தினமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 அக்டோபர், 2009

தினமணியின் இந்திய-இலங்கை நட்புறவுக்கெதிரான செயல்

ஏற்கனவே பிண்ணிப் பிணைந்துள்ள இந்திய - இலங்கை உறவு தற்பொழுது மேலும் வளர்வதை பொறுக்காத தினமணியின் சதிச்செயல் பார்த்தாயா உடன்பிறப்பே???


நமது மீனவர்கள் தாக்கப்படுவது என்ன புதுத் தகவலா நமக்கு?? அதனை நமது நாடாளுமன்ற உறுப்பினர் இரு நாட்டு உறவு குறித்து பேசிய அதே தினத்தில் வெளியிடும் தினமணியின் உள்நோக்கம் என்ன?உடனடியாய் தலையிட்டு தீர்வு காண அது என்ன சினிமா நடிகர்கள் சம்பந்தப்பட்ட விவகாரமா உடன்பிறப்பே??
ஹார்வார்ட் தந்த சிந்தனைச் செம்மல் என்ன செப்பியிருக்கின்றார் என கவனித்தாயா?? "Union Home Minister P Chidambaram on Friday dismissed as wrong reports about firing on Indian fishermen by Sri Lankan Navy in the last 10 months but said cases of some excesses by them have been taken up"

உண்மை நிலை இப்படி இருக்க தினமணிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை???

ம்ம்ம்ம்ம்ம்

சரி...

வாழ்க இலங்கை-இந்திய நல்லுறவு!!



புதன், 9 செப்டம்பர், 2009

ஈழத்து மக்களின் இன்றைய அவலத்திற்கு யார் காரணம்? தினமணி கருத்துக் கணிப்பு

கலைஞரால் கட்டிக் காக்கப்படும் தமிழக காங்கிரஸை வலுப்படுத்த, டெல்லியிலிருந்து வந்த சோனியாவின் வாரிசு தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்யும் நேரத்தில், தினமணி ஈழத்தின் இன்றைய அவலத்திற்கு யார் காரணம் எனக் கேட்டு நேற்று நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் உங்கள் பார்வைக்கு.



என்னதான் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் பெரும்பான்மை தமிழக ஊடகங்கள் இருப்பினும் கற்றறிந்த பெரும்பான்மை தமிழர்களிடம் சரியான முறையில் தகவல் சென்றடைந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

சனி, 9 மே, 2009

ஈழப் பிரச்சனை - உடன்பிறப்புகள் நன்றி சொல்ல வேண்டும்: தினமணி



இதுல குறிப்பிட்டு இருக்குறது சமீபத்திய சாதனைகள் தான், ஆகையால், காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பே வைத்த ஆப்பால் அனுதாப ஓட்டு திரட்டிக் கொண்டிடுக்கும் உடன்பிறப்புகள் சோர்ந்து விடவேண்டாம்.

60 ஆண்டுகளா கடுமையான பொது வாழ்க்கையாலும், தமிழுக்கு உழைத்து உழைத்தே (அந்த அளவுக்கு தமிழ் மோசமா இருந்தது பாருங்க) ஓடாய் போய், உலக பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடித்தது, காவிரி, முல்லை பெரியார், கச்சத்தீவு என அனைத்து பிரச்சனைகளிலும் ஆரம்பம் முதல் இன்று வரை உழைத்தது, பாலாறு பிரச்சனையை தொடங்கியது, தமிழக மீனவர்களுக்காக அயராது உழைத்தது போன்ற சாதனைகளை தினமணி அடுக்காததை நினைத்து ஆவேசப்பட வேண்டாம்...

அவங்களும் என்ன தான் செய்வார்கள்... ஒரு கருத்துப்படத்துல இவ்வளவு தான் சேர்க்க முடியும்...