வடகிழக்கு மாநில மக்களின் அவலத்திற்கு மற்றும் ஒரு சாட்சியம். கடந்த ஆகஸ்ட் 12ம் நாள் அசாம் ரைபிள் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பம் ஒன்றும் அதைத் தொடர்ந்து பொது மக்களின் போராட்டங்களும் உக்ருல் மாவட்டத்தில் (Ukhrul district) நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை கோரி மைய அரசின் பிரதிநிதிகளுக்கு 6 நாகா அமைப்புகளின் கூட்டமைப்பு சுற்றறிக்கைக்கு அனுப்பிய தகவல் மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப் பெற்றது.
42 பழங்குடி இனங்களையும், சற்றேறக்குறைய 35 இலட்சதிற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள தேசிய இனமான நாகாவின் உரிமைக்காகவும் அவர்களின் நலனுக்காவும் Nationalist Socialist Council of Nagaland (NSCN) இயக்கம் 1960களிலிருந்து போராடி வருகின்றது. இந்திய மைய அரசுடன், (NSCN) இயக்கத்திற்கு கடந்த 1 ஆகஸ்ட், 1997 லிருந்து யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கின்றது. இருந்த போதிலும், அதன் அரசியல், மனித உரிமைப் பிரிவு பொருப்பாளார்களை பாதுகாப்பு படையினர் அடிக்கடி தாக்கி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 12ல், அசாம் ரைபிள் படைப்பிரிவினரால், பல பொதுமக்கள் முன்னிலையில் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டு, மறுநாள் பிணமாக மீட்கப்பட்ட Salmon Hungyo என்னும் 28 வயதான வாலிபரின் உடலத்தின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.


கடும் சித்திரவதைக்கு உள்ளான தடயங்கள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்படங்கள் கோரமானவை


கடும் சித்திரவதைக்கு உள்ளான தடயங்கள்




இந்த நிகழ்வைப் பற்றியோ, அல்லது மக்களின் போராட்டத்தைப் பற்றியோ ஏதேனும் செய்தி உண்டா என வெகுஜன ஊடகங்களில் கண்ணில் எண்ணை விட்டு தேடியும் ஒன்றையும் காணோம். வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், இராணுவ அத்துமீறல்கள் தொடர்பாக பெரும்பான்மை ஊடகங்கள் கள்ள மெளனம் சாதித்து வருவதற்கு சற்றும் குறைந்தது அல்ல அவர்களின் வாசகர்களின் கள்ள மெளனம். இது போன்ற சட்டத்திற்கு புறம்பான அரச பயங்கரவாதத்தின் படுகொலைகளை கண்டும் காணாமல் போகும் போக்கே உள்ளது.
வாழ்க ஜனநாயகம்.