வியாழன், 26 மார்ச், 2009

இந்தியாவுக்கு குறைந்த செலவில் தொலைபேசனுமா?

வெளிநாடுகளில் இருக்கும் நம் மக்கள் பெரும்பான்மையான நேரத்தையும், தாரளமாக காசையும் செலவு செய்வது நம்ம ஊருக்கு தொலைபேசவே.

நண்பர்கள் சிலர் சொன்னதாலும் பதிவுலகில் யாரோ எழுதியிருந்ததாலும், சில தனியார் நிறுவனங்களின் voip வசதியை பயன்படுத்த முடிவெடுத்தேன். Freecall என்னும் சேவை வசதி சற்றே தரமாகவும் விலை குறைவாகவும் இருப்பதாக கருதி அதில் ஒரு கணக்கை துவக்கி அதன் மூலம் நம்ம ஊருக்கும், வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்களுடனும் மணிக்கணக்கில் பேசிவந்தேன்.

இந்த சேவை ஒழுங்காக இயங்கும் பொழுது, இச்சேவையை வழங்கும் நிறுவனத்தைப் பற்றியோ அல்லது அவர்களின் நம்பகத்தன்மை பற்றியோ சந்தேகமே வந்ததில்லை. (எங்க, நமக்கு தான் மணிக்கணக்குல போன் பேச இல்லாட்டி பிளாக், ஓர்குட்'ல ஆராய்ச்சி பண்ணவே நேரம் இல்லையே !!!)

ஒரு சில மாதங்களுக்கு முன்பு கடன் அட்டை வழியாக பணம் செலுத்தும் வசதி நின்றபொழுதும் எதுவும் உறைக்கவில்லை (போன் பேசுற மப்பு !!!). வழக்கமான முறையில் வங்கி வழியாக பணம் செலுத்தும் முறையில் பணத்தை அனுப்பி விட்டு, இதே முறையை பின்பற்றும் படி பல நண்பர்களும் பரிந்துரைத்தேன். ஒரு இனிய மாலைப் பொழுதில் வேலை செய்யுறது சுத்தமா நின்னுடுச்சி. பல நண்பர்களுக்கும் தான்... ஆனாலும் இன்னமும் சில பேருக்கு இந்த வசதி வேலை செய்யுது.

நிதானமா, இவனுங்க யாருன்னு பார்த்தால், அந்த தனியார் நிறுவனம் Betamax. நம்ம கூகுல் ஆண்டவோர உதவியோட தேடிப் பார்த்தா பல விசயங்கள் வெளிவருது.

1) முகவரி:
Betamax GmbH & Co KG
Im Mediapark 8
50670 Köln
Germany

ஆனால், இங்க போய் பார்த்துட்டு நம்ம நண்பர்கள் அப்படி ஒரு நிறுவனமே இல்லைனு உறுதிப்படுத்திட்டாங்க !!!! :)

2) இவர்கள், கடனட்டையிலுள்ள ரகசிய குறியீட்டு எண்களைப் பயன்படுத்தி உபயோகிபாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து கையாடல் செய்துள்ளதாக புகார் உள்ளதாம்.

இது போல ஏராளமான பாரட்டுப் பத்திரங்களை இங்கு சென்றால் நீங்கள் வாசிக்கலாம்.

http://forum.voxalot.com/voip-news/2768-betamax-accused-fraud-2.html

3) இந்த நல்லவனுங்க கொடுத்திருக்கும் தொலைபேசி எண்ணின் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ இவர்களை தொடர்புகொள்ள முடியவே முடியாது.
ஒருத்தர் எப்படி பொலம்பறாருன்னு பாருங்க.

We have already sent 100 Emails to BETAMAX n 100 calls to BETAMAX no one answer this is really cheating/fraud. I know my friend he also went to the main office of BETAMAX im Mediapark 8 Köln,but there is no Office of BETAMAX..

4) அதே சமயம் இந்த நிறுவனத்தார் இது போன்ற பல பெயரில் தங்களின் சேவை வசதியினை(!!!!!) அளிக்கின்றனர். அவற்றில் என்னால் கண்டுபிடிக்க இயன்றவற்றில் சில

1) LowRateVoip
2) justvoip
3) Freecall
4) VoipCheap
5) VoipStunt
6) VoipBuster
7) 12Voip
8) VoipWise
9) VoipRaider
10) VoipDiscount
11) Nonoh
12) Intervoip
13) Dialnow
14) Calleasy

இனியும் இருக்கலாம்.... தெரிந்தவர்கள் தயவு செய்து பகிர்ந்துகொள்ளவும்..

இது போன்ற voip சேவைகளை பயன்படுத்தும் முன் கவனமாக இருக்க சில யோசனைகள் (இனிமேல் நான் யோசனை சொல்லலாம் !!!)

1) உங்கள் கணக்கினை துவக்கும் முன் அந்த சேவை BETAMAX நிறுவனத்தாரால் வழங்கப்படவில்லையென உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

2) நேரடியாக கடனட்டை தகவல்களை இவர்களிடம் தருவதிற்கு பதிலாக PayPal, UKash போன்ற அமைப்புகளின் மூலம் பணம் செலுத்த முயலுங்கள்.

3) இவர்களிடம் போய் சேரும் பணத்திற்கு ஒருவழிப்பாதை மட்டுமே தெரியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, குறைந்த அளவே பணம் கட்டும் வாய்ப்பினை தேர்வு செய்யுங்கள். (என்னைப் போல் 10 €, 25 € கட்ட சோம்போறித்தனப் பட்டுக் கொண்டு 50, 100 € என கட்ட முயலவேண்டாம்) !!!! பிறகு புலம்புவதை தவிர்க்கலாம்.

நம்ம பதிவர்கள் சிலருக்கும் இந்த அனுபவம் இருக்குது (உபயம்: அடியேனே !!!!! )

புதன், 18 மார்ச், 2009

ஈழம் - இணைய முன்னெடுப்புகள், அந்நிய படைகள், மற்றவை

உலகின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தேசங்கள் தோரும் வீதிகளில் இறங்கி உணர்வுள்ள தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்கா அல்லது மூன்றாவது நாடொன்று வன்னியில் இறங்கி அங்கிருக்கும் மக்களை வெளியேற்றப் போவதாக கசிந்த செய்திகளை அடுத்து அது சம்பந்தமான பரப்புரைகளை இரண்டு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் எண்ணம் இன்னமும் மூன்றாம் உலக நாடுகளுக்கு இருப்பதாகவே என்ன தோன்றுகின்றது.



1) இலங்கையில் சமத்துவம் மற்றும் மறுவாழ்வுக்கான மக்கள் அமைப்பு People for Equality And Relief in Lanka - PEARL ஈழப் போராட்டம் தொடர்பாகவும் அங்கு ஏற்பட்டுள்ள மனித அவலத்தைப் பரப்ப எடுத்து வரும் முயற்சிகளை அவர்களின் இணையபக்கத்தின் மூலம் அறியலாம். அமெரிக்கா வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து போராட்டங்கள் நடத்துவதிலும் இலங்கையின் போர்க் குற்றங்களை அமெரிக்க ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


அமெரிக்கா பொது மக்களிடமும் அங்கு இருக்கும் ஊடகங்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், வன்னிப் பகுதியிலிருந்து மக்களை அமெரிக்கா தலைமையில் வெளியேற்றும் நடவடிக்கையை செயல் இழக்கச் செய்யமுடியும் என எண்ணும் இவர்கள் அது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட்'ல் 1/4 பக்க விளம்பரத்திற்கு தேவையான $13,000 தொகையினை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த முயற்சிக்கு உதவ விரும்புவோர் அவர்களின் இணையபக்கத்திற்கு சென்று உதவ முயலுங்கள்.



2) அதே சமயம், ஒபாமாவுக்கான தமிழர்கள் - Tamils for Obama அமைப்பானது, வன்னியிலுள்ள தமிழர்களின் நிலை பற்றியும் அங்கு ஏற்படத்தப் பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றியும் ஒரு கருத்துக்கணிப்பினை நடத்துகின்றது. ஒருசமயம் வெளி நாட்டுப் படைகள் உள்நுழைந்தால் அவைகளின் பணி என்னவாக இருக்க வேண்டும் என்னும் நோக்கில் இது அமைந்துள்ளது.


தமிழில் : www.tamilsforobama.com/Polling/Tamil_letter.html


ஆங்கிலத்தில் : http://www.tamilsforobama.com/polling/poll.asp



இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்து கொள்வது மிக எளிதான ஒன்று.



3) சர்வதேச நிதிக் கண்காணிப்பு அமைப்பிற்கு - International Monetary Fund இலங்கை அரசிற்கு கடனுதவி வழங்க இருப்பதை நிறுத்த வேண்டி ஒரு விண்ணப்பம்.


கடிதம் அனுப்ப இங்கே சொடுக்குங்கள்

அமெரிக்காவில் வாழ்பவர்கள் இணைப்பிற்கு இங்கே அழுத்துங்கள்!

பிற நாடுகளில் வாழ்பவர்கள் இங்கே அழுத்துங்கள்!


நண்பர்களே மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றிலும் உங்களாலான பங்களிப்பினை செய்யுங்கள்...



பின்குறிப்பு: இதுபோன்ற இணையபரப்புரைகளில் அதிக நம்பிக்கையின்றி இருந்தேன் (சமயத்தில் அதீத அவநம்பிக்கையுடன் இருந்தவர்களில் நானும் ஒருவன்). இன்போசிஸ் நிறுவனரின் முடிவில் மாற்றத்தினை கொண்டுவந்ததில் இது போன்ற இணைய பரப்புரையும் (வேறு காரணங்கள் இருப்பினும்) ஒரு முக்கிய காரணம் என எண்ணுகிறேன். ஆகையால், நீங்கள் இது போன்ற பரப்புரைகளில் பங்கெடுப்பதுடன், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுகின்றவர்களிடமும் அறியச் செய்யுங்கள்.



ஞாயிறு, 1 மார்ச், 2009

அடுத்த ஆஸ்கர் பரிசு ???



Slumdog Millionaire படத்தைப் பற்றியும் அதற்கான ஆஸ்கார் விருதுகளையும் பாராட்டி சீராட்டி, திட்டி, உள்குத்து, வெளிக்குத்து வைத்து ஏராளமான பதிவுகள் வந்துவிட்டதால் அதனைப் பற்றி நான் சொல்ல எதுவும் இல்லை.

படத்தின் கதைக் களமும் (சமூகத்தின் விளிம்பு நிலை மக்களைப் பற்றி) அதற்கான திரைக் கதை அமைப்பும் அருமை. பின்னனி இசையைப் பற்றி என்ன சொல்ல?? அது தான் உலகமே கொண்டாடுகிறதே.. படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்... !!!!!!!!!!      :)



இங்கு எழுத வந்தது படக் கதை, கதைக் களம், இயக்குனர் யார், அவரின் பின்புலமென்ன, ரகுமானின் திறமை பற்றியல்ல.. சில நாட்களுக்கு முன்னால் கீழ்கண்ட செய்தியைப் பார்த்தவுடன் தான், இந்த முறை ஆஸ்காருக்கு யார் காரணம் என்னும் அதிபயங்கர உண்மை புலப்பட்டது. அதே சமயம் அடுத்து வருங்காலங்களிலும் ஏராளமான ஆஸ்கார் பரிசுகள் தொடர்ந்து இந்தியாவிற்கு கிடைக்கும் சாத்தியங்களும் தெரிகின்றது.

"
ரஹ்மானுக்கு ஆஸ்கர்: உரிமை கொண்டாடும் காங்!"

இந்த உண்மை புரியாமல் ரகுமானையும் மற்றவர்களையும் கொண்டாடும் அரை வேக்காட்டுத்தனத்தை சு'தந்திர' இந்தியாவின் அரசபரம்பரையினர் தயைகூர்ந்து மன்னிப்பார்களாக.... வெள்ளைக்காரனிடமிருந்து 61 1/2 ஆண்டுகளுக்கு முன் விடுதலை பெற்ற இந்தியா என்னும் அமைப்பை 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காங்கிரஸை தவிர இது போன்ற கதைக் களத்திற்கும் அதனால் வந்த விருதுகளுக்கும் யார் உரிமை கொண்டாட முடியும்? அதுவும் இந்தியாவின் வியாபரத் தலைநகரமான மும்பைச் சேரியில் இதுபோன்று மலக் குழிகளை விட்டுவைக்காமலும், மலத்தில் விழுந்து எழுந்தாலும் சினிமா நடிகர்களை பார்த்தால் மோட்சம் வரும் என என்னும் அளவிற்கு சமுதாய/கல்வி கட்டமைப்பை ஏற்படுத்தமலும் இருந்து இருந்தால், ஒரு வெள்ளைக்கார பயலால் இப்படி முகத்தில் அறையும் அளவிற்கு நிதர்சனத்துடன் ஒரு படம் இயக்கி இருக்க முடியுமா?

மும்பை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் விளிம்பு நிலை மனிதர்களுக்கவது தாங்கள் விளிம்பு நிலையில் உள்ளோம் என்றாவது விளங்கும். ஏனெனில் ஒப்பிட்டு பார்க்கவாவது வேறு நிலையில் மனித வாழ்க்கை உள்ளது. இன்னமும் அடிப்படை வசதிகள் கூட சென்றடையாத வடகிழக்கு மாநிலங்களிலும், அங்கு இவர்களின் இராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களும், இராணுவ அடக்குமுறையின் கீழேயே 60 ஆண்டுகளையும் கழித்த காஸ்மீரிலும், இவர்களின் போலி தேசியவியாதிக் கொள்கையினால் நாயின் கீழாக சுட்டுக் கொல்லப்பட்ட 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களிலிருந்தும் இன்னமும் எத்தனை லட்சம் Slumdog Millionaire போன்ற கதைகளை உருவாக்குவது? அது எவ்வளவு நிதர்சனசமாக இருக்கும்???

இந்த ஆஸ்காரினாலும் படக் கதையின் களத்தினாலும் உந்தப்பட்ட வேறு யாரேனும் ஒரு வெள்ளைக்காரர் மேற் சொன்ன ஒன்றின் ஏதேனும் ஒரு கதையை முயற்சித்தால் அதற்கு ஆஸ்கார் விருது வராதா?? இது போன்ற லட்சக் கணக்கான கதைக் களங்களை இவர்களை தவிர வேறு யாரால் இயல்பாய் உருவாக்க முடிந்திருக்கும்?

ஆகையால், இந்த ஆஸ்கார்கள் மட்டுமல்ல, இனிவருங்காலங்களில் வரும் ஆஸ்கார், பென்ஸ்கார் மற்றும் பியட்கார் விருதுகளுக்கும் காங்கிரஸ் என்னும் தேசிய வியாதி மட்டுமே உரிமை கொண்டாட தகுதியுள்ளது. குஜராத் கதைய எடுக்குறதுனா மட்டும் மனித வெட்டி கூட்டங்க கிட்ட சொல்லிடுங்க, இல்லைனா குரங்கு சேனைங்க உண்டு இல்லைனு பண்ணிடும்...

அதே சமயம், இனி மேல் மூலக்கதைக்காக தரப்படும் விருதை காங்கிரஸ் கட்சிக்கே (மனித வெட்டி கதைகளுக்கு காவி குரங்கு சேனைங்களுக்கு) வழங்க வேண்டுமென கோரிக்கைவைக்கும் தீர்மானத்தை இனமான தமிழக காங்கிரஸின் ஏதோ ஒரு கோஸ்டி தலைவர் முன்மொழிந்துள்ளதை இங்கு தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்...