அகிம்சை????? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகிம்சை????? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 நவம்பர், 2009

விலங்குகளை விட மோசமான முறையில் கொல்லப்படும் ஆதிவாசிகள்

மனதைப் பதறவைக்கும் மற்றும் ஓர் காணொளி இணைப்பு



http://www.youtube.com/watch?v=OVReet6b2ks

இப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே. காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது எனது தேசம்.
ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.

ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் "காமன் மேன்" கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.

இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்...

2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என (அப்படி ஏதேனும் நடந்திருந்தால்) யாரேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

மற்றபடி

வாழ்க (வல்லரசு) இந்தியா...

திங்கள், 12 அக்டோபர், 2009

தினமணியின் இந்திய-இலங்கை நட்புறவுக்கெதிரான செயல்

ஏற்கனவே பிண்ணிப் பிணைந்துள்ள இந்திய - இலங்கை உறவு தற்பொழுது மேலும் வளர்வதை பொறுக்காத தினமணியின் சதிச்செயல் பார்த்தாயா உடன்பிறப்பே???


நமது மீனவர்கள் தாக்கப்படுவது என்ன புதுத் தகவலா நமக்கு?? அதனை நமது நாடாளுமன்ற உறுப்பினர் இரு நாட்டு உறவு குறித்து பேசிய அதே தினத்தில் வெளியிடும் தினமணியின் உள்நோக்கம் என்ன?உடனடியாய் தலையிட்டு தீர்வு காண அது என்ன சினிமா நடிகர்கள் சம்பந்தப்பட்ட விவகாரமா உடன்பிறப்பே??
ஹார்வார்ட் தந்த சிந்தனைச் செம்மல் என்ன செப்பியிருக்கின்றார் என கவனித்தாயா?? "Union Home Minister P Chidambaram on Friday dismissed as wrong reports about firing on Indian fishermen by Sri Lankan Navy in the last 10 months but said cases of some excesses by them have been taken up"

உண்மை நிலை இப்படி இருக்க தினமணிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை???

ம்ம்ம்ம்ம்ம்

சரி...

வாழ்க இலங்கை-இந்திய நல்லுறவு!!



திங்கள், 1 ஜூன், 2009

துக்கம் சுமந்த வரிகள்..


நடந்து முடிந்த மனிதப் பேரவலத்தை பற்றி ஏராளமான விவாதங்கள். எது சரி, எவரின் மேல் குற்றம், எப்படி இதனை தவிர்த்திருக்கலாம் என அலசும் ஆய்வுக் கட்டுரைகள். இதிலே திடீர் அகிம்சை காதலர்களும், அவர்களின் இந்தியா காந்தியால் தான் சுதந்திரம் பெற்றது போன்ற அறிய ஆய்வுக் கண்டுபிடிப்புகளும் வெந்த புண்ணில் வேலை காய வைத்து சொருகுபவை. அவர்களுக்கு ஆதரவு தரும் வலையுலகத் தொண்டர்களின் ஜால்ரா சத்தம், இது தொடர்பான விவாதங்களை தவிர்க்கவே சொல்கின்றது.

இந்த நிலையில், எழுத்தாளர் திரு எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் பதிலற்ற மின்னஞ்சல்கள் என்னும் தலைப்பில் இன்று வெளியிட்டுள்ள பதிவானது நடந்து முடிந்த இந்த பேரவலத்தை அவரின் எளிய வலிநிறைந்த வரிகளினால் முகத்தில் அறையும் படி விபரிக்கும் அதே வேளையில் "சில அறிவாளி" எழுத்தாளர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் சேர்த்தே பதிலளிக்கின்றது.


அவரின் மொத்த பதிவையும் பதிக்க விருப்பமில்லை... ஆகையால், சில முக்கிய வரிகள் மட்டும் இங்கே..

அகிம்சை, இந்தியா காந்தியின் சத்தியாகிரத்தினால் தான் சுதந்திரம் பெற்றது என்னும் அறிவியல் ஆய்வாளர்களுக்கு,

ரத்தம் சிந்தாமல் எந்த சமூகமும் மாறியதில்லை என்பதே வரலாறு திரும்ப திரும்ப சொல்லும் உண்மை. காந்தி வழியில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்ற பள்ளிபாட சரித்திரம் உண்மையில்லை என்பதை இந்த சுதந்திர போரில் வெள்ளையர்களால் அடிபட்டும் வன்கொலைக்கு உள்ளாகியும் இறந்தவர்களின் எலும்புகள் என்றும் சொல்லும்.

நான் வன்முறையை வளர்க்க சொல்லவில்லை. ஆனால் வன்முறை என்பது ஆயுதங்கள் ஏந்தி போரிடுவது மட்டுமில்லை. அதிகாரம் மேற்கொள்ளும் அத்தனை செயல்களிலும் வன்முறை பீறிட்டுக் கொண்டுதானே இருக்கிறது.


ஊடகங்களை தமது கைகளில் வைத்துக் கொண்டு சிலர் போடும் ஆட்டம், மக்களின் கவனத்தை திருப்ப அல்லது ஈழம் சார்ந்த செய்திகள் தமிழக/இந்திய மக்களுக்கு சென்று சேராமல் ஊடக முதலாளிகள்/ரவுடிகள் (இவர்கள் செய்தியாளர்கள் என்னும் சொல்லுக்கு தகுதியற்றவர்கள்) திட்டமிட்டு செய்யும் சதி, மற்றும் அவர்களின் அண்மைய போக்கு பற்றி


பிரபாகரன் உயிரோடு இல்லை. அவர் கொல்லபட்டுவிட்டார் என்ற செய்தியை (வதந்தியை) எதற்காக இத்தனை உற்சாகமாக ஊடகங்கள் கொண்டாடுகின்றன. என்ன வெறுப்பு அது. ஈழமக்களின் கடைசி யுத்தம் முறியடிக்கபட்டுவிட்டது என்பதை பொதுவெளிகள் ஏன் களிப்போடு பேசி கதைக்கின்றன.

ஒரு இனம் தன் வாழ்வுரிமை மறுக்கபட்டு ஒடுக்கபட்டதை கொண்டாட முடியும் மனிதர்களோடு எதற்காக எழுத்து படிப்பு இலக்கியம் என்று வீணடிக்கிறோம் என்று ஆத்திரம் வருகிறது.

.

.

வரலாற்றில் இத்தனை பெரிய இனப்படுக்கொலையை நிகழ்த்திவிட்டு அதை மூடிமறைத்து கொண்டாடும் தேசத்தை, அதை நியாயப்படுத்தும் மனிதர்களை காணும் போது அரசியல் அறிவை மீறி உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கிறது. கோபமும் இயலாமையும் எழுகின்றது.

உயிரோடு இருப்பதற்காக வெட்கபடுகிறேன்.

இது சொற்கள் அல்ல. ஒடுங்கி நிற்கும் இனத்தின் மனசாட்சியின் முணுமுணுப்பு. என்மீது படிந்த அழியாக்கறை.

மனசாட்சியும் மனிதமும் கொண்ட ஒரு எழுத்தாளரின் வார்த்தைகள்....

நடந்து முடிந்த சம்பவங்களையொட்டி என் மனதில் தோன்றியவைகளை எஸ். இரா அவர்களின் வார்தைகளில் கண்டெடுத்தேன்...

முழுக் கட்டுரையையும் வாசிக்க http://www.sramakrishnan.com/view.asp?id=269&PS=