்வருமாறு

Mr Rajesh Sundaram, Deputy Editor, Headlines Today, Delhi
Mr AS Paneerselvam, Sr. Journalist
Mr Devasahayam, I.A.S (Retd)
Ms Kavitha Muralidharan, The Week
Mr Venkatramanan, Sr Journalist, Times of India
Mr Peer Mohammed, Deccan Chronicle


தொடர்புக்கு: savetamil@gmail.com, save-tamils@googlegroups.com,
98400 90898, 98844 68039

பின்குறிப்பு: இந்த நிகழ்வினை உங்களது நண்பர்களுக்கு அனுப்பியும், இந்தப் படத்தினை உங்களது வலைப் பூவின் முகப்பில் வைத்து பலருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி அறியத்தந்து உதவுமாறு வேண்டுகின்றேன்.

ஈழத்து மக்களின் இன்றைய அவலத்திற்கு யார் காரணம்? தினமணி கருத்துக் கணிப்பு

கலைஞரால் கட்டிக் காக்கப்படும் தமிழக காங்கிரஸை வலுப்படுத்த, டெல்லியிலிருந்து வந்த சோனியாவின் வாரிசு தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்யும் நேரத்தில், தினமணி ஈழத்தின் இன்றைய அவலத்திற்கு யார் காரணம் எனக் கேட்டு நேற்று நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் உங்கள் பார்வைக்கு.



என்னதான் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் பெரும்பான்மை தமிழக ஊடகங்கள் இருப்பினும் கற்றறிந்த பெரும்பான்மை தமிழர்களிடம் சரியான முறையில் தகவல் சென்றடைந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

நாகலாந்து படுகொலைக் காட்சிகள்

வடகிழக்கு மாநில மக்களின் அவலத்திற்கு மற்றும் ஒரு சாட்சியம். கடந்த ஆகஸ்ட் 12ம் நாள் அசாம் ரைபிள் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பம் ஒன்றும் அதைத் தொடர்ந்து பொது மக்களின் போராட்டங்களும் உக்ருல் மாவட்டத்தில் (Ukhrul district) நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை கோரி மைய அரசின் பிரதிநிதிகளுக்கு 6 நாகா அமைப்புகளின் கூட்டமைப்பு சுற்றறிக்கைக்கு அனுப்பிய தகவல் மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப் பெற்றது.

42 பழங்குடி இனங்களையும், சற்றேறக்குறைய 35 இலட்சதிற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள தேசிய இனமான நாகாவின் உரிமைக்காகவும் அவர்களின் நலனுக்காவும் Nationalist Socialist Council of Nagaland (NSCN) இயக்கம் 1960களிலிருந்து போராடி வருகின்றது. இந்திய மைய அரசுடன், (NSCN) இயக்கத்திற்கு கடந்த 1 ஆகஸ்ட், 1997 லிருந்து யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கின்றது. இருந்த போதிலும், அதன் அரசியல், மனித உரிமைப் பிரிவு பொருப்பாளார்களை பாதுகாப்பு படையினர் அடிக்கடி தாக்கி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 12ல், அசாம் ரைபிள் படைப்பிரிவினரால், பல பொதுமக்கள் முன்னிலையில் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டு, மறுநாள் பிணமாக மீட்கப்பட்ட Salmon Hungyo என்னும் 28 வயதான வாலிபரின் உடலத்தின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

படங்கள் கோரமானவை



கடும் சித்திரவதைக்கு உள்ளான தடயங்கள்


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்




இந்த நிகழ்வைப் பற்றியோ, அல்லது மக்களின் போராட்டத்தைப் பற்றியோ ஏதேனும் செய்தி உண்டா என வெகுஜன ஊடகங்களில் கண்ணில் எண்ணை விட்டு தேடியும் ஒன்றையும் காணோம். வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், இராணுவ அத்துமீறல்கள் தொடர்பாக பெரும்பான்மை ஊடகங்கள் கள்ள மெளனம் சாதித்து வருவதற்கு சற்றும் குறைந்தது அல்ல அவர்களின் வாசகர்களின் கள்ள மெளனம். இது போன்ற சட்டத்திற்கு புறம்பான அரச பயங்கரவாதத்தின் படுகொலைகளை கண்டும் காணாமல் போகும் போக்கே உள்ளது.

வாழ்க ஜனநாயகம்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

வட கிழக்கு மாநில இராணுவ அத்துமீறல்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள்

நாடு முழுதும் அமைதியாகவும், செழுமையாகவும், மக்களாட்சியில் இந்தியா மிளிர்வதாகவும் எழுதிக் கொண்டிருக்கும் இந்தியப் பத்திரிக்கை/செய்தி ஊடகங்கள் பெரும்பான்மையினோருக்கு வட கிழக்கு மாநிலங்கள் ஒரு இருண்ட, வேண்டப்படாத பிரதேசமே. அவைகளை இந்தியாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பாதக கருதிக் கொண்டிருப்பதைத் தவிர அவ்வப்போது நிகழும் குண்டுவெடிப்பு சம்பவங்களை பட்டியலிட்டு, இதற்கு முன்பு நிகழ்ந்தவை என வேறு சில பயங்கரவாத சம்பவங்களை பட்டியலிடுவதுடன் அவற்றின் கடமைகள் ஓய்ந்துவிடுகின்றன.

1958லிருந்து அங்கிருக்கும் AFSPA (Armed Forces Special Powers Act) பற்றியோ, தனது சொந்த நாட்டின் இராணுவ/பாதுகாப்பு படையினருக்கு எதிராக பெண்கள் கிழர்ந்தெழுந்து நிர்வாணப் போராட்டம் நடத்தியது பற்றியோ, அங்கு நாளும் நிகழும் மனித உரிமை மீறல்கள், மாநில உரிமைகள் நசுக்கப்படுவது பற்றியோ வாய் திறவாது இந்தப் பெரும்பாண்மை ஊடகங்கள். ஒவ்வொரு மாநில/தேசிய மக்களுக்கும் இந்தியா என்னும் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை அவர்களின் தனித்துவத்திற்கு தரப்படும் மரியாதையிலும் மதிப்பிலும் விளையும் புரிந்துணர்வில் தான் வருமென்பதை இது போன்ற பெரும்பாண்மை ஊடகங்களைப் படிக்கும் பெருவாரியான வாசகர்களும் உணர்ந்து கொள்வதில்லை. ஆனால், அவர்களைப் போன்றவர்கள் தாம், எல்லாரும் இன்னாட்டு மன்னர்கள் என சொல்வதும் ஒரு முரண் நகையே. 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பை இராணுவக் கட்டுப்பாட்டில் நீண்ட நெடும் காலமாய் வைத்திருக்கும் இந்த "அப்பாவி மக்களாட்சி நாடு", அகிம்சையால் வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற்றதாய் எண்ணுபவர்கள் அவர்கள்.

இந்நிலையில், மிகச் சமீபத்தில் வடகிழக்கில் நடந்த இரண்டு சம்பவங்கள்.

1) ஜீலை 23ல் இம்பாலில் பொதுமக்களின் கண்முன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒரு இளைஞரைப் பற்றிய Tehelka புலனாய்வுப் பத்திரிகையின் செய்தி

2) அசாமில்,
Halflong என்னும் நகரில் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற சீக்கிய ரெஜிமெண்டைச் சேர்ந்த இராணுவத்தாரை இளம் பெண் ஒருவர் தாக்கும் காணொளி.

http://www.youtube.com/watch?v=hTArs6ljqgk

இப்படிப்பட்ட அதிகார துஷ்பிரயோகங்கள், அத்துமீறல்கள் நடப்பதை பெரும்பான்மையான செய்தி ஊடகங்கள் தொடர்ந்தும் புறக்கணிக்க (ஒரு வகையான கண்கட்டுவித்தை), ஆனால், அதில் மட்டுமே நாட்டு நடப்புகளை கவனிப்போர் இது பற்றிய விவாதங்களையே தவிர்க்கின்றனர். இன்னமும் சிலர், ஒரு படி மேலே போய் இது போன்ற இராணுவ அத்துமீறல்களை ஆதரிக்கவும் செய்கின்றனர். இதே போன்ற ஒரு இழிசெயல் இவர்களுக்கோ அல்லது இவர்களது குடும்பாத்தாருக்கோ/நண்பர்களுக்கோ நிகழ்ந்தால் கூட அவர்கள் அதே போல் விவாதம் புரிவார்களா எனத் தெரியவில்லை. இவர்களின் போலித் தேசியவாதம் கண்ணை மறைக்கின்றது. இந்திய 'இரை'யாண்மையைப் பேசுவோர் இந்த மக்களின் இறையாண்மையைப் பற்றியோ, இவர்களின் அரசியல் தனித்தன்மையைப் பற்றியோ பேச மறுப்பது உண்மையிலேயே அயோக்கியத்தனமானது.

மக்களாட்சி நடப்பதாக கூறிக் கொண்டிருக்கும் ஒரு ஜனநாய நாட்டில், பெரும்பான்மை மக்களின் கவனத்தை ஈர்க்காமலேயே நடக்கும் காலவரையற்ற இந்த இராணுவ ஆட்சியின் விளைவுகளே நாள்தோறும் நிகழும் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள்.

அங்குள்ள இயற்கை வளங்களைச் சுரண்டுதல், காலச்சாரங்களையும் பழக்க வழக்கங்களையும் திட்டமிட்ட முறையில் சீரழித்தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்ம்படுத்த முயலாமல் இராணுவ/போலிஸ் அடக்கு முறையின் மூலமே தீர்வை எட்ட முடியும் என எண்ணும் இந்திய மைய அரசியல்வாதிகளின் எண்ணப் போக்கில் மாற்றம் நிகழாத வரை, நிகழ்த்தப்படாத வரை, அங்குள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்கள் சுதந்திரக் காற்றை அனுபவிக்க இயலாது.

தொடர்புடைய சுட்டிகள்:

http://www.tehelka.com/story_main42.asp?filename=Ne080809murder_in.asp

http://ntmani.blogspot.com/2004/09/lesser-indians.html

http://ntmani.blogspot.com/2004/08/blog-post_21.html


பின்குறிப்பு: தங்கமணியின் பதிவினைப் படித்து பின் சில விசயங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த மனநிலையில் எழுதியதால் பதிவிலும், தலைப்பிலும் அதன் தாக்கத்தை தவிர்க்க இயலவில்லை !!!!

சனி, 18 ஜூலை, 2009

மாற்றுத் திறன் உடைய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - Scholarship for Students with Disabilities

இது, இன்று மின்னஞ்சலில் வந்தது. தேவையும் அவசியமும் கருதி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்...

இந்திய மைய அரசாங்கம் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் தொழில்நுட்ப மற்றும் பட்டப் படிப்புகளுக்கான 500 கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இதனுடைய முக்கிய சிறப்பம்சங்கள்

Financial Assistance can be given for computer with editing software for blind/deaf graduate and post graduate students pursuing professional courses and for support access software for cerebral palsied students.

Scholarship of Rs.1000/-p.m. for hostellers and Rs.700/- p.m. for day scholars studying in professional courses at graduation and above level, and Rs.700/- p.m. for hostellers and Rs.400/- p.m. for day scholars pursuing Diploma /certificate level professional. Course fee is reimbursed upto ceiling of Rs.10,000/- per year.

இதன் முழுத் தகவல்களைப் பெற இங்கே அழுத்தவும்.

விண்ணப்ப படிவங்களை ஆகஸ்ட் 31க்குள் அனுப்பியிருக்க வேண்டும்.

இவர்களின் வலைப்பக்கம் www.socialjustice. nic.in

நண்பர்கள் மற்றும் தேவையுள்ள மாணவர்களுக்கு இத்தகவல்களை கொண்டு சேருங்கள்...

சில மாணவர்களுக்கு கல்வி உதவி வேண்டி.

நண்பர்களுக்கு வணக்கம்,

கும்மிடிப்பூண்டி ஏதிலிகள் முகாமிலிருக்கும், பள்ளித் தேர்வுகளை முடித்து கல்லூரி செல்வதற்காக காத்திருக்கும் பலரில், சில ஈழத்தமிழ் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் நோக்குடன் நண்பர்கள் சிலர் கூட்டாக இணைந்து எடுத்திருக்கும் முயற்சியைப் பற்றிய பதிவு இது.

ஒர்குட் போன்ற பொதுத் தளங்களை வீண் அரட்டைக்கும், வெட்டி மொக்கைக்கும் மட்டுமே பயன்படுத்தாமல், தமிழக/இந்திய அரசியல் போக்குகளைப் பற்றி விவாதிக்கவும் (அப்ப, இது மட்டும் என்ன உபயோகமான வேலையானு கேக்க கூடாது !!!!), முடிந்த அளவு மிகச் சிறிய அளவிலேனும் சமுதாயத்திற்கு பயனுள்ள காரியங்களில் பங்கேற்று செயல்படவும் பல குழுமங்கள் ஒர்குட் தளத்தில் உள்ளது. அவற்றுள், தமிழக அரசியல் குழுமம் - Tamilnadu Politics (TNP) முக்கியமான ஒன்று.

இந்த முறை, கும்மிடிபூண்டி ஏதிலிகள் குடியிருப்பில் , இந்த ஆண்டில் மேல் நிலை பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தங்களது மேற்ப்படிப்பை தொடர முடியாத நிலையில்( 150க்கும் மேற்பட்ட மாணவர்கள்) இருப்பது தெரியவந்தது, (கடந்த கல்வியாண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் நிறைய பேர், படிப்பை தொடர முடியாத காரணத்தினால், கட்டட வேலைக்கும்,பெயிண்ட்ர் இன்னும் பலவகை கூலிவேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.,) அவர்களில் ஏதேனும் இருவருக்கு உதவலாம் என முடிவெடுத்துள்ளோம்.

நாம் தேர்ந்தெடுத்த பிள்ளைகளின் விபரம்

புவனேசுவரி த/பெ சுப்ரமணியம் , வயது 17 , கும்மிடிபூண்டி.
BE கணினி அறிவியல்
மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரி
திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்...


நிஜந்தன் த/பெ ரவி, வயது 18 , கும்மிடிபூண்டி
Bsc Bio tech
ஜெயா கலைக் கல்லூரி
திருநின்றவூர்
சென்னை.

இவர்களுக்கான கல்வி கட்டணம்
புவனேசுவரி
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 59,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....

நிஜந்தன்
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 35,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....

குறைந்தது ஆண்டுக்கு 1.5 லட்சம் தேவைப்படுகிறது. நான்கு ஆண்டுகள் என்றால் 6 லட்சம் ரூபாய். பெரியதொகைதான். ஆனால் நம்மில் பலர் ஒன்றாய் இணைந்தால் இது அவரவர் பங்குக்கு சிறு தொகையாகவே வரும். நாம் உறுதியாக நான்கு வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வுதவியை தமிழக அரசியல் குழுமத்தின் மூலம் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

இது தொடர்பாக, எனக்கு வந்த மின்னஞ்சலை பலருக்கு அனுப்பி உதவவி வேண்டியதில், மிகச் சிலரே இந்த முறை உதவு முடியும் என உறுதியளித்துள்ளனர். நண்பர் இரஞ்சித் தனது வலைப்பதிவிலும் இதனை வெளியிட்டிருந்தார்.

இந்த தமிழக அரசியல் குழுமத்தின் - Tamilnadu Politics (TNP) முன்னைய செயற்பாடுகள், உங்கள் பார்வைக்கு

சென்ற ஆண்டின் துவக்கத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகிலுள்ள மலையடிவார கிராமம் பொம்மிக்குப்பத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அந்த கிராம மக்களின் சார்பாக Rs. - 48,384/ னை ஒர்குட் குழும நண்பர்களிடமிருந்து (20 பேர்) வசூழித்து நன்கொடையாக கட்டினோம். கட்டிய தொகை ரூ 32,800. மீதம் கையிறுப்பு ரூ.15,584.அது பற்றிய விவரங்களைக் காண

பொம்மிகுப்பம் பள்ளிக்கு உயர் நிலை அந்தஸ்து இந்த கல்வியாண்டு முதல் கொடுக்கப்பட்டுள்ளது. பதினோராம் வகுப்பு தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை ஆரம்பமாகியது.

தமிழ்நாடு அரசியல் குழுமம் என பெயரிட்டுவிட்டு, அரசியல் இல்லாமலா.. சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது சிவகங்கையில் கைதானவர்களை வெளியில் எடுக்க, சிதம்பரத்திற்கு எதிரான தேர்தல் பிரச்சார செலவுகளுக்கும் இந்த குழுமத்தின் மூலம் நிதி திரட்டப்பட்டது (12 பேரிடமிருந்து 65 ஆயிரம் ரூபாய்).!!!!!

அதில் மீதமான தொகை, 1 ஆயிரம் ரூபாயினை சென்ற மாதம் ஜூன் 7ல் நடைபெற்ற "நீதிக்காண அமைதிப் பேரணி" நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்கனவே வசூல் செய்யப்பட்ட பண விபரங்களைக் கூறுவதன் காரணம், இந்த தன்னார்வ செயலுக்கு எந்தப் பெயரும் சூட்டவில்லையெனினும் (அரசு சாராத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் NGO வாக பதிவு செய்யும் வேலைகள் நடந்து கொண்டுள்ளன) முன்னரே அனுபவம் உள்ளது என சுட்டிக்காட்டத் தான். அதைத் தொடங்க சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றுக்கு சிறிது கால அவகாசம் எடுக்கும்.

அதற்கு முன் கல்லூரிகள் திறக்க இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தமிழக அரசியல் குழும நிர்வாகியான சக்திவேல் அவர்களின் வங்கிக் கணக்கு மூலம் முதலாவது தவணை உதவியைப் பெறலாம் என்று எண்ணுகிறோம். அவரது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு விபரம் கீழே:

C Sakthivel
ICICI account no: 620401064769
Branch: Contonment Branch, Trichy

SWIFT CODE: ICICINBB
Bank code: 6204

மேலும் வரைவோலை, மற்றும் பணப்பட்டுவாடா அனுப்புபவர்கள் நண்பர் தயாளனின் விலாசத்திற்கு "C.Sakthivel" என்ற பெயரிலேயே அனுப்பலாம். அவரது விலாசம் கீழே

D. Dhayalan (தொடர்புக்கு : 9841150700)
B/GF, Kasi Arcade Annex-1
32/1, VOC Street
Kaikan Kuppam (Near Chennai Medical Center)
Valasaravakkam - Post
Chennai - 600087

தங்கள் மூலம் ஈழத்துச் சிறார்களின் கல்வி விளக்கேற்ற ஒரு உதவி அது சிறு துளியாய் இருந்தாலும், அவர்களுக்குப் பேருதவியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

கும்மிடிபூண்டி ஏதிலிகள் குடியிருப்பில், பள்ளியிறுதிப் படிப்பு முடிந்த நிலையில், கல்லூரி சென்று படிக்க இன்னமும் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றி அறிய விரும்பினால், ஜாம்பவன் நேரு (9941185563) என்னும் பொறுப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.

நன்றி....

பின்குறிப்பு: இணைப்புகள் முழுவதும் ஒர்குட் இணைப்புகளே. உங்களது ஜிமெயில் வழியாக மிக எளிதாக உள்நுலையலாம்.

வியாழன், 25 ஜூன், 2009

ஈழமக்களின் இன்றைய அவலநிலை குறித்து விவாதிக்க ஒரு கலந்துரையாடல் 28/06/09

ஈழப் பிரச்சனையின் தற்போதைய நிலவரம் குறித்தும், மக்களின் அவலநிலையை விளக்கியும் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு IT Professionals என்னும் அமைப்பினரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் தான், இந்த மாதம் 7ம் நாள் நடந்த "நீதிக்காண அமைதிப் பேரணி" நிகழ்வையும் நடத்தியிருந்தது நியாபகம் இருக்கும்.

நாள்: 28/06/09

நேரம்: மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரை

இடம்: லாரன்ஸ் சுந்தரம் அரங்கம், லயோலா கல்லூரி, சென்னை



கூட்டத்தில் பேசப் போகும் பேச்சாளர்களும் நிகழ்வுகளும் பின்வருமாறு

விடுதலை ராசேந்திரன் - ஈழப் போரட்டத்தின் வரலாறும் அதன் எதிர்காலமும்
தந்தை ஜெகத் கஸ்பர் - வதைமுகாம்களில் அடைபட்டுள்ள மக்களின் இன்றைய அவலநிலை
பூங்குழலி - சிங்கள இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள்
அருள் ஜார்ஜ்(PUCL) - சிங்கள இராணுவத்தின் போர்க் குற்றங்கள்

இந்தக் கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக சில குறும்படங்களை ஒளிபரப்பவும், புகைப்படக் கண்காட்சி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்து முகாம்களிலிருக்கும் சில ஈழத்தமிழர்களும், சிங்கள இராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்குறிப்பு: பல்வேறு பணிச்சூழல், தனிப்பட்ட வேலைகளின் காரணமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களினால் சென்றமுறையைப் போல் முன்கூட்டியே இந்த நிகழ்வை பலருக்கும் தெரியப்படுத்த இயலவில்லை என அறிய நேர்ந்தது. ஆகையால், சென்ற முறை நீதிக்காண அமைதிப் பேரணி நிகழ்விற்கு பரப்புரை செய்ததைப் போல், இந்த முறையும் இந்தப் படத்தினை உங்களது வலைப் பூவின் முகப்பில் வைத்து பலருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி அறியத்தந்து உதவுமாறு வேண்டுகின்றேன்.

வியாழன், 4 ஜூன், 2009

தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா உயர் அதிகாரிகள் - லெ மாந்த் பத்திரிக்கை குற்றச்சாட்டு

இந்த கட்டுரையின் தமிழாக்கத்தில் சிறிது பங்கெடுத்திருந்தாலும், இதன் தேவையும் அவசியமும் கருதி கையேடு(இரஞ்சித்) அவர்களின் முன் அனுமதியுடன் இங்கு பதிகின்றேன்.

************************************************************************************

இலங்கை விவகாரத்தில், ஐ.நா செய்த திரைமறைவுக் குளறுபடிகளால் தனது கடமையில் இருந்து தவறியிருக்கிறது என்ற பிரதானக் குற்றச்சாட்டுடன் , மே 28 ஆம் தேதி ப்ரெஞ்ச் பத்திரிக்கையான "லெ மாந்த்" (Le Monde), கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. "Philippe Bolopion" என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

பத்திரிக்கையின் சுட்டி : http://www.lemonde.fr/asie-pacifique/article/2009/05/28/sri-lanka-l-onu-a-cache-l-ampleur-des-massacres_1199091_3216.html

இனி அக்கட்டுரையிலிருந்து..

"L'ONU a caché l'ampleur des massacres au Sri Lanka,"

"தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா"


இறப்பு எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு பதிலில்லை. இறப்பு எண்ணிக்கை குறைத்தே வெளியிடப்பட்டுள்ளது. முறைதவறியுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கெதிராக போதிய ஆவணங்கள் இருந்தும் ஐ.நா வின் மேல்மட்டம் அமைதிகாத்திருப்பது "லெ மாந்த்" பத்திரிக்கையின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

போரின் இறுதி நிகழ்வுகளை "இரத்த வெள்ளம்" என்று குறிப்பிட்டாலும், கொழும்பின் மீதான பக்கச் சார்பினால், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் தமது கடமையிலிருந்து ஐ.நா மன்றம் தவறியிருக்கிறது.
இறந்தவர் எண்ணிக்கை பற்றிய உண்மையான அறிக்கையை வெளியிட மறுத்தது அதன் செயல்பாடுகளின் குறைகளைச் சுட்டுகிறது.

புலிகளுக்கெதிராக நடைபெற்ற இந்தப் போரில், ஐ.நாவின் கள ஊழியர்கள், அரசு சாரா உதவிக்குழுக்கள் (NGOs), மருத்துவர்கள் மற்றும் மத போதகர்கள் அளித்த உயிரழப்புக்கள் குறித்த எண்ணிக்கைகளை ஐ.நாவின் அதிகாரக்குழுக்களுள் சில, தொடர்ந்து இடையீடு செய்ததோடு, எண்களைக் குறைத்தும், திருத்தியும் இருக்கின்றனர்.

இதன் உச்சகட்டமாக சனவரி 20 ஆம் தேதியிலிருந்து மே 13 வரை ( இறுதித் தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்புவரை ) இறந்தவரின் எண்ணிக்கை 7,720 (678 குழ்ந்தைகள் உட்பட) எனவும், படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை 18,465 ( 2,384 குழந்தைகள் உட்பட) எனவும் தெரிவிக்கிறது அறிக்கை. " இவ்வறிக்கையை மறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது" என்று குறிப்பிடுகிறார் ஐ.நா வின் ஊழியர் ஒருவர்.

இறப்பு எண்ணிக்கைகள் பத்திரிக்கைகளுக்கு பல வழிகளில் சென்றடைந்த போதும், கொழும்பிலிருந்த ஐ.நா வின் ஒருங்கிணைப்பாளரான Neil Buhne மட்டுமே இதுகுறித்து பதிலளிப்பவராக இருந்தார். ஆனால், பொதுவாக ஐ.நா வின் மூத்த அதிகாரிகள் இது குறித்து பேசுவதிலிருந்து விலகியேயிருந்தனர்.

ஐ.நா வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரின் சிறப்பு தனிச் செயளர் விஜய் நம்பியாரின் கருத்திற்கு எதிரானதாக இருந்த போதிலும், மனித உரிமைகள் செயலாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் நம்பிக்கைக்குறிய தகவல்களை (அப்பொழுது சாவு எண்ணிக்கை 2,800) வெளியிடவேண்டுமென விரும்பினார். ஆனால், இத்தரவுகள் கொழும்பினுடனான உறவினை சீர் கெடுக்கும் என மனித உரிமைகள் செயலகத்தின் தொடர்பாளரான ஜான் ஹோல்ம்ஸ் கூறியிருந்தார்.

இறந்தவர் எண்ணிக்கை 20,000 ஐத் (இது ஒரு உத்தேசமான மதிப்பீடு) தொடலாம் என்ற நம்பிக்கை ஐ.நா அதிகாரியான விஜய் நம்பியாரிடம் தெரிவிக்கப் பட்டிருந்த போதும், இறுதித் தாக்குதல் வாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல், இந்த 7,700 என்ற எண் தொடர்ந்து அச்சு ஊடகத்தில் குறிப்பிடப்பட்டு வருகிறது.

துவக்கத்திலிருந்தே ஐ.நா இம்மோசமான சூழலை எதிர்பார்த்திருக்க வேண்டும்.

23 சனவரி 2009 அன்று, இரண்டு சர்வதேச உறுப்பினர் உட்பட 17 ஐ.நா ஊழியர்கள், பாதுகாப்புப் பிரதேசம் என அறிவிக்கப் பட்ட உடையார்காடு முகாமில் உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கை இராணுவம் அவ்விடத்தை குண்டுவீசி தாக்கியதில், பத்துக்கும் மேற்பட்டோர் பலியானர் எனக் குறிப்பிடுகின்றனர். மேலும், அருகிலிருந்த மருத்துவமனையில் பணியாற்றிய ஐ.நா வின் ஊழியர்கள், காயமடைந்த பெண்கள், உருக்குலைந்த, கருகிய மற்றும் உறுப்புகளிழந்த குழந்தைகளின் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

அடுத்தடுத்த வாரங்களில், போர்ப்பகுதிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட ஐ.நாவின் ஊழியர்களும், அரசு சாரா உதவிக்குழுக்களின் ஊழியர்களும், தொடர்ந்து ஐ.நாவின் அதிகாரிகளுக்குப் போர்நிலவரங்களை குறுஞ்செய்திகள் "SMS" மூலமாகத் தெரிவித்திருக்கின்றனர். இலங்கை இராணுவத்தினரால் குண்டு வீசப்பட்ட மருத்துவமனைகள் குறித்தும், நூற்றுக் கணக்கான இறந்தவர் பற்றியும், ஆயிரக்கணக்கான காயமடைந்தோர் பற்றியும் தொடர்ந்து போர்நிலவரம் பற்றி குறுஞ்செய்திகள் மூலம் தெரிவித்திருக்கின்றனர் அவ்வூழியர்கள்.

9 மார்ச் 2009 அன்று வந்த குறுஞ்செய்தி - "தயவு செய்து இலங்கை இராணுவத்தின் தாக்குதலை நிறுத்தச் சொல்லுங்கள்"

14 மார்ச் 2009 - "எங்கேயிருக்கிறது பாதுகாப்பு வலையம்"

இத்தனைக் குழப்பங்களுக்குமிடையே புலிகளின் பலவந்தமான ஆள் எடுப்பு நிகழ்வும் நடைபெற்றிருக்கிறது.

12 மார்ச் 2009 - " இரண்டு முகாம்களும் வதைக்கின்றன" " நாங்கள் இறந்து கொண்டிருக்கிறோம். பத்து மீட்டருக்கருகில் இரண்டு குண்டுகள் வீழ்ந்து வெடித்திருக்கிறது."

19 மார்ச் 2009 - "இளவயதினர் போர்களத்திற்குக் கொண்டு செல்லப் படுகின்றனர். என்ன செய்யப் போகிறது சர்வதேச சமூகம்"

21 மார்ச் 2009 - "தப்பிக்க முயன்ற நூற்றுக்கணக்கான மக்களைச் சில குண்டர்கள் தடுத்துச் சிறைபிடிக்கின்றனர். அவர்கள் வயது வித்தியாசமும், பாலின வித்தியாசமும் பாராமல், அவர்களைக் கம்புகளால் கடுமையாகத் தாக்குகின்றனர்." " ஏன் சர்வதேச சமூகம் அமைதி காக்கிறது?"

இக்கட்டான இச்சூழலில் ஐ.நா தனது "UNOSAT" பிரிவின் உதவியை நாடி, மக்கள் இடம்பெயர்வு குறித்து செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கோரியது. செயற்கைக்கோள் படங்கள் வான் வழித்தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங்களின் பயன்பாட்டால் விளைந்த 12 மீட்டர் விட்டம் கொண்ட குழிகளைக் கொண்டிருந்தன.

"ஐ.நாவின் தலைமையிடம், இலங்கை அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்த போதிலும், ஒரு நாள் கூட அங்கு கனரக ஆயுதங்களின் பாவிப்பு நிறுத்தப்படவில்லை," என ஒரு பிரதிநிதி தெரிவித்திருக்கிறார். ஐ.நா இவ்வாதாரங்களை தன் கைகளில் கொண்டிருந்தாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏப்ரல் மாதத்தின் இடைக்காலத்தில், ஐ.நா விற்கு விஜயம் செய்த விஜய் நம்பியார், "ஐ.நா இப்பிரச்சனையில் அடக்கி வாசிக்க வேண்டும்" என்றும் " இலங்கை அரசாங்கத்துடன் இணக்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயத்தில் பொதுமக்களினது இறப்புகளின் எண்ணிக்கையும் காயம்பட்டோரின் எண்ணிக்கையும் சில ஆயிரங்களைத் தொட்டுவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், கொழும்பு, போர்ப்பகுதிகளுக்கு மனிதநேய உதவிக்குழுக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஐ.நா அறிவித்தது. ஆனால், அப்படி ஒரு நிகழ்வை உலகம் காணவில்லை.

நியூயார்க்கிலிருந்து கொழும்பு வரையுள்ள ஐ.நாவின் மேல்மட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் பலருக்கு் அதிருப்தியளித்திருக்கிறது. "அவர்கள் ஒரு பாரிய மனிதப் படுகொலைக்குத் தயாராகிவிட்டிருந்தனர்" என்று ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். "பல மாதங்களாகப் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் யாரும் அரசாங்கத்தின் கதவுகளைத் தட்டவில்லை" என்று ஒரு மக்கள் ஊழியர் குறிப்பிட்டிருக்கிறார். அதேநேரம், உயர்மட்டத்தில் இல்லாத எந்தவொரு ஊழியரையும், நசுக்கவும், மிரட்டவும், அச்சுறுத்தவும், வெளியேற்றவும் இலங்கை அரசாங்கம் சிறிதும் தயங்கவேயில்லை.

மே 11 ஆம் தேதி, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக வந்த செய்தியை அடுத்து, கொழும்புவிற்கான ஐ.நா வின் பிரதிநிதியான திரு. Gordan Weiss இதனை இறுதியில் ஒரு "இரத்த வெள்ளம்" என்று குறிப்பிடுகிறார். உடனடியாக இலங்கை அரசாங்கம் இதற்கான விளக்கத்தினைக் கோருகிறது. பின்னர் அவ்வதிகாரி அக்குறிப்பினை கைவிடுகிறார். இச்செய்தி பற்றி BBCல் Amin Awad, எனும் அகதிகளுக்கான உயர் கமிஷனின் பிராந்திய அதிகாரி குறிப்பிடுகையில், இரண்டு தரப்புகளின் குற்றச்சாட்டுகளைப் பிரித்தறிவது கடினமான செயலாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

17 மே 2009 அரசாங்கம் தனது வெற்றிச் செய்தியினை அறிவித்ததை சந்தேகிக்கும் அல்ஜசீராவைச் சேர்ந்த திரு. Awad, அதற்கு காரணமாக, போர்ப்பகுதியிலிருந்த 20,000 மக்கள் வெளியேறினர் என்று அரசாங்கம் பின்னர் வெளியிட்ட செய்தியினை சுட்டிக் காட்டுகின்றார். மேலும், "இந்த அறிவிப்பானது அரசாங்கம் அங்கு குண்டுமழை பொழிவதற்கான முன் ஏற்பாடக கருதலாம்" என ஐ.நா வின் ஊழியர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

போரின் முடிவு, இருக்கும் பிரச்சனைகளின் முடிவல்ல. 3,00,000 க்கும் மேலான இடம்பெயர்ந்தோர் உள்ள முகாம்களில் அரசு சாரா உதவிக் குழுக்கள் (NGO) கடுமையான இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். "செய்து கொண்ட சமரசங்கள் போதும்" என்று பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கும், முகாம்களில் மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கும், முகாம்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கும், ஆவன செய்யாத ஐ.நா வை நோக்கி தன்னுடைய குற்றச்சாட்டினை வைக்கிறார் ஒரு NGO ஊழியர்.

மே 11 ஆம் தேதி, திரு.Neil Buhne, என்பவருக்கு 7 NGO க்கள் கூட்டாக எழுதிய கடிதத்தில், வடக்கில் Menik Farm எனும் முகாமில் ஐ.நா உதவியுடன் இலங்கை அரசாங்கம் செய்து வரும் போருக்குப் பின்னான புனரமைப்புப் பணிகளில், "ஏறத்தாழ நிரந்தரமாக மக்களை முகாம்களில் தங்க வைக்கும் திட்டமும்" முகாமைச் சுற்றி நிகழும் கட்டுமானச் செயல்களும் ஒரு நிரந்தரத் தங்குமுகாமிற்கான கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது என்று குறிப்பிடுகின்றனர். மேலும், "நம்முடைய செயல்கள் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களின் சுயமரியாதையும், சுதந்திரத்தையும் உறுதி செய்யும் முகமாக அமையவேண்டும்" என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

- Philippe Bolopion
************************************************************************************

செவ்வாய், 2 ஜூன், 2009

வருத்தத்தில் திமுக வினர்..

திமுக வினர் சிலர் வருந்த ஆரம்பித்திருப்பதாக கண்டதின் விளைவு...

அண்ணாவின் மறைவிற்கு பிறகு, நெடுஞ்செழியன், ஈவிகே சம்பத், அன்பழகன் போன்ற முன்னனித் தலைவர்களை ஓரம் கட்டி சித்து விளையாட்டுக்களின் மூலம் ஆட்சிக் கட்டிலை கருணா கைப்பற்றிய பொழுது வருந்தாத மனது,

கழகத்தை தனது குடும்பச் சொத்தாக மாற்றுவதற்கு தடையாக இருந்த கழகத் தலைவர்களை (எம் ஜி ஆர் போன்றோர்) வெளியே அனுப்பி கழகத்தை துண்டாடிய பொழுதுகளில் வருந்தித் துவழாத மனது,

மிசா கொண்டு வந்து கழகத்தின் அனைத்து பொருப்பிலிருந்தவர்களையும் சிறையில் தள்ளி அராஜகங்களை கட்டவிழ்த்துவிட்டு பலரையும் அங்ககீனப்படுத்திய இந்திராவுடன் அடுத்த வந்த தேர்தலில் கரம் கோர்த்த பொழுது வருந்தாத மனது,

காவிரி போன்ற உரிமைப் பிரச்சனைகளில் கூட அரசியல் ஆதாயத்திற்காக நடந்து கொண்ட பொழுதுகளில் கவலைப் படாத மனது, நமது மீனவர்கள் கடலில் சிங்கள இராணுவத்தினரால் கொடூரமான முறையில் அடிக்கடி தாக்கப்படுவதற்கு எந்தவித உபயோகமான நடவடிக்கைகளும் எடுக்காத பொழுதுகளில் கலங்காத மனது,

போர்வாள் என பல மேடைகளில் புகழ்ந்துவிட்டு இக்காட்டான சமயங்களில் உடனிருந்த வைகோ போன்றோர்களை துரோகப் பட்டம் கட்டி வெளியே அனுப்பிய பொழுதுகளில் கண்டும் காணாமலிருந்த மனது,

இராஜீவ் படுகொலை சம்பவத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் கழகப் பொருப்பாளர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டும் உடமைகள் சேதாரமாக்கப்பட்டும் இவை எல்லாவற்றிக்கும் மேலாக கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதினை அடுத்து வந்த தேர்தல்களில் மறந்துவிட்டு கூட்டணி அரசியலில் பதவி சுகம் கண்ட பொழுதுகளில் வருந்தாத மனது,

கழக உறுப்பினர்களை அடுத்தவர்கள் தாக்கிய காலம் போய், அஞ்சாநெஞ்சர்களே தா.கிருட்டிணன் போன்ற முன்னாள் அமைச்சர்களை மோட்சம் அடைய வைத்த பொழுதுகளில் மறைந்த போன மனது,

நீண்ட நெடுங்காலத்திற்கு பிறகு மாணவர்கள், திரைத்துறையினர், வழக்குறையர்கள் என பல்வேறு தரப்பினர்ர்டமிருந்தும் ஏகோபித்து கிளம்பிய இன உணர்வினை தனது வழமையான சாண நக்கியத்தனத்தினால், அரச அதிகாரத்தினைப் பயன்படுத்தி நீர்த்து போகச் செய்த பொழுதுகளில் வருந்தாத மனது,

தமிழ், தமிழர்கள் நலன், திராவிடம் பேசி வளர்ந்த கழகம் இன்று அவை அனைத்தையும் குழி தோண்டி புதைத்துவிட்டு குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தி கட்சியின் முக்கியஸ்தர்கள் ஓரம் கட்டப்பட்டு பதவி சுகத்துக்காக இத்தாலி காங்கிரஸிடம் அடிமைப்பட்ட அவலத்தினை நினைத்து கலங்காத மனது,

ஒரு பாரிய இனப்பேரழிவு இந்தியாவின் உதவி/ஆலோசனையின் பேரில் நடந்து முடிந்த பொழுது அச்செய்திகள் தமிழக மக்களுக்கு சென்றைடைய வண்ணம் ஊடக சதி விளையாட்டுக்கள் மற்றும் போர் நின்றுவிட்டாதாக தவறான அறிவிப்புகள் மூலம் அரசியல் ஆதாயத்தினை மட்டுமே முன்னிறுத்தி, தமிழகத்தில் எழுந்த உணர்வலைகளை அடக்கி, இனவழிப்பிற்கு துணைபோன பொழுதுகளில் வருந்தா மனது,

இதற்கெல்லாம் வருந்தா மனது, இப்பொழுது வருந்துகிறதாம்....

ஈழத்தில் நடந்தது உள்நாட்டுப் பிரச்சனை அதில் பிற நாடுகள் தலையிடத்தேவையில்லை என்னும் அற்புத தீர்ப்பினை இன்று ஐநா வழங்க மூல காரணமாயிருந்த இந்தியாவையும், ஆயிரக்காண சொந்தங்களையும் உறவுகளையும் நண்பர்களையும் உரிமைகளையும் நிலங்களையும் வீடுகளையும் இழந்தவர்களால் அதற்கு மூல காரணமாயிருந்த காங்கிரஸையும் அந்த அரசு நீடித்து நிலைத்திருக்கவும் தமிழகத்தில் எழுந்த உணர்வலையினை நீர்த்துப் போகச் செய்யவும் காரணமாயிருந்த தமிழக கருணாவினை வசை பாடுவதால் வருந்தத் தொடங்கியிருக்கின்றதாம்...

அடடா.. இதே நிலையில் சிந்தித்தால் இனி ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல தமிழ் இன உணர்வாலர்களும் இனி கருணாவினை மட்டுமல்ல இலங்கை அரசினை கூட தூற்றக் கூடாது. அவர்களும் தமிழர்களுக்கு ஏராளமாய் செய்துள்ளனர்...

கருணாநிதியினை என்ன சொல்லி அடுத்தவர்கள் அவமானப்படுத்த முயற்சித்தாலும், சில திமுக வினர் அளவிற்கு ஜெ வுடன் ஒப்பிட்டு அவமானபடுத்த விரும்பவில்லை... ஆனால், திமுக வினர் என கூறிக்கொண்டு பதிபவர்களே கருணா அதை செய்தார் ஜெ இதைக் கெடுத்தார் என கோமளவல்லியுடன் ஒப்பிட்டுக் கொண்டுள்ளனர்.... !!!!!!!!!!!! காலத்தின் கோலம் அவர்களின் எழுத்துக்களாலேயே கருணாவை ஜெ வுடன் ஒப்பிட வைத்துள்ளது... !!!!!!!!!!!

நயவஞ்சகத்தனத்தையும், கபட நாடகத்தையும் சுட்டிக் காட்டி குற்றம் சுமத்தும் அனைவரையும் ஜெ வின் ஆதரவாளர்கள் என காமெடி செய்வதை விடுத்து திமுக என்னும் இயக்கம் தளபதி ஸ்டாலின் சிந்தனையில் உதித்து கருணாநிதியினால் அழகிரியின் உதவியுடன் கட்டி அமைக்கப்பட்டது என்னும் அறிய உண்மையை தமிழக மக்களுக்கு சொல்லும் பணியில் செயல்பட்டால் எதிர்காலமாவது "வளமாக" இருக்கும்...

அதே சமயம் அண்ணா'விற்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தார் பெரியாருக்கு பகுத்தறிவினை புகட்டினார் எனவும் அங்காங்கே சேர்த்துக் கொள்ளலாம்... யார் கேட்கப் போகின்றார்கள்...

வருத்தப்பட்ட மனங்கள் நிவாரணமாவது பெறும்....



திங்கள், 1 ஜூன், 2009

துக்கம் சுமந்த வரிகள்..


நடந்து முடிந்த மனிதப் பேரவலத்தை பற்றி ஏராளமான விவாதங்கள். எது சரி, எவரின் மேல் குற்றம், எப்படி இதனை தவிர்த்திருக்கலாம் என அலசும் ஆய்வுக் கட்டுரைகள். இதிலே திடீர் அகிம்சை காதலர்களும், அவர்களின் இந்தியா காந்தியால் தான் சுதந்திரம் பெற்றது போன்ற அறிய ஆய்வுக் கண்டுபிடிப்புகளும் வெந்த புண்ணில் வேலை காய வைத்து சொருகுபவை. அவர்களுக்கு ஆதரவு தரும் வலையுலகத் தொண்டர்களின் ஜால்ரா சத்தம், இது தொடர்பான விவாதங்களை தவிர்க்கவே சொல்கின்றது.

இந்த நிலையில், எழுத்தாளர் திரு எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் பதிலற்ற மின்னஞ்சல்கள் என்னும் தலைப்பில் இன்று வெளியிட்டுள்ள பதிவானது நடந்து முடிந்த இந்த பேரவலத்தை அவரின் எளிய வலிநிறைந்த வரிகளினால் முகத்தில் அறையும் படி விபரிக்கும் அதே வேளையில் "சில அறிவாளி" எழுத்தாளர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் சேர்த்தே பதிலளிக்கின்றது.


அவரின் மொத்த பதிவையும் பதிக்க விருப்பமில்லை... ஆகையால், சில முக்கிய வரிகள் மட்டும் இங்கே..

அகிம்சை, இந்தியா காந்தியின் சத்தியாகிரத்தினால் தான் சுதந்திரம் பெற்றது என்னும் அறிவியல் ஆய்வாளர்களுக்கு,

ரத்தம் சிந்தாமல் எந்த சமூகமும் மாறியதில்லை என்பதே வரலாறு திரும்ப திரும்ப சொல்லும் உண்மை. காந்தி வழியில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்ற பள்ளிபாட சரித்திரம் உண்மையில்லை என்பதை இந்த சுதந்திர போரில் வெள்ளையர்களால் அடிபட்டும் வன்கொலைக்கு உள்ளாகியும் இறந்தவர்களின் எலும்புகள் என்றும் சொல்லும்.

நான் வன்முறையை வளர்க்க சொல்லவில்லை. ஆனால் வன்முறை என்பது ஆயுதங்கள் ஏந்தி போரிடுவது மட்டுமில்லை. அதிகாரம் மேற்கொள்ளும் அத்தனை செயல்களிலும் வன்முறை பீறிட்டுக் கொண்டுதானே இருக்கிறது.


ஊடகங்களை தமது கைகளில் வைத்துக் கொண்டு சிலர் போடும் ஆட்டம், மக்களின் கவனத்தை திருப்ப அல்லது ஈழம் சார்ந்த செய்திகள் தமிழக/இந்திய மக்களுக்கு சென்று சேராமல் ஊடக முதலாளிகள்/ரவுடிகள் (இவர்கள் செய்தியாளர்கள் என்னும் சொல்லுக்கு தகுதியற்றவர்கள்) திட்டமிட்டு செய்யும் சதி, மற்றும் அவர்களின் அண்மைய போக்கு பற்றி


பிரபாகரன் உயிரோடு இல்லை. அவர் கொல்லபட்டுவிட்டார் என்ற செய்தியை (வதந்தியை) எதற்காக இத்தனை உற்சாகமாக ஊடகங்கள் கொண்டாடுகின்றன. என்ன வெறுப்பு அது. ஈழமக்களின் கடைசி யுத்தம் முறியடிக்கபட்டுவிட்டது என்பதை பொதுவெளிகள் ஏன் களிப்போடு பேசி கதைக்கின்றன.

ஒரு இனம் தன் வாழ்வுரிமை மறுக்கபட்டு ஒடுக்கபட்டதை கொண்டாட முடியும் மனிதர்களோடு எதற்காக எழுத்து படிப்பு இலக்கியம் என்று வீணடிக்கிறோம் என்று ஆத்திரம் வருகிறது.

.

.

வரலாற்றில் இத்தனை பெரிய இனப்படுக்கொலையை நிகழ்த்திவிட்டு அதை மூடிமறைத்து கொண்டாடும் தேசத்தை, அதை நியாயப்படுத்தும் மனிதர்களை காணும் போது அரசியல் அறிவை மீறி உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கிறது. கோபமும் இயலாமையும் எழுகின்றது.

உயிரோடு இருப்பதற்காக வெட்கபடுகிறேன்.

இது சொற்கள் அல்ல. ஒடுங்கி நிற்கும் இனத்தின் மனசாட்சியின் முணுமுணுப்பு. என்மீது படிந்த அழியாக்கறை.

மனசாட்சியும் மனிதமும் கொண்ட ஒரு எழுத்தாளரின் வார்த்தைகள்....

நடந்து முடிந்த சம்பவங்களையொட்டி என் மனதில் தோன்றியவைகளை எஸ். இரா அவர்களின் வார்தைகளில் கண்டெடுத்தேன்...

முழுக் கட்டுரையையும் வாசிக்க http://www.sramakrishnan.com/view.asp?id=269&PS=




செவ்வாய், 19 மே, 2009

நம்பிக்கை களம் காத்தவர்களுக்கு....

தமிழ் என்னும் சொல்லுக்கு அடுத்தபடியாக உலகம் முழுதும் இருக்கும் உணர்வுள்ள தமிழர்களை உங்களது வீரத்தாலும் தியாகத்தாலும் இணைத்தவர்களே...

இனவாதத் தேசத்தில் ஒடுக்கப்பட்ட எம் இனத்தின் காவற்காரர்களாய் நின்று நம்பிக்கை களம் காத்தவர்களே...

லட்சக்கணக்கில் அப்பாவிகள் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட பொழுதுகளில் வாய்மூடிக் கிடந்தவர்களெல்லாம் இன்று உங்கள் மரணத்தைக் கூட வேடங்களிட்டு விற்றுத் தீர்க்கின்றனர்.. மாவீரர்களுக்கு மரணமில்லை என்னும் உண்மையை சில சமயம் கண்ணீர்த்திரை மறைக்கின்றது.

மயானமாகிவிட்ட நிலங்களில் புகைமண்டலத்தின் நடுவே உயரும் சிங்க கொடியில் சரிகின்றன எமது ஆசைகள்... அகோரப் பசி கொண்ட யுத்தத்தின் வடுக்கள் மனதை ஒரு நிலைகொள்ளாது அலைக்கழிக்கின்றன... உங்களது வெற்றியில் இறுமாந்திருந்த காலங்களைப் போல இந்த அவல நிலையும் விரைவில் கடந்து போகட்டும்...


பத்து தலைமுறைக்கும் மேல் சொத்து சேர்க்க துடிக்கும் எமது ஈனத் தலைமைகளுக்கோ அவர்தம் தொண்டரடிப் பொடியார்கோ ஒரு போதும் விளங்கப் போவதில்லை உங்களது வீரம் செறிந்த அந்த மானம் காக்கும் அறப்போர்.

சொகுசு வாழ்க்கை, புலிப்பாசிசம், முக்கியத் தலைவர்கள் களத்தில் இல்லை, ஓடி ஒளிந்து கொண்டார்கள், பிள்ளைகள் வெளிநாட்டில் என கூவித் திரிந்த இணையப் போராளிகள் இனி வேறு காரணங்களை தேடலாம்.

தேடட்டும்...

ஆயினுமென்ன, தமிழனை உலகிற்கு அடையாளப்படுத்தவும், அவன் சுயமரியாதையுடனும், தனக்கென ஒரு சொந்த நாட்டிலும் வாழவேண்டும் என ஆசைப்பட்டு ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்து உரிமைப் போர் புரிந்த சுயமரியாதை வீரர்களும் அவர்தம் தளபதியார்களும் என்றும் நினைவில் நிறுத்தப்படுவர்.....

இலங்கை என்னும் பவுத்த சிங்கள இனவெறி முகமூடி அணிந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஈரான் என நீங்கள் களத்தில் எதிர்கொண்ட எதிரிகளும் துரோகிகளும் தான் எத்தனை எத்தனை?

எத்தனை ஆயிரம் எதிரிகள் வந்தபோதிலும், தமிழ்மக்களின் நலனுக்காகவும் அவர்தம் விடுதலைக்காகவும் கொண்ட கொள்கையில் இருந்து கடைசிவரை மாறது போரிட்டு மடிந்த அனைவருக்கும் வீரவணக்கங்கள்.... யுத்தம் தின்று செரித்த எமது மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்....

உங்களைத் தவிர வேறு யாரைச் சொல்வோம் மாவீரர்கள் என....

சனி, 9 மே, 2009

ஈழப் பிரச்சனை - உடன்பிறப்புகள் நன்றி சொல்ல வேண்டும்: தினமணி



இதுல குறிப்பிட்டு இருக்குறது சமீபத்திய சாதனைகள் தான், ஆகையால், காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பே வைத்த ஆப்பால் அனுதாப ஓட்டு திரட்டிக் கொண்டிடுக்கும் உடன்பிறப்புகள் சோர்ந்து விடவேண்டாம்.

60 ஆண்டுகளா கடுமையான பொது வாழ்க்கையாலும், தமிழுக்கு உழைத்து உழைத்தே (அந்த அளவுக்கு தமிழ் மோசமா இருந்தது பாருங்க) ஓடாய் போய், உலக பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடித்தது, காவிரி, முல்லை பெரியார், கச்சத்தீவு என அனைத்து பிரச்சனைகளிலும் ஆரம்பம் முதல் இன்று வரை உழைத்தது, பாலாறு பிரச்சனையை தொடங்கியது, தமிழக மீனவர்களுக்காக அயராது உழைத்தது போன்ற சாதனைகளை தினமணி அடுக்காததை நினைத்து ஆவேசப்பட வேண்டாம்...

அவங்களும் என்ன தான் செய்வார்கள்... ஒரு கருத்துப்படத்துல இவ்வளவு தான் சேர்க்க முடியும்...

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

மழை விட்டும் தூவானம் தொடர்வது....

நேற்று வெற்றிகரமாக ஜெயவர்த்தனே சமாதியில் நடந்து முடிந்த ராஜபக்சே உண்ணாவிரதத்தை உணர்ச்சிகரமாக வெளியிட்டிருந்தோம் . இன்று அதன் தொடர்ச்சி..

1/4 மணி நேர உண்ணாவிரதத்தில் முக்கால் வாசி உலகை மிரட்டிய ராஜபக்சே உண்ணாவிரத நோக்கம் நிறைவேறியதாக தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து வெளிவரும் ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில் BBC மற்றும் இலங்கை செய்தி நிறுவனங்கள் வேறு மாதிரி பொய் தகவல்கள் வெளியிட்டு ராஜபக்சே மேலுள்ள வெறுப்பை தீர்த்துக் கொண்டன..

அதே சமயம், திடீர் தமிழாதரவாளரான ரணிலின் மேடைப் பேச்சு அட்டகாசங்களும் எல்லை மீறி வருவதாக தமிழக செய்திகள் கட்டியம் கூறுகின்றன..

இந்நிலையில், நேற்றைய தனது கொடூர உண்ணாவிரதம் ஏற்படுத்திய விளைவுகளைப் பற்றி ஈனத் தலைவர் தனது வழக்கமான பாணியில் அறிக்கை வெளியிட்டுள்ளார்...

அதில், "எனது உண்ணாவிரதப் போராட்டம், எனக்கு முழு திருப்தியை அளித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்..

அதே சமயம், மழை விட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். அதைப் போலத்தான் இலங்கையில் இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும் எனவும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்...

இதுவரை இலங்கை இராணுவப் பேச்சாளர், இராணுவத் தளபதி, கோத்தபாய கூட தெரிவிக்காத கருத்தை ராஜபக்சே தெரிவித்துள்ளதால் அவர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக நமது கொழும்பு நிருபர் தெரிவிக்கின்றார்..

இதே பாணியில் போனால், அங்கு இருக்கும் சொற்ப ஜனங்களும் சாக மறுப்பதினால் தான் அவர்கள் கொல்லப்படுகின்றார்கள் எனவும் அவர்கள் திருப்பி தாக்காமல் அமைதியாக சாகும் பட்சத்தில் விமான பீரங்கிக் குண்டு சேதாரம் ஏற்படாது என ஈனத் தலைவரிடமிருந்து அடுத்த அறிக்கை வந்தால் ஆச்சரியப் படுவதற்கு இல்லை..

இந்த நிலையில், ராஜபக்சே மற்றும் ரணிலின் அறிக்கை அட்டகாசம் தாங்காத மக்கள் தேர்தல் தேதியை முன்கூட்டியே வைக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்தை இன்று முதல் முற்றுகைப் போரட்டத்தின் மூலம் முடக்க போவதாக வந்துள்ள செய்திகளையடுத்து அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.

ராஜபக்சே பக்தர்களிடம் ஒரு சின்ன சந்தேகம்... நீங்க எப்படியும் இதுக்கு ஒரு சப்பக்கட்டு கட்டி பதிவு போடப் போறீங்க.. அதைவிடுங்க.. இப்படியே போனால், உங்க ஈனத் தலைவர், அங்க போட்ட குண்டுகளினால் வந்த பொருளாதர இழப்பிற்கு ஈழத்தமிழர்கள் நஸ்ட ஈடு கொடுக்கனும்னு ஒரு அறிக்கை விட்டால் ஆச்சரியப்படுறதுக்கு ஒன்னும் இல்லை.. அதுக்கு தயார ஒரு பதிவு ரெடி பண்ணி draft'ல போட்டு வைச்சு இருக்கீங்களா?

ஏய்.. சைலன்ஸ்.. பேசிகிட்டு இருக்கோம்ல.. யாரு அது, தமிழ், இனமானம், மனிதம், உரிமை, திராவிடம்னு கூச்சல் போட்டுகிட்டு...





திங்கள், 27 ஏப்ரல், 2009

போரை நிறுத்தக் கோரி ராஜபக்சே சோனியா உண்ணாவிரதம்

போர் நிறுத்தம் கோரி ஜெயவர்தனே சமாதியில் ராஜபச்சே உண்ணாவிரதம் !!

இலங்கையின் வடபகுதியில் நடைபெற்று வரும் போரில் சாதரண பொதுமக்கள் படும் அவதியை கண்டு மனம் நொந்த ராஜபக்சே தான் நடத்திய பந்த் நாடகம் வெற்றி பெறாததால் மனம் வெதும்பி போய் இன்று அதிகாலையில் ஜெயவர்தனே சமாதிக்கு தனிமையில் சென்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார்..

இச் செய்தியினை கேள்விப்பட்ட சோனியா உடனடியாக தனிவிமானம் மூலம் கொழும்பு விரந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளார்... ஆனால், இவர்கள் யாரிடம் இந்த கோரிக்கையினை வைத்து உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர் என்பது அவர்களுக்காவது தெரியுமா என்பது சந்தேகமே..

சமீபத்திய ரணில்விக்கிரமசிங்கேயின் திடீர் தமிழ்காவலர் அடையாளத்தினாலும், நாடக மேடைப் பேச்சுக்களினாலும் கலவரப்பட்டு இன்று வரை பேதி புடுங்கிக் கொண்டிருந்த ராஜபக்ச கட்சியின் அடிப்பொடிகள் இன்று அதிகாலை முதலே தமிழினத்தைக் காக்க தங்கள் தலைவனை விட்டால் யாரும் இல்லையெனும் வழக்கமான பழைய மொக்கை கடையை பதிவுலகில் விரித்துள்ளனர்.

ராஜபக்சே சோனியா கூட்டணி உண்ணாவிரதத்தால் கதிகலங்கிப் போன இலங்கை இராணுவம் போர் நிறுத்தம் அறிவித்திருப்பதாக அவர்களே அறிவித்துக் கொண்டு உண்ணாவிரத்ததை முடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன..

இதனிடையே சிலர் போர் நிறுத்தம் அறிவித்திருப்பதாக கிளப்பிவிட்ட வதந்திக்கும் தமிழ் மக்களின் மேல் நடக்கும் இனவழிப்பு தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை என தெரியவத்துள்ளனர்...

Military spokesman Udaya Nanayakkara speaking to the Daily Mirror ascertained that the government has not declared a ceasefire. He clarified that only the use of heavy weapons and combat aircraft will be halted. His comment came after some International Media claimed that Sri Lanka has declared a ceasefire with the LTTE.

Sri Lanka army 'to stop shelling'

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8020048.stm


இதனால் ராஜபக்சே சோனியா கூட்டணி திரும்பவும் உண்ணாவிரதத்தை தொடருமா எனத் தெரியதா நிலையில் பதிவுலகில் அவர்களின் அல்லக்கைகளின் அட்டகாசம் எல்லை மீறி நடந்துகொண்டிருப்பதாக தமிழ்மணச் செய்திகள் குறிப்பிடுகின்றன...

*******************************************
ராஜபக்சே: இன்னமுமா இந்த ஊர் நம்பலை நம்புது?

அடிப்பொடி: அது அவங்க தலையெழுத்து மொதலாளி.. ஆனா, நீங்க உண்ணாவிரத்ததை இப்படி பாதியில முடிச்சு நம்ம டிவி கம்பெனி பொழப்புல மண்ண போடுவீங்கன்னு எதிர்பார்க்கலை...

*******************************************


ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

கிரிக்கெட்டில் மட்டுமே தேசியத்தை உணரும் 'இந்தி'யர்கள் - ஸக்கரியா

சுதந்திரம், தேசியம் மற்றும் 60 ஆண்டுகால(ம் மட்டுமேயான) 'இந்தி'ய வரலாற்றைப் பற்றி கேரளத்து எழுத்தாளர் பால் ஸக்காரியாவுடன் சோபாவாரியர் கண்ட நேர்காணலை ரெடீப் இணையதளம் வெளியிட்டிருந்தது. சாகித்திய அகாடமி விருது பெற்ற பால் ஸக்காரியா கேரளாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இந்த நேர்காணல் பல எல்லைகளைத் தொட்டுச் செல்கின்றது.

சுதந்திரம், காங்கிரஸ், நேருகுடும்ப அரசியல், தேசியம், மதம், இடதுசாரி, பிஜேபி, நடுத்தர வர்க்கம் பற்றியும் கடந்த 60 ஆண்டுகாலத்தில் என்ன நடந்தது, எங்கு தவறு நிகழ்ந்திருக்க கூடும் எனவும் நீள்கின்றது அவரது முற்போக்கான சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள். உண்மையிலேயே நேரம் ஒதுக்கி, அவசியம் படிக்கப் பட வேண்டிய ஒன்று அவருடை இந்த நேர்காணல். முடிந்த அளவு அதனை ரெடீப் இணையதளத்திலுள்ள
ஆங்கில இணைப்பின் மூலம் படிக்க முயலுங்கள் இது நான்கு பக்கத்தில் உள்ளதால், மறக்காமல் Paul Zacharia, continued என்பதனை ஒவ்வொரு வலைப்பக்கத்தின் கீழேயும் சொடுக்கவும். பல குப்பை தகவல்களை வெளியிடும் ரெடீப் இணையதளத்தில் இது வரை படித்ததில் மிக அருமையானதொரு செவ்வியாக இதனைக் கருதுகின்றேன். அவருடை கவனிக்கத் தகுந்த இந்த நேர்காணலை முழுவதுமாய் தமிழில் ஒருவர் மொழிமாற்றம் செய்து வலையேற்றியுள்ளார். அதனை கீழ்வரும் இணைப்புகளில் காணலாம். இந்த செவ்வியின் தமிழாக்கம் அவ்வளவு உணர்வுபூர்வமாய் இல்லையென நான் கருதுகின்றேன் (இந்த தமிழாக்கத்தைப் பற்றிய என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.)

http://www.writercsk.com/2009/03/blog-post_11.html
http://www.writercsk.com/2009/03/2.html
http://www.writercsk.com/2009/03/3.html
http://www.writercsk.com/2009/03/4.html

சிறுபிராயத்தில் பள்ளியில் கழித்த நாட்களை தவிர தான் ஒரு போதும் ஒரு சுதந்திர நாட்டில் இருந்ததாக உணரவில்லை என ஆரம்பிக்கும் இந்த நேர்காணாலில் எனக்கு பிடித்தமான சில வரிகளை மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

சுதந்திரம்..

Freedom is a highly relative term. It is actually freedom for some and not for all. Apparently even today people are talking about freedom from the British. That we won freedom from the British doesn't mean a damn thing to me. I think freedom means a lot of other things; it means justice, it means an end to poverty and three square meals a day. It means the freedom for a woman to walk alone on the streets at night, it means the freedom to educate your children. Merely because a set of white administrators have gone away and another set of similar administrators have come back does not mean that we are free.

Is looting by the British and looting by Indian politicians different?

That way, yes, it really makes no difference. Perhaps the British would have provided better administration; certainly a more impartial, more organised and management-oriented administrative system that what our present babujis are providing us. So, for the poor people it really wouldn't have mattered. But freedom from foreign rule is a long term question. In the end, if you are fast enough like Indonesia or some other countries, you will be able to reap the benefits of freedom quickly. If you are a lethargic and backward nation like India, the process will go on for another two centuries.

காந்தியின் கனவு - இந்தியா

Mahatma Gandhi's creation of the Indian nation


Because he was a good man, Gandhiji imagined that everybody would be like him: patriotic and unselfish. So he dreamt of a nation partly because there was no nation. When he was asking for freedom, whose freedom was he asking for? There was no India. There was only a set of kingdoms and some British-ruled administrative units. So, he had to first of all create an India and then say that this India wanted freedom.

His thinking went into creating a nation which according to him was an ideal India, swarajya, Hindu swarajya or Ram Rajya or whatever. This had validity as far as fighting for freedom was concerned. Afterwards, another set of realities came in. Poor Gandhi, in one sense, did his job by using this national concept to bargain with the British.

உண்மையில் இந்தியா என்று ஒரு தேசம் இல்லை.


Why isn't anybody working for a stronger and more prosperous nation that Gandhi spoke of because there really is no nation.
The Indian citizen is not committed to a nation except when they have a stupid cricket match with Pakistan. You also talk about a nation when you have a war with China. Rest of the time, each Indian citizen is tied to himself. That is why I said, the concept of nationhood is fundamentally flawed somewhere.

We have failed somewhere to get this idea of nationhood into the heart of people, as something you love.

Rajiv Gandhi

He was a moron. I don't think he would have reached anywhere. He was mobbed because he looked rather nice and young.

Narasimha Rao's regime

I don't think Narasimha Rao's regime was more corrupt than the earlier regime. He was made a special victim and a scapegoat because he was from a certain region of the country and he did not represent the traditional ruling class that had operated from the North. But unconsciously or otherwise, he messed up the Babri Masjid issue. We don't know the details why he allowed the masjid to be pulled down -- whether his RSS past stuck to him and he was not able to wriggle out. Or when the crisis came, he had to close his eyes and allow the structure to be pulled down, or it is some other circumstance which made him do that. I think this will stand out as the main crime in his time.

இந்தியா என்றொரு தேசம் இருந்ததா?

Where is the question of division? Who divided us? Nobody divided us. Where was India? Which nation are we were talking about? Can you point to me a nation that existed before the British came? There was a Mauryan empire and a Gupta empire, a Mughal empire. There was a Pandian empire and a Chola empire, there were lots of kingdoms. I am not aware of any nation called India.

மதம் சார்ந்த அரசியலும் பிஜேபியும்

I am against any theocratic state, I am against any role religion tries to play in public affairs. I don't think organised religion has any reason to exist at all. Ultimately if you are a believer in God and if God happens to exist, then it is something very private between you and God. You can't impose that stupid belief on tens of thousands of people and say that you also believe what I believe. It's all rubbish.


மதம் மட்டுமே தேசத்தை நிர்மாணிப்பதில்லை

Christianity could not hold Europe together. All of them are Christians but a German will be a German and an Italian will be an Italian and the French will be French. You cannot have a single nation operating on religion.



******************************************************************************

சுதந்திரத்தைப் பற்றி இப்பொழுது இவர் கூறுவதைத் தான் 62 ஆண்டுகளுக்கு முன்பு பெரியாரும் தெரிவித்தார்....

ராஜீவ் காந்தியைப் பற்றி He was a moron. I don't think he would have reached anywhere. ஆனால், என்னமோ அது ஒரு இந்தியாவின் எதிர்கால நம்பிக்கையா இருந்ததுனு இணையத்துல இன்னமும் சிலர் ஜல்லி அடிச்சுட்டு திரியுறாங்க?

நரசிம்ம ராவின் ஆட்சி பொருப்பேற்பின் போது மன்னராட்சி போல் இருந்த கால கட்டத்தில் சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியதாக சொல்கின்றார்.

இந்தியன் என்ற உணர்வு ஒருவருக்கும் இல்லைனு சொல்லுறாரு !!!!!!!

சந்தேகம் 1: தமிழ் பேசும் ஒருவர் இதை ஒத்த கருத்துக்களைக் கொண்டிருந்தால் தமிழ்த்தீவிரவாதி என நாமகரணமிடும் தேசியவியாதிகள் மற்றும் அவர்களின் அல்லக்கைகள் இவரை மலையாளத் தீவிரவாதி என அழைக்கின்ரனரா?

சந்தேகம் 2: வெளிநாட்டிலிருந்து ஒருவர் இது போன்ற கருத்துக்களை தெரிவித்தால் பாஸ்போர்ட் ஒப்படைப்பதை பற்றி கூவும் அனானிகள் மற்றும் இந்திய கடவுச்சீட்டு முகவர்கள் இவரைப் போன்றவர்களை எல்லாம் வேறு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புமா?
******************************************************************************

வியாழன், 23 ஏப்ரல், 2009

"இந்தி"யர் என்று பெருமிதம் கொள்வோம்....

"இந்தி"யன் என்று பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல படுகொலைகள் புரிவோம்
சக மனிதர்களின் பிணத்தின் மேல் நின்று
அகிம்சைக்கு பெயர் போனவர்கள் என்றுஅடிக்கடி புழுகுவோம்
காஸ்மீரில் தொடங்கி வடகிழக்கு மாநிலங்களில் வழிந்து
ஈழத்து குழந்தையின் குருதியில் தெரிக்கும் காந்தி தேசத்தின் அகிம்சையில்

மக்களாட்சியில் தான் இருப்பதாய் நினைவூட்டிக் கொள்வோம்"இந்தி"யன் என்று பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல படுகொலைகள் புரிவோம்.....

வியாழன், 26 மார்ச், 2009

இந்தியாவுக்கு குறைந்த செலவில் தொலைபேசனுமா?

வெளிநாடுகளில் இருக்கும் நம் மக்கள் பெரும்பான்மையான நேரத்தையும், தாரளமாக காசையும் செலவு செய்வது நம்ம ஊருக்கு தொலைபேசவே.

நண்பர்கள் சிலர் சொன்னதாலும் பதிவுலகில் யாரோ எழுதியிருந்ததாலும், சில தனியார் நிறுவனங்களின் voip வசதியை பயன்படுத்த முடிவெடுத்தேன். Freecall என்னும் சேவை வசதி சற்றே தரமாகவும் விலை குறைவாகவும் இருப்பதாக கருதி அதில் ஒரு கணக்கை துவக்கி அதன் மூலம் நம்ம ஊருக்கும், வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்களுடனும் மணிக்கணக்கில் பேசிவந்தேன்.

இந்த சேவை ஒழுங்காக இயங்கும் பொழுது, இச்சேவையை வழங்கும் நிறுவனத்தைப் பற்றியோ அல்லது அவர்களின் நம்பகத்தன்மை பற்றியோ சந்தேகமே வந்ததில்லை. (எங்க, நமக்கு தான் மணிக்கணக்குல போன் பேச இல்லாட்டி பிளாக், ஓர்குட்'ல ஆராய்ச்சி பண்ணவே நேரம் இல்லையே !!!)

ஒரு சில மாதங்களுக்கு முன்பு கடன் அட்டை வழியாக பணம் செலுத்தும் வசதி நின்றபொழுதும் எதுவும் உறைக்கவில்லை (போன் பேசுற மப்பு !!!). வழக்கமான முறையில் வங்கி வழியாக பணம் செலுத்தும் முறையில் பணத்தை அனுப்பி விட்டு, இதே முறையை பின்பற்றும் படி பல நண்பர்களும் பரிந்துரைத்தேன். ஒரு இனிய மாலைப் பொழுதில் வேலை செய்யுறது சுத்தமா நின்னுடுச்சி. பல நண்பர்களுக்கும் தான்... ஆனாலும் இன்னமும் சில பேருக்கு இந்த வசதி வேலை செய்யுது.

நிதானமா, இவனுங்க யாருன்னு பார்த்தால், அந்த தனியார் நிறுவனம் Betamax. நம்ம கூகுல் ஆண்டவோர உதவியோட தேடிப் பார்த்தா பல விசயங்கள் வெளிவருது.

1) முகவரி:
Betamax GmbH & Co KG
Im Mediapark 8
50670 Köln
Germany

ஆனால், இங்க போய் பார்த்துட்டு நம்ம நண்பர்கள் அப்படி ஒரு நிறுவனமே இல்லைனு உறுதிப்படுத்திட்டாங்க !!!! :)

2) இவர்கள், கடனட்டையிலுள்ள ரகசிய குறியீட்டு எண்களைப் பயன்படுத்தி உபயோகிபாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து கையாடல் செய்துள்ளதாக புகார் உள்ளதாம்.

இது போல ஏராளமான பாரட்டுப் பத்திரங்களை இங்கு சென்றால் நீங்கள் வாசிக்கலாம்.

http://forum.voxalot.com/voip-news/2768-betamax-accused-fraud-2.html

3) இந்த நல்லவனுங்க கொடுத்திருக்கும் தொலைபேசி எண்ணின் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ இவர்களை தொடர்புகொள்ள முடியவே முடியாது.
ஒருத்தர் எப்படி பொலம்பறாருன்னு பாருங்க.

We have already sent 100 Emails to BETAMAX n 100 calls to BETAMAX no one answer this is really cheating/fraud. I know my friend he also went to the main office of BETAMAX im Mediapark 8 Köln,but there is no Office of BETAMAX..

4) அதே சமயம் இந்த நிறுவனத்தார் இது போன்ற பல பெயரில் தங்களின் சேவை வசதியினை(!!!!!) அளிக்கின்றனர். அவற்றில் என்னால் கண்டுபிடிக்க இயன்றவற்றில் சில

1) LowRateVoip
2) justvoip
3) Freecall
4) VoipCheap
5) VoipStunt
6) VoipBuster
7) 12Voip
8) VoipWise
9) VoipRaider
10) VoipDiscount
11) Nonoh
12) Intervoip
13) Dialnow
14) Calleasy

இனியும் இருக்கலாம்.... தெரிந்தவர்கள் தயவு செய்து பகிர்ந்துகொள்ளவும்..

இது போன்ற voip சேவைகளை பயன்படுத்தும் முன் கவனமாக இருக்க சில யோசனைகள் (இனிமேல் நான் யோசனை சொல்லலாம் !!!)

1) உங்கள் கணக்கினை துவக்கும் முன் அந்த சேவை BETAMAX நிறுவனத்தாரால் வழங்கப்படவில்லையென உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

2) நேரடியாக கடனட்டை தகவல்களை இவர்களிடம் தருவதிற்கு பதிலாக PayPal, UKash போன்ற அமைப்புகளின் மூலம் பணம் செலுத்த முயலுங்கள்.

3) இவர்களிடம் போய் சேரும் பணத்திற்கு ஒருவழிப்பாதை மட்டுமே தெரியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, குறைந்த அளவே பணம் கட்டும் வாய்ப்பினை தேர்வு செய்யுங்கள். (என்னைப் போல் 10 €, 25 € கட்ட சோம்போறித்தனப் பட்டுக் கொண்டு 50, 100 € என கட்ட முயலவேண்டாம்) !!!! பிறகு புலம்புவதை தவிர்க்கலாம்.

நம்ம பதிவர்கள் சிலருக்கும் இந்த அனுபவம் இருக்குது (உபயம்: அடியேனே !!!!! )

புதன், 18 மார்ச், 2009

ஈழம் - இணைய முன்னெடுப்புகள், அந்நிய படைகள், மற்றவை

உலகின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தேசங்கள் தோரும் வீதிகளில் இறங்கி உணர்வுள்ள தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்கா அல்லது மூன்றாவது நாடொன்று வன்னியில் இறங்கி அங்கிருக்கும் மக்களை வெளியேற்றப் போவதாக கசிந்த செய்திகளை அடுத்து அது சம்பந்தமான பரப்புரைகளை இரண்டு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் எண்ணம் இன்னமும் மூன்றாம் உலக நாடுகளுக்கு இருப்பதாகவே என்ன தோன்றுகின்றது.



1) இலங்கையில் சமத்துவம் மற்றும் மறுவாழ்வுக்கான மக்கள் அமைப்பு People for Equality And Relief in Lanka - PEARL ஈழப் போராட்டம் தொடர்பாகவும் அங்கு ஏற்பட்டுள்ள மனித அவலத்தைப் பரப்ப எடுத்து வரும் முயற்சிகளை அவர்களின் இணையபக்கத்தின் மூலம் அறியலாம். அமெரிக்கா வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து போராட்டங்கள் நடத்துவதிலும் இலங்கையின் போர்க் குற்றங்களை அமெரிக்க ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


அமெரிக்கா பொது மக்களிடமும் அங்கு இருக்கும் ஊடகங்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், வன்னிப் பகுதியிலிருந்து மக்களை அமெரிக்கா தலைமையில் வெளியேற்றும் நடவடிக்கையை செயல் இழக்கச் செய்யமுடியும் என எண்ணும் இவர்கள் அது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட்'ல் 1/4 பக்க விளம்பரத்திற்கு தேவையான $13,000 தொகையினை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த முயற்சிக்கு உதவ விரும்புவோர் அவர்களின் இணையபக்கத்திற்கு சென்று உதவ முயலுங்கள்.



2) அதே சமயம், ஒபாமாவுக்கான தமிழர்கள் - Tamils for Obama அமைப்பானது, வன்னியிலுள்ள தமிழர்களின் நிலை பற்றியும் அங்கு ஏற்படத்தப் பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றியும் ஒரு கருத்துக்கணிப்பினை நடத்துகின்றது. ஒருசமயம் வெளி நாட்டுப் படைகள் உள்நுழைந்தால் அவைகளின் பணி என்னவாக இருக்க வேண்டும் என்னும் நோக்கில் இது அமைந்துள்ளது.


தமிழில் : www.tamilsforobama.com/Polling/Tamil_letter.html


ஆங்கிலத்தில் : http://www.tamilsforobama.com/polling/poll.asp



இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்து கொள்வது மிக எளிதான ஒன்று.



3) சர்வதேச நிதிக் கண்காணிப்பு அமைப்பிற்கு - International Monetary Fund இலங்கை அரசிற்கு கடனுதவி வழங்க இருப்பதை நிறுத்த வேண்டி ஒரு விண்ணப்பம்.


கடிதம் அனுப்ப இங்கே சொடுக்குங்கள்

அமெரிக்காவில் வாழ்பவர்கள் இணைப்பிற்கு இங்கே அழுத்துங்கள்!

பிற நாடுகளில் வாழ்பவர்கள் இங்கே அழுத்துங்கள்!


நண்பர்களே மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றிலும் உங்களாலான பங்களிப்பினை செய்யுங்கள்...



பின்குறிப்பு: இதுபோன்ற இணையபரப்புரைகளில் அதிக நம்பிக்கையின்றி இருந்தேன் (சமயத்தில் அதீத அவநம்பிக்கையுடன் இருந்தவர்களில் நானும் ஒருவன்). இன்போசிஸ் நிறுவனரின் முடிவில் மாற்றத்தினை கொண்டுவந்ததில் இது போன்ற இணைய பரப்புரையும் (வேறு காரணங்கள் இருப்பினும்) ஒரு முக்கிய காரணம் என எண்ணுகிறேன். ஆகையால், நீங்கள் இது போன்ற பரப்புரைகளில் பங்கெடுப்பதுடன், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுகின்றவர்களிடமும் அறியச் செய்யுங்கள்.