சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஜூலை, 2009

சில மாணவர்களுக்கு கல்வி உதவி வேண்டி.

நண்பர்களுக்கு வணக்கம்,

கும்மிடிப்பூண்டி ஏதிலிகள் முகாமிலிருக்கும், பள்ளித் தேர்வுகளை முடித்து கல்லூரி செல்வதற்காக காத்திருக்கும் பலரில், சில ஈழத்தமிழ் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் நோக்குடன் நண்பர்கள் சிலர் கூட்டாக இணைந்து எடுத்திருக்கும் முயற்சியைப் பற்றிய பதிவு இது.

ஒர்குட் போன்ற பொதுத் தளங்களை வீண் அரட்டைக்கும், வெட்டி மொக்கைக்கும் மட்டுமே பயன்படுத்தாமல், தமிழக/இந்திய அரசியல் போக்குகளைப் பற்றி விவாதிக்கவும் (அப்ப, இது மட்டும் என்ன உபயோகமான வேலையானு கேக்க கூடாது !!!!), முடிந்த அளவு மிகச் சிறிய அளவிலேனும் சமுதாயத்திற்கு பயனுள்ள காரியங்களில் பங்கேற்று செயல்படவும் பல குழுமங்கள் ஒர்குட் தளத்தில் உள்ளது. அவற்றுள், தமிழக அரசியல் குழுமம் - Tamilnadu Politics (TNP) முக்கியமான ஒன்று.

இந்த முறை, கும்மிடிபூண்டி ஏதிலிகள் குடியிருப்பில் , இந்த ஆண்டில் மேல் நிலை பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தங்களது மேற்ப்படிப்பை தொடர முடியாத நிலையில்( 150க்கும் மேற்பட்ட மாணவர்கள்) இருப்பது தெரியவந்தது, (கடந்த கல்வியாண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் நிறைய பேர், படிப்பை தொடர முடியாத காரணத்தினால், கட்டட வேலைக்கும்,பெயிண்ட்ர் இன்னும் பலவகை கூலிவேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.,) அவர்களில் ஏதேனும் இருவருக்கு உதவலாம் என முடிவெடுத்துள்ளோம்.

நாம் தேர்ந்தெடுத்த பிள்ளைகளின் விபரம்

புவனேசுவரி த/பெ சுப்ரமணியம் , வயது 17 , கும்மிடிபூண்டி.
BE கணினி அறிவியல்
மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரி
திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்...


நிஜந்தன் த/பெ ரவி, வயது 18 , கும்மிடிபூண்டி
Bsc Bio tech
ஜெயா கலைக் கல்லூரி
திருநின்றவூர்
சென்னை.

இவர்களுக்கான கல்வி கட்டணம்
புவனேசுவரி
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 59,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....

நிஜந்தன்
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 35,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....

குறைந்தது ஆண்டுக்கு 1.5 லட்சம் தேவைப்படுகிறது. நான்கு ஆண்டுகள் என்றால் 6 லட்சம் ரூபாய். பெரியதொகைதான். ஆனால் நம்மில் பலர் ஒன்றாய் இணைந்தால் இது அவரவர் பங்குக்கு சிறு தொகையாகவே வரும். நாம் உறுதியாக நான்கு வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வுதவியை தமிழக அரசியல் குழுமத்தின் மூலம் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

இது தொடர்பாக, எனக்கு வந்த மின்னஞ்சலை பலருக்கு அனுப்பி உதவவி வேண்டியதில், மிகச் சிலரே இந்த முறை உதவு முடியும் என உறுதியளித்துள்ளனர். நண்பர் இரஞ்சித் தனது வலைப்பதிவிலும் இதனை வெளியிட்டிருந்தார்.

இந்த தமிழக அரசியல் குழுமத்தின் - Tamilnadu Politics (TNP) முன்னைய செயற்பாடுகள், உங்கள் பார்வைக்கு

சென்ற ஆண்டின் துவக்கத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகிலுள்ள மலையடிவார கிராமம் பொம்மிக்குப்பத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அந்த கிராம மக்களின் சார்பாக Rs. - 48,384/ னை ஒர்குட் குழும நண்பர்களிடமிருந்து (20 பேர்) வசூழித்து நன்கொடையாக கட்டினோம். கட்டிய தொகை ரூ 32,800. மீதம் கையிறுப்பு ரூ.15,584.அது பற்றிய விவரங்களைக் காண

பொம்மிகுப்பம் பள்ளிக்கு உயர் நிலை அந்தஸ்து இந்த கல்வியாண்டு முதல் கொடுக்கப்பட்டுள்ளது. பதினோராம் வகுப்பு தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை ஆரம்பமாகியது.

தமிழ்நாடு அரசியல் குழுமம் என பெயரிட்டுவிட்டு, அரசியல் இல்லாமலா.. சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது சிவகங்கையில் கைதானவர்களை வெளியில் எடுக்க, சிதம்பரத்திற்கு எதிரான தேர்தல் பிரச்சார செலவுகளுக்கும் இந்த குழுமத்தின் மூலம் நிதி திரட்டப்பட்டது (12 பேரிடமிருந்து 65 ஆயிரம் ரூபாய்).!!!!!

அதில் மீதமான தொகை, 1 ஆயிரம் ரூபாயினை சென்ற மாதம் ஜூன் 7ல் நடைபெற்ற "நீதிக்காண அமைதிப் பேரணி" நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்கனவே வசூல் செய்யப்பட்ட பண விபரங்களைக் கூறுவதன் காரணம், இந்த தன்னார்வ செயலுக்கு எந்தப் பெயரும் சூட்டவில்லையெனினும் (அரசு சாராத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் NGO வாக பதிவு செய்யும் வேலைகள் நடந்து கொண்டுள்ளன) முன்னரே அனுபவம் உள்ளது என சுட்டிக்காட்டத் தான். அதைத் தொடங்க சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றுக்கு சிறிது கால அவகாசம் எடுக்கும்.

அதற்கு முன் கல்லூரிகள் திறக்க இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தமிழக அரசியல் குழும நிர்வாகியான சக்திவேல் அவர்களின் வங்கிக் கணக்கு மூலம் முதலாவது தவணை உதவியைப் பெறலாம் என்று எண்ணுகிறோம். அவரது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு விபரம் கீழே:

C Sakthivel
ICICI account no: 620401064769
Branch: Contonment Branch, Trichy

SWIFT CODE: ICICINBB
Bank code: 6204

மேலும் வரைவோலை, மற்றும் பணப்பட்டுவாடா அனுப்புபவர்கள் நண்பர் தயாளனின் விலாசத்திற்கு "C.Sakthivel" என்ற பெயரிலேயே அனுப்பலாம். அவரது விலாசம் கீழே

D. Dhayalan (தொடர்புக்கு : 9841150700)
B/GF, Kasi Arcade Annex-1
32/1, VOC Street
Kaikan Kuppam (Near Chennai Medical Center)
Valasaravakkam - Post
Chennai - 600087

தங்கள் மூலம் ஈழத்துச் சிறார்களின் கல்வி விளக்கேற்ற ஒரு உதவி அது சிறு துளியாய் இருந்தாலும், அவர்களுக்குப் பேருதவியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

கும்மிடிபூண்டி ஏதிலிகள் குடியிருப்பில், பள்ளியிறுதிப் படிப்பு முடிந்த நிலையில், கல்லூரி சென்று படிக்க இன்னமும் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றி அறிய விரும்பினால், ஜாம்பவன் நேரு (9941185563) என்னும் பொறுப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.

நன்றி....

பின்குறிப்பு: இணைப்புகள் முழுவதும் ஒர்குட் இணைப்புகளே. உங்களது ஜிமெயில் வழியாக மிக எளிதாக உள்நுலையலாம்.

திங்கள், 1 ஜூன், 2009

துக்கம் சுமந்த வரிகள்..


நடந்து முடிந்த மனிதப் பேரவலத்தை பற்றி ஏராளமான விவாதங்கள். எது சரி, எவரின் மேல் குற்றம், எப்படி இதனை தவிர்த்திருக்கலாம் என அலசும் ஆய்வுக் கட்டுரைகள். இதிலே திடீர் அகிம்சை காதலர்களும், அவர்களின் இந்தியா காந்தியால் தான் சுதந்திரம் பெற்றது போன்ற அறிய ஆய்வுக் கண்டுபிடிப்புகளும் வெந்த புண்ணில் வேலை காய வைத்து சொருகுபவை. அவர்களுக்கு ஆதரவு தரும் வலையுலகத் தொண்டர்களின் ஜால்ரா சத்தம், இது தொடர்பான விவாதங்களை தவிர்க்கவே சொல்கின்றது.

இந்த நிலையில், எழுத்தாளர் திரு எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் பதிலற்ற மின்னஞ்சல்கள் என்னும் தலைப்பில் இன்று வெளியிட்டுள்ள பதிவானது நடந்து முடிந்த இந்த பேரவலத்தை அவரின் எளிய வலிநிறைந்த வரிகளினால் முகத்தில் அறையும் படி விபரிக்கும் அதே வேளையில் "சில அறிவாளி" எழுத்தாளர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் சேர்த்தே பதிலளிக்கின்றது.


அவரின் மொத்த பதிவையும் பதிக்க விருப்பமில்லை... ஆகையால், சில முக்கிய வரிகள் மட்டும் இங்கே..

அகிம்சை, இந்தியா காந்தியின் சத்தியாகிரத்தினால் தான் சுதந்திரம் பெற்றது என்னும் அறிவியல் ஆய்வாளர்களுக்கு,

ரத்தம் சிந்தாமல் எந்த சமூகமும் மாறியதில்லை என்பதே வரலாறு திரும்ப திரும்ப சொல்லும் உண்மை. காந்தி வழியில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்ற பள்ளிபாட சரித்திரம் உண்மையில்லை என்பதை இந்த சுதந்திர போரில் வெள்ளையர்களால் அடிபட்டும் வன்கொலைக்கு உள்ளாகியும் இறந்தவர்களின் எலும்புகள் என்றும் சொல்லும்.

நான் வன்முறையை வளர்க்க சொல்லவில்லை. ஆனால் வன்முறை என்பது ஆயுதங்கள் ஏந்தி போரிடுவது மட்டுமில்லை. அதிகாரம் மேற்கொள்ளும் அத்தனை செயல்களிலும் வன்முறை பீறிட்டுக் கொண்டுதானே இருக்கிறது.


ஊடகங்களை தமது கைகளில் வைத்துக் கொண்டு சிலர் போடும் ஆட்டம், மக்களின் கவனத்தை திருப்ப அல்லது ஈழம் சார்ந்த செய்திகள் தமிழக/இந்திய மக்களுக்கு சென்று சேராமல் ஊடக முதலாளிகள்/ரவுடிகள் (இவர்கள் செய்தியாளர்கள் என்னும் சொல்லுக்கு தகுதியற்றவர்கள்) திட்டமிட்டு செய்யும் சதி, மற்றும் அவர்களின் அண்மைய போக்கு பற்றி


பிரபாகரன் உயிரோடு இல்லை. அவர் கொல்லபட்டுவிட்டார் என்ற செய்தியை (வதந்தியை) எதற்காக இத்தனை உற்சாகமாக ஊடகங்கள் கொண்டாடுகின்றன. என்ன வெறுப்பு அது. ஈழமக்களின் கடைசி யுத்தம் முறியடிக்கபட்டுவிட்டது என்பதை பொதுவெளிகள் ஏன் களிப்போடு பேசி கதைக்கின்றன.

ஒரு இனம் தன் வாழ்வுரிமை மறுக்கபட்டு ஒடுக்கபட்டதை கொண்டாட முடியும் மனிதர்களோடு எதற்காக எழுத்து படிப்பு இலக்கியம் என்று வீணடிக்கிறோம் என்று ஆத்திரம் வருகிறது.

.

.

வரலாற்றில் இத்தனை பெரிய இனப்படுக்கொலையை நிகழ்த்திவிட்டு அதை மூடிமறைத்து கொண்டாடும் தேசத்தை, அதை நியாயப்படுத்தும் மனிதர்களை காணும் போது அரசியல் அறிவை மீறி உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கிறது. கோபமும் இயலாமையும் எழுகின்றது.

உயிரோடு இருப்பதற்காக வெட்கபடுகிறேன்.

இது சொற்கள் அல்ல. ஒடுங்கி நிற்கும் இனத்தின் மனசாட்சியின் முணுமுணுப்பு. என்மீது படிந்த அழியாக்கறை.

மனசாட்சியும் மனிதமும் கொண்ட ஒரு எழுத்தாளரின் வார்த்தைகள்....

நடந்து முடிந்த சம்பவங்களையொட்டி என் மனதில் தோன்றியவைகளை எஸ். இரா அவர்களின் வார்தைகளில் கண்டெடுத்தேன்...

முழுக் கட்டுரையையும் வாசிக்க http://www.sramakrishnan.com/view.asp?id=269&PS=