புதன், 9 செப்டம்பர், 2009

திசநாயகத்தின் சிறைத் தண்டனைக்கு எதிரான பத்திரிகையாளர்களின் கண்டன ஒன்று கூடல்

Save Tamils இயக்கம், இலங்கை தமிழ் பத்திரிகை எழுத்தாளர் திசநாயகத்தின் கைது மற்றும் 20 வருட கடும் சிறைத் தண்டனையை எதிர்த்து , பத்திரிகையாளர்கள் பலரும் பங்கேற்கும் கண்டன நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்துகொண்டு பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான அரச பயங்கரவாத அடக்குமுறைக்கு நமது எதிர்ப்பினை பதிவு செய்வோம்.

நாள்: 12/09/09

நேரம்: காலை 10.30 மணியிலிருந்து

இடம்: சி. தெய்வநாயகம் மேனிலைப் பள்ளி (திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிர்ப்புரம்), வெங்கடநாரயண சாலை, தி. நகர், சென்னை 17




கூட்டத்தில் பேசப் போகும் பேச்சாளர்கள் விபரம் பின்வருமாறு

Mr Rajesh Sundaram, Deputy Editor, Headlines Today, Delhi
Mr AS Paneerselvam, Sr. Journalist
Mr Devasahayam, I.A.S (Retd)
Ms Kavitha Muralidharan, The Week
Mr Venkatramanan, Sr Journalist, Times of India
Mr Peer Mohammed, Deccan Chronicle


தொடர்புக்கு: savetamil@gmail.com, save-tamils@googlegroups.com,
98400 90898, 98844 68039

பின்குறிப்பு: இந்த நிகழ்வினை உங்களது நண்பர்களுக்கு அனுப்பியும், இந்தப் படத்தினை உங்களது வலைப் பூவின் முகப்பில் வைத்து பலருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி அறியத்தந்து உதவுமாறு வேண்டுகின்றேன்.

ஈழத்து மக்களின் இன்றைய அவலத்திற்கு யார் காரணம்? தினமணி கருத்துக் கணிப்பு

கலைஞரால் கட்டிக் காக்கப்படும் தமிழக காங்கிரஸை வலுப்படுத்த, டெல்லியிலிருந்து வந்த சோனியாவின் வாரிசு தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்யும் நேரத்தில், தினமணி ஈழத்தின் இன்றைய அவலத்திற்கு யார் காரணம் எனக் கேட்டு நேற்று நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் உங்கள் பார்வைக்கு.



என்னதான் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் பெரும்பான்மை தமிழக ஊடகங்கள் இருப்பினும் கற்றறிந்த பெரும்பான்மை தமிழர்களிடம் சரியான முறையில் தகவல் சென்றடைந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.