சனி, 18 ஜூலை, 2009

மாற்றுத் திறன் உடைய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - Scholarship for Students with Disabilities

இது, இன்று மின்னஞ்சலில் வந்தது. தேவையும் அவசியமும் கருதி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்...

இந்திய மைய அரசாங்கம் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் தொழில்நுட்ப மற்றும் பட்டப் படிப்புகளுக்கான 500 கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இதனுடைய முக்கிய சிறப்பம்சங்கள்

Financial Assistance can be given for computer with editing software for blind/deaf graduate and post graduate students pursuing professional courses and for support access software for cerebral palsied students.

Scholarship of Rs.1000/-p.m. for hostellers and Rs.700/- p.m. for day scholars studying in professional courses at graduation and above level, and Rs.700/- p.m. for hostellers and Rs.400/- p.m. for day scholars pursuing Diploma /certificate level professional. Course fee is reimbursed upto ceiling of Rs.10,000/- per year.

இதன் முழுத் தகவல்களைப் பெற இங்கே அழுத்தவும்.

விண்ணப்ப படிவங்களை ஆகஸ்ட் 31க்குள் அனுப்பியிருக்க வேண்டும்.

இவர்களின் வலைப்பக்கம் www.socialjustice. nic.in

நண்பர்கள் மற்றும் தேவையுள்ள மாணவர்களுக்கு இத்தகவல்களை கொண்டு சேருங்கள்...

சில மாணவர்களுக்கு கல்வி உதவி வேண்டி.

நண்பர்களுக்கு வணக்கம்,

கும்மிடிப்பூண்டி ஏதிலிகள் முகாமிலிருக்கும், பள்ளித் தேர்வுகளை முடித்து கல்லூரி செல்வதற்காக காத்திருக்கும் பலரில், சில ஈழத்தமிழ் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் நோக்குடன் நண்பர்கள் சிலர் கூட்டாக இணைந்து எடுத்திருக்கும் முயற்சியைப் பற்றிய பதிவு இது.

ஒர்குட் போன்ற பொதுத் தளங்களை வீண் அரட்டைக்கும், வெட்டி மொக்கைக்கும் மட்டுமே பயன்படுத்தாமல், தமிழக/இந்திய அரசியல் போக்குகளைப் பற்றி விவாதிக்கவும் (அப்ப, இது மட்டும் என்ன உபயோகமான வேலையானு கேக்க கூடாது !!!!), முடிந்த அளவு மிகச் சிறிய அளவிலேனும் சமுதாயத்திற்கு பயனுள்ள காரியங்களில் பங்கேற்று செயல்படவும் பல குழுமங்கள் ஒர்குட் தளத்தில் உள்ளது. அவற்றுள், தமிழக அரசியல் குழுமம் - Tamilnadu Politics (TNP) முக்கியமான ஒன்று.

இந்த முறை, கும்மிடிபூண்டி ஏதிலிகள் குடியிருப்பில் , இந்த ஆண்டில் மேல் நிலை பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தங்களது மேற்ப்படிப்பை தொடர முடியாத நிலையில்( 150க்கும் மேற்பட்ட மாணவர்கள்) இருப்பது தெரியவந்தது, (கடந்த கல்வியாண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் நிறைய பேர், படிப்பை தொடர முடியாத காரணத்தினால், கட்டட வேலைக்கும்,பெயிண்ட்ர் இன்னும் பலவகை கூலிவேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.,) அவர்களில் ஏதேனும் இருவருக்கு உதவலாம் என முடிவெடுத்துள்ளோம்.

நாம் தேர்ந்தெடுத்த பிள்ளைகளின் விபரம்

புவனேசுவரி த/பெ சுப்ரமணியம் , வயது 17 , கும்மிடிபூண்டி.
BE கணினி அறிவியல்
மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரி
திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்...


நிஜந்தன் த/பெ ரவி, வயது 18 , கும்மிடிபூண்டி
Bsc Bio tech
ஜெயா கலைக் கல்லூரி
திருநின்றவூர்
சென்னை.

இவர்களுக்கான கல்வி கட்டணம்
புவனேசுவரி
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 59,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....

நிஜந்தன்
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 35,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....

குறைந்தது ஆண்டுக்கு 1.5 லட்சம் தேவைப்படுகிறது. நான்கு ஆண்டுகள் என்றால் 6 லட்சம் ரூபாய். பெரியதொகைதான். ஆனால் நம்மில் பலர் ஒன்றாய் இணைந்தால் இது அவரவர் பங்குக்கு சிறு தொகையாகவே வரும். நாம் உறுதியாக நான்கு வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வுதவியை தமிழக அரசியல் குழுமத்தின் மூலம் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

இது தொடர்பாக, எனக்கு வந்த மின்னஞ்சலை பலருக்கு அனுப்பி உதவவி வேண்டியதில், மிகச் சிலரே இந்த முறை உதவு முடியும் என உறுதியளித்துள்ளனர். நண்பர் இரஞ்சித் தனது வலைப்பதிவிலும் இதனை வெளியிட்டிருந்தார்.

இந்த தமிழக அரசியல் குழுமத்தின் - Tamilnadu Politics (TNP) முன்னைய செயற்பாடுகள், உங்கள் பார்வைக்கு

சென்ற ஆண்டின் துவக்கத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகிலுள்ள மலையடிவார கிராமம் பொம்மிக்குப்பத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அந்த கிராம மக்களின் சார்பாக Rs. - 48,384/ னை ஒர்குட் குழும நண்பர்களிடமிருந்து (20 பேர்) வசூழித்து நன்கொடையாக கட்டினோம். கட்டிய தொகை ரூ 32,800. மீதம் கையிறுப்பு ரூ.15,584.அது பற்றிய விவரங்களைக் காண

பொம்மிகுப்பம் பள்ளிக்கு உயர் நிலை அந்தஸ்து இந்த கல்வியாண்டு முதல் கொடுக்கப்பட்டுள்ளது. பதினோராம் வகுப்பு தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை ஆரம்பமாகியது.

தமிழ்நாடு அரசியல் குழுமம் என பெயரிட்டுவிட்டு, அரசியல் இல்லாமலா.. சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது சிவகங்கையில் கைதானவர்களை வெளியில் எடுக்க, சிதம்பரத்திற்கு எதிரான தேர்தல் பிரச்சார செலவுகளுக்கும் இந்த குழுமத்தின் மூலம் நிதி திரட்டப்பட்டது (12 பேரிடமிருந்து 65 ஆயிரம் ரூபாய்).!!!!!

அதில் மீதமான தொகை, 1 ஆயிரம் ரூபாயினை சென்ற மாதம் ஜூன் 7ல் நடைபெற்ற "நீதிக்காண அமைதிப் பேரணி" நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்கனவே வசூல் செய்யப்பட்ட பண விபரங்களைக் கூறுவதன் காரணம், இந்த தன்னார்வ செயலுக்கு எந்தப் பெயரும் சூட்டவில்லையெனினும் (அரசு சாராத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் NGO வாக பதிவு செய்யும் வேலைகள் நடந்து கொண்டுள்ளன) முன்னரே அனுபவம் உள்ளது என சுட்டிக்காட்டத் தான். அதைத் தொடங்க சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றுக்கு சிறிது கால அவகாசம் எடுக்கும்.

அதற்கு முன் கல்லூரிகள் திறக்க இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தமிழக அரசியல் குழும நிர்வாகியான சக்திவேல் அவர்களின் வங்கிக் கணக்கு மூலம் முதலாவது தவணை உதவியைப் பெறலாம் என்று எண்ணுகிறோம். அவரது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு விபரம் கீழே:

C Sakthivel
ICICI account no: 620401064769
Branch: Contonment Branch, Trichy

SWIFT CODE: ICICINBB
Bank code: 6204

மேலும் வரைவோலை, மற்றும் பணப்பட்டுவாடா அனுப்புபவர்கள் நண்பர் தயாளனின் விலாசத்திற்கு "C.Sakthivel" என்ற பெயரிலேயே அனுப்பலாம். அவரது விலாசம் கீழே

D. Dhayalan (தொடர்புக்கு : 9841150700)
B/GF, Kasi Arcade Annex-1
32/1, VOC Street
Kaikan Kuppam (Near Chennai Medical Center)
Valasaravakkam - Post
Chennai - 600087

தங்கள் மூலம் ஈழத்துச் சிறார்களின் கல்வி விளக்கேற்ற ஒரு உதவி அது சிறு துளியாய் இருந்தாலும், அவர்களுக்குப் பேருதவியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

கும்மிடிபூண்டி ஏதிலிகள் குடியிருப்பில், பள்ளியிறுதிப் படிப்பு முடிந்த நிலையில், கல்லூரி சென்று படிக்க இன்னமும் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றி அறிய விரும்பினால், ஜாம்பவன் நேரு (9941185563) என்னும் பொறுப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.

நன்றி....

பின்குறிப்பு: இணைப்புகள் முழுவதும் ஒர்குட் இணைப்புகளே. உங்களது ஜிமெயில் வழியாக மிக எளிதாக உள்நுலையலாம்.