செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

பிரான்சில் மேற்படிப்புத் தகவல்கள் - 2

வணக்கம்,

நண்பர்கள் சிலர் புதிதாக சில இணைப்புகள் கொடுத்ததினால் அதை ஏற்கனவே பதிவிட்டிருந்த இடுகையில் இணைத்தேன்.

ஆனால், இதனை தொடரும் நண்பர்களுக்கு புதிய இணைப்புகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும் என எண்னியதால் அந்த புதிய இணைப்புகள் மட்டும் உங்கள் பார்வைக்கு...

I பட்ட மேற்படிப்புத் தகவல்கள் (For Masters)
Masters in Nano Science and Nanomaterials
http://etudes.univ-rennes1.fr/master-nanosciences/english
http://www.univ-lille1.fr/masters2-mnt-tac/mnt.htm

Materials for Energy Storage and Conservation (MESC)
http://www.u-picardie.fr/mundus_MESC/page.php?p=applications
இது ஒரு Erasmus Mundus கல்வி உதவித் தொகையின் கீழ்வரும் படிப்பாகும்

Ampère excellence Scholarships - Master's programme
http://www.ens-lyon.eu/web/nav/article.php?id=23

(Deadline March 27)

AtoSiM Master of Science
http://www.erasmusmundus-atosim.cecam.org/

II ஆராய்ச்சிப் படிப்புத் தகவல்கள் (PhD opportunities)

http://iemn.univ-lille1.fr/cnanono//offres_en.htm
http://www.iarc.fr/en/Education-Training/Fellowships

பொதுவாக தேட மற்றும் ஒரு தளம் http://www.scholarshipnet.info/

III விஞ்ஞானிகளுக்கு (for post-doc & scientists)

http://iemn.univ-lille1.fr/cnanono//offres_en.htm

http://www.pasteurfoundation.org/PostDoct.html

http://www.iarc.fr/en/Vacancies/Postdoctoral-Opportunities

இவை அனைத்தும் ஏற்கனவே, பிரான்சில் மேற்படிப்புத் தகவல்கள்
என்னும் தலைப்பில் இடப்பட்டிருந்த இடுகையில் பகுதிவாரியாக தொகுக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

புலிகளின் விமானத் தாக்குதலும் தமிழனின் உணர்ச்சிவசப்படலும்....

புலிகள் கொழும்பில் விமானத் தாக்குதல் - செய்தி

இது போன்ற தாக்குதல்களினால் வரும் உற்சாகத்தில் அங்கு அவலத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் நிலமையை மறந்துவிடக் கூடாது.. அதனால் தான் புலிகளே கடந்த 2 மாத காலமாக தங்களது கள நிலைமையை அடக்கி வாசித்தனர்....


இந்த 2009ம் ஆண்டு துவக்கத்திலிருந்து மட்டும் சிங்களம் கொன்ற அப்பாவி மக்களின் எண்ணிக்கை எத்தனை?? அதற்காக துவக்கப்பட்ட இழைகள் எத்தனை? இங்கு பாருங்கள் அரை மணி நேரத்தில் எத்தனை இடுகைகள்??????? !!!!



தமிழா..... உணர்ச்சிவசப்பட உன்னை விட்டால் இந்த உலகத்தில் ஆளே இல்லை !!!!

திங்கள், 16 பிப்ரவரி, 2009

இனப்படுகொலையை எதிர்த்து வாஷிங்டன், லண்டன், சுவிஸ் மற்றும் ஜெர்மனியில் பேரணி நிகழ்வுகள்

நண்பர்களே,

வரும் நாட்களில் இனப்படுகொலையை எதிர்த்து வாஷிங்டன், லண்டன், சுவிஸ் மற்றும் ஜெர்மனியில் பேரணி/கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை முன்பு பேரணி

நாள்:
வரும் வெள்ளிக்கிழமை (20-02-09)
நேரம்: காலை 10.30 முதல் மாலை 4 வரை.

மேலும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள படத்தை காண்க.


நியுஜெர்சி, ஸ்டேட்டன் ஐலன்ட், நியுயார்க், குவீன்ஸ், பாஸ்ட்டன், கனெக்டிகட், வட கரோலினா போன்ற இடங்களில் இருந்து மக்கள் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றதாக இங்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் http://www.pearlaction.org/ மற்றும்https://www.tamilsagainstgenocide.org/ என்னும் தளத்திற்கு செல்வதன் மூலம், நீங்கள் இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அதற்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யலாம்.

லண்டனில் இந்திய தூதரகத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் இனப்படுகொலைக்கான உதவியினை கண்டித்தும் அதை நிறுத்த வேண்டியும், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்: (18-02-09) புதன் கிழமை
நேரம்: காலை 10 லிருந்து மதியம் 2 வரை.

இடம்: High Commission of India

India House
Aldwych

London

http://hcilondon.in/contactus.php


ஜெர்மனியில்
கவனயீர்ப்பு நிகழ்வு

ஜெர்மனியின்
Dusseldorf நகரில் உள்ள அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து துணைத்தூதரகத்தின் முன் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்: 24- 02-09
நேரம்: பிற்பகல் 12.30 மணி


சுவீஸில் உள்ள ஐ நா சபை அலுவலகத்தின் முன் பேரணி

நாள்: வரும் வெள்ளிக்கிழமை (20-02-09)
நேரம்:
நிகழ்வு ஆரம்பம் மதியம் 1 மணியிலிருந்து




இன அழிப்பை தடுக்கவும் மேற்கத்திய நாடுகளை விரைவாக செயற்படவைக்கவும், அந்தந்த பகுதியிலிருக்கும் மக்கள் தவறாமல் கலந்து கொள்வீர்.. குடும்பத்தார், நண்பர், உடன் பணிபுரிவோருக்கு இந்த நிகழ்வுகள் பற்றி தெரியப்படுத்துங்கள்.

மறவாமல் இதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி உதவுங்கள்.

சனி, 14 பிப்ரவரி, 2009

முத்துக்குமாருக்கு ஒரு கடிதம் - விகடன்

ஆனந்த விகடன், தனது 18-02-09 வெளியீட்டில் கீழ்கண்ட கடிதத்தை வெளியிட்டுள்ளது. முன்னமே, சில பதிவர்கள் தங்களுடைய வலைத்தளத்தில் இதை வெளியிட்டிருப்பினும், இக்கடிதத்தின் நோக்கம்/முக்கியத்துவம் கருதி அது இங்கும் வெளியிடப்படுகிறது.
************************************************************************************
முத்துக்குமார்... ..கண்ணீர் வணக்கம். சாவின் விளிம்பில் எழுதிய சாசனத்தில்கூட, 'வேலைக்குப் போகும் அவசரத்தில் இருக்கும் உங்களை இப்படிச் சந்திக்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்' என எழுதிய ஈரத் தமிழா!

தன்னையே மாய்த்துக்கொள்வது தவறுதான். ஆனால், 30 வருடங்களுக்கும் மேலாக பிஞ்சுக் குழந்தைகளை, அப்பாவிப் பெண்களை, பாவப்பட்ட மக்களைக் கொன்று வீசும் குரூரமான இன வெறிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத சமூகத்தில் வாழ்வதே அவமானம் என்பதையும் அறிவோம்.

உனது இறுதி ஊர்வலத்தைப் போராட்டக் களமாக்கித் திரண்ட இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இவர்களின் உண்மையான கண்ணீரையும் கோபத்தையும் இந்தக் கடிதத்தில் உனக்கு அனுப்பிவைக்கிறேன். ஏனெனில், இங்கே அது மட்டுமே உண்மை!

நீ பேசாமல்கிடந்த அந்த மூன்று நாட்கள், இதுவரை பேசிப் பேசி எம்மை ஏமாற்றிப் பிழைத்தவர்களின் முகமூடிகளைக் கிழித்தெறிந்த தினங்கள். 'காதலர் தினத்தில்' காதலிக்குக் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கக்கூடிய வயதுதான் உனக்கும். ஆனால், நீ எழுதிய கடைசிக் கடிதம், பிரிவின் பெருவலியில் துடிக்கும் பிரபஞ்சக் காதலின் குரல். பார்க்கச் சகியாத அவலத்தை அடித்து நொறுக்கும் அன்பின் விரல். அதனால்தான் தமிழ்நாட்டுக்கு வந்த சிங்களத் தம்பதியினர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்தாய்.'உலகத் தொழிலாளர்களே... ஒன்றுபடுங்கள்' என்ற குரலின் நீட்சியாய், 'உலகத் தமிழ் இளைஞர்களே ஒன்றுபடுங்கள்' என அறைகூவிவிட்டுச் செத்துப்போன நண்பனே... தனிமனிதப் பொருளாதாரம், பொழுதுபோக்கு, சுகம், சுயநலம், வக்கிரம், கூத்து என ஒரு தலைமுறை உருவாகிறதோ என்ற சந்தேகத்துக்கெல்லாம் சாட்டையடியானது, உன் கடிதத்துக்குப் பிறகான நிகழ்வுகள்.

இளைஞர்களும் மாணவர்களும்தான் உன் மரணத்துக்கு மரியாதை தரத் திரண்டார்கள். இனப் படுகொலைக்கு எதிராகக் கிளர்ந்தார்கள். எங்கெங்கோ பெயர் தெரியாமல் உண்ணாவிரதம் இருந்து சுருண்டார்கள். கல்லூரி வளாகங்களில், பேருந்து-ரயில் நிலையங்களில், தெருக்களில், சந்திப்புகளில் நீ சொன்ன செய்திகளையும், இன அழிப்பின் பயங்கரத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துச் சென்றார்கள்.

ஒட்டுமொத்தமாக அவர்கள் உன் முன் வைக்கும் ஒரே கேள்வி என்ன தெரியுமா?

'எங்களை வழிநடத்த யார் இருக்கிறார்கள்? நடக்கும் அநியாயத்துக்கு எதிராக ஒலிக்கும் எங்கள் குரல்களை ஒன்றுதிரட்டி முன்னெடுக்கும் உண்மையான தலைவன் எங்கே?' இங்கே யாருமில்லை நண்பனே... உண்மையில் யாருமே இல்லை!

'எனது உடலைத் துருப்புச்சீட்டாக்கி, ஈழ மக்களுக்கான போராட்டத்தைத் தொடருங்கள்' என்பதுதான் உனது தியாகத்தின் முதல் செய்தி. தொழிலாளர் புரட்சி வென்றதன் சாட்சியாக லெனினின் உடலைப் பல வருடங்களாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தது ரஷ்யா. 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்த திலீபனின் உடலை ஈழம் முழுக்க ஊர்வலமாக எடுத்துச் சென்ற பின்பு, கிளர்ந்தது புது எழுச்சி.

உனது உடலை மூன்று நாட்கள் பாதுகாத்து வைத்ததே இளைஞர்களின், மாணவர்களின் கோபாவேசம்தான். உன்னையும் உண்மையையும் உடனே புதைக்கத்தானே விரும்பும் அரசியலும் அதிகாரமும்.

உனது சொந்த ஊர் தூத்துக்குடி வரை ஊர்வலத்தை எடுத்துச் செல்லலாம் என்கிற யோசனையைக்கூட செயல்படுத்த முடியவில்லை. 'சட்டம் - ஒழுங்கு கெட்டுவிடும்' என உளவுத் துறை அரசுக்கு ஓலை அனுப்பியதாம். ஒரு பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கெடாத 'சட்டம் - ஒழுங்கா' கெட்டுவிடப்போகிறது?

உனது இறுதி ஊர்வலத்தில் சாலையின் இருபுறமும் திரண்டு, வட சென்னைக் குடிசைவாசிகள் ஏற்றிய தீபங்களை 'அணையாத தீபமாக்க' வேண்டியது யார் பொறுப்பு?

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசியல் ரீதியான போராட்டங்களில் நிற்கும் இன உணர்வாளர்கள் நீங்கலாக தா.பாண்டியன், ராமதாஸ், வைகோ, திருமாவளவன் ஆகியோருக்கு உன் சார்பாக நன்றி. பசி, பட்டினி, ஊனம், சாவு எனத் தினம் தினம் நம் மக்கள் அழிந்து மடியும் அவலத்தை, உண்மை நிலவரத்தை மக்கள் சபைக்கு எடுத்துச் செல்லும் மிகச் சிலரில் இவர்களும் உண்டு. ஆனால், அரசு அதிகாரத்துக்குச் செவிசாய்ப்பதும், தேர்தல் அரசியலுக்கான 'கூட்டு அரசியல்' யோசனைகளில் தடுமாறிப் பின்வாங்குவதும் இவர்களின் பலவீனம் என்பதையும் நீ அறிவாய்.

பதவிக்கும் அரசியல் பாதுகாப்புக்கும் கிஞ்சித்தும் சாய்ந்திடாமல், நம் மக்களுக்காக எவரேனும் முழுதாக முன்வரும் காலம் எப்போது வருமோ... அன்றுதான் உனது உன்னத நோக்கங்களை நிறைவேற்றும் தகுதியும் உண்மையும் உரியவர்களுக்கு வரும்.

முதல்வரைப் பற்றி நீயே கடிதத்தில் 'தெளிவாக' எழுதியிருக்கிறாய். உனது இறுதி ஊர்வலத்தில் முதல் ஆளாக நின்றிருக்க வேண்டியது 'கல்லக்குடி போராளி'தானே. மனிதச் சங்கிலி, தீர்மானம், ராஜினாமா விளையாட்டு... என 'ஆறப் போட்டு, ஊறப் போட்டு' மறக்கடிக்கிற அரசியல் யுக்தியை இதிலுமா செயல்படுத்துவது? அவரது 'நிலை' நமக்குப் புரிகிறது முத்துக்குமார்.

'முதல்வரே... பகிரங்கமாகச் சொல்லுங்கள். என்னால் முடியவில்லை என்று சொல்லுங்கள். நல்லது, நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.' - இதைத்தானே நீ சொல்ல வந்தாய்?

சினிமா ஆடியோ ரிலீஸ் விழாக்களில் எல்லாம் கூடிச் சிரிக்கும் குடும்பத்திலிருந்து ஒருவர்கூட வரவில்லையே நண்பா!

'ஈழத் தமிழர்களின் நிலையை முன்னிட்டு இந்த வருடம் என் பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம்' என அழகிரி சொன்னதுதான் 2009-ன் மெகா மெகா ஜோக். கலைஞர் டி.வி-யில் ஒரு காமெடி சேனல் ஆரம்பித்து, அதற்கு அழகிரியைப் பொறுப்பாளராகப் போடலாம்.

விஜயகாந்த் யாரென்றும் நீ சொல்லிவிட்டாய், நண்பனே... தமிழர்களுக்கான தைரியமும் தனிக் குரலும்தானே அவரது அடையாளமென நம்பினோம்!

மகனுக்கு 'பிரபாகரன்' எனப் பெயர் வைத்திருக்கிறாரே என வியந்தோம். ஆனால், உனது அறைகூவலுக்கும் ஈழ மக்களின் துயர்துடைப்புக்கும் கூப்பிட்டால், 'ஷூட்டிங் காம்'... 'கூட்டணி மீட்டிங்காம்'..! சார் ரொம்ப பிஸி. 'லிஸ்ட்ல நம்மளை விட்ருவாய்ங்களோ' என உஷாராகி, 'நாடாளுமன்றத் தேர்தல் புறக் கணிப்பு' என 'போகாத' ஊருக்கு வழிகாட்டி, அறிக்கை அட்டைக் கத்தி சுழற்றுகிறார் கேப்டன். ஈழ மழையில் வேஷம் கலைந்து தெரிவதுதான் அவரது நிஜ முகமோ?

ஜெயலலிதாவைப் பற்றி உனக்கு நன்றாகவே தெரியும். 'உறுதியான நிலைப்பாடு' என்கிற பெயரால் இன உணர்வைக் கொச்சைப்படுத்தும் அவருக்கு, ஈழத் தமிழர்களாவது... எழவாவது?

காங்கிரஸ்காரர்களைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால், 'கருமாதி வீட்டில் இட்லிக்கு அடித்துக்கொள்கிறார்கள்.' 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலைவிட்டு தமிழன் தன்னை ஒதுக்கியே வைத்திருக்கிற ஆத்திரம்கூட அவர்களுக்கு இருக்கலாம்.

அதற்காக, தமிழ் இனத்தையேவா ரத்தச் சேற்றில் மிதக்கவிட்டு வெறுப்பைத் தீர்த்துக்கொள்வது? பரவாயில்லை... இன்னும் 400 ஆண்டுகள் ஆனாலும் இங்கே இவர்களை நுழையவிடாமல் இவர்களே செய்துகொள்வார்கள்!

'உங்களுக்குத் தமிழன் அழிய வேண்டுமென்றால், எங்கள் பழங்கதைகளில் வருகிற மாதிரி ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்துகொள்கிறோம். எங்கள் சகோதரிகளையும் குழந்தைகளையும் விட்டுவிடுங்கள்' எனக் கதறினாய் நீ. ஆனால், நாம் அளித்த பதவிகளைக்கூட தூக்கி எறிய முடியாத தலைவர்களை அல்லவா நாம் பெற்றிருக்கிறோம்.

கவிதை ஒன்று படிக்கக் கிடைத்தது எனக்கு.

'அப்பாவித் தமிழர்கள் மீது
பேரினவாத
ராணுவம் நடத்திய

கொலைவெறித்
தாக்குதலில்

ஐம்பது
பேர் பலியானார்கள்

ஐந்நூறு
பேர் புலியானார்கள்!'


அது அங்கே... ஆனால், இங்கே?

இங்கேயும் மாற்றத்துக்கான ஒளித் தீற்றல்கள் தெரிகின்றன. ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழகத் தமிழர்களுக்காகவும், உலகளாவிப் புதிய வியூகங்களில் போராட்டத்தையும், வன்முறைக்கு எதிரான புரட்சியை முன்னெடுக்கவும் நமது இளைஞர்கள் தயாராகி இருக்கிறார்கள் நண்பனே.

சுயலாபங்களுக்காகப் பிற உயிரை மதிக்காத ஒவ்வொருவரும் நமக்கு எதிரியே. உனது சிந்தையை, கனவை, கோபத்தை, குரலை, உண்மையை, மனிதநேயத்தை முன்னெடுத்துச் செல்ல இளைஞர்களும் நல்ல இதயங்களும் உனது பெயரால் சேர்வார்கள்.

உன் குரலாகவே மாறி நம் மக்களுக்குச் சொல்கிறேன். இனி உண்ணாவிரதங்கள் வேண்டாம், தீக்குளிப்புகள் வேண்டாம். அதே நேரம், குமுறல்களைப் பூட்டி வைத்திருக்கவும் வேண்டாம் உங்கள் உள்ளத்துக்குள்ளேயே... வாருங்கள் வீதிக்கு, இணைந்து போராட!

-அநீதிகளுக்கெதிரான ஒரு சகோதரன்-

வியாழன், 12 பிப்ரவரி, 2009

பிரான்சில் மேற்படிப்புத் தகவல்கள் !!!!!

வணக்கம்.....

மேற்படிப்பு (பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி துறை சார்ந்தவை) படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அதற்குறிய சரியான தகவல்கள் உரிய நேரத்திற்க்கு கிடைக்கப்பெருமா என்பது சந்தேகமே... ஏனெனில், சரியான வாய்ப்புகளைத் தேடி சில ஆண்டுகளை கழித்தவர்களில் நானும் ஒருவன் !!!!! அதனால், நான் தற்போது இருக்கும் பிரான்சில், மேற்படிப்பு சம்பந்தமான தகவல்களை தமிழில் பதிய எண்ணிக்க்கொண்டிருந்த பொழுது, நண்பர் ஒருவரால், சுவீடனில் மேற்படிப்பு சம்பந்தமாக வினையூக்கி அவர்களால் இடப் பட்டிருந்த பதிவை காண நேர்ந்தது... அதனால் உந்தப் பட்டு, இங்கிருக்கும் பல்வேறு படிப்புகளைப் பற்றி என்னால் இயன்ற அளவிற்கு தகவல்கள் சேகரித்து இதை எழுத முயன்றுள்ளேன்....

பிரான்சில், சீதோசண நிலை ஒரு பெரும் பிரச்சனையா இருக்காது. அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் மட்டுமின்றி கலை மற்றும் மொழி சார்ந்த படிப்புகளுக்கும் பிரான்ஸ் புகழ் பெற்றது. இங்கு மேற்படிப்பு படிக்க, ஆங்கில மொழித் தேர்வு மதிப்பெண் (IELTS/TOEFL)சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது பாடத்திட்டதிற்கு ஏற்ப வேறுபடுகிறது. (பெரும்பான்மையான படிப்புகளுக்கு ஆங்கிலப் புலமைத் தேர்வு அவசியம் இல்லை !!!!).

பிரான்சில் 81க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அனைத்தும் பிரான்ஸ் அரசின் கல்வி அமைச்சகத்தின் மேற்பார்வையிலும் கண்காணிப்பிலும் இருப்பவையாகும்.

http://www.findaschool.org/index.php?Country=France

கல்விச் செலவுக்கான பெரும் பகுதியை அரசே ஏற்பதால், கட்டணத்தொகையானது மிகக் குறைவே, பெரும்பாலான சமயங்களில் முழுவதுமாக கல்விக் கட்டணம் கட்டத் தேவையிருக்காது. 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, மருத்துவக் காப்பீட்டுத் தொகையையும் அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த வயது வரம்பை கடந்தவர்களுக்கு இது இரண்டு ஆண்டிற்கு அதிகபட்சமாக 700 யூரோ வரை ஆகும். (பெரும்பாலும் இரண்டு ஆண்டிற்கும் சேர்த்து, கல்விக் கட்டணம் + மருத்துவக் காப்பீட்டுத் தொகை 1000 யூரோ வரை ஆகலாம்). படிப்பு முடித்து இங்கேயே வேலை பார்க்க விரும்புவோர், பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்வது நன்மை தரும். அதே சமயம், மேற்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை பெறதா மாணவர்களுக்கும் பிரெஞ்சு கற்றுக் கொள்வதன் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பினை அதிகரித்துக் கொள்ளலாம். இந்தியாவில், Allience de Francaise என்னும் அமைப்பு பிரெஞ்சு மொழியினை கற்றுத்தருகிறது. பல்வேறு வகையான படிப்புகளையும் அதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளையும் தனித்தனியே பார்ப்போம்.

கல்வி உதவித்தொகை (Scholaships/Fellowships/Assistantship)

பொதுவாக, இந்த கல்வி உதவித்தொகை பற்றி பலருக்கும் இருக்கும் சந்தேகம்

மற்ற ஐரோப்பிய/அமெரிக்க நாடுகளைப் போலவே இங்கும் கல்வி உதவித் தொகையானது உங்களுடை கல்விச் செலவுக்கு மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட செலவுகளுக்கும் (உணவு, உடை, மருத்துவம், ஊர் சுற்றல்) போதுமானதாகவே இருக்கும். பகுதி நேர வேலைக்குச் சென்று பணம் ஈட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இந்த தொகையின் அளவானது படிப்பையும் (Masters/PhD), நாம் எந்த மாதிரியான உதவியின் கீழ் வருகின்றோம் என்பதனையும் பொறுத்து மாறுபடும்...

பொதுவாக PhD மாணவர்களுக்கு, 1300 - 1700 யூரோ வரை ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். அனைத்து செலவுகளுக்கு பிறகும் பாதிக்கு மேல் சேமிக்கலாம்.

I பட்ட மேற்படிப்புத் தகவல்கள் (For Masters)

அ) இளங்கலைப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமல்லாது முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும் கூட, பிரான்சிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கு பட்ட மேற்படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்.

பல்வேறு வகையான படிப்புகளையும், அதன் வரையரைகளையும் விரிவாக தெரிந்து கொள்ள EduFrance என்னும் அமைப்பு உதவுகிறது. இது, Allience de Francaise ன் ஒரு அங்கமாகும். இவர்களின் இணைய முகவரிகள்

http://www.india-campusfrance.org/

www.edufrance.fr/en/

இந்த EduFrance அமைப்பானது இந்தியாவில் ஏழு இடங்களில் (சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், சண்டிகார், மும்பை, புது தில்லி, பூனே) அமைந்துள்ளது.

இவர்கள், பிரான்சின் கல்வி முறைகளைப் பற்றியும், அதற்கு விண்ணப்பிக்கும் முறைகளையும் மற்றும் கல்வி உதவித் தொகைப் பெறுவதற்கும் ஆலோசனை வழங்குவார்கள். இந்த அமைப்பினை, மின்னஞ்சல், தொலைபேசி அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம். இவர்களின் மேற்குறிப்பிட்டுள்ள இணைய முகவரிகளை தொடர்ந்து கவனித்து வரவும்.

ஆ) இந்தியாவில் தமிழகத்தில் உள்ள சில பல்கலைகழகங்களும் கல்லூரிகளும் பிரான்சில் உள்ள சில பல்கலைகழங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளன. [உதாரணம் : லயோலா கல்லூரியின் உயிர்த் தொழில் நுட்பத்துறையினர் (Biotechnology department, Loyala college) பிரான்சின் லில்லி பல்கலைக் கழகத்துடன் (University of Lille) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளனர்]. அதேபோல, நீங்கள் இப்போது படித்துக் கொண்டுள்ள கல்வி நிறுவனம் இது போன்ற ஏதாவது ஒரு பிரான்ஸ் பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியிருக்கும் பட்சத்தில், உங்களுடைய பட்ட மேற்படிப்பின் ஒரு பகுதியையோ, 6 மாதப் படிப்பையோ அல்லது ஒரு ஆண்டு படிப்பையோ (உங்களுடைய படிப்பு 2 ஆண்டுகளாக இருக்கும் பட்சத்தில்) பிரான்சில் உதவித்தொகையுடன் தொடரலாம்.

இ) ஒவ்வொரு ஆண்டும், பட்ட மேற்படிப்புக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை நீங்கள் கீழ்கண்ட இணையதள முகவரிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

http://www.india-campusfrance.org/

www.edufrance.fr/en/

http://www.france-in-india.org/en/

http://www.egide.asso.fr/jahia/Jahia/

மற்றும், http://www.egide.asso.fr/jahia/Jahia/lang/en/accueil/etudiants

http://www.education.gouv.fr/cid1012/programme-erasmus.html

http://www.ifan.in/index.php?option=com_content&task=view&id=117&Itemid=47

கணிணி, கணிதவியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு (Applied Mathematics, Computation, Simulation Algorithmics, Programming, Software, Architecture, Networks, Systems, Services, Distributed Computing, Perception, Cognition, Interaction, Computational Sciences for Biology, Medicine and the Environment)

http://www.inria.fr/travailler/stage/index.en.html

http://www.inria.fr/recherche/equipes/listes/index.en.html

http://www.irisa.fr/education/doctoral/teaching/

உயிரியல், மருத்துவம், உயிரித் தொழில்நுட்பம் (biological, medical and public health research) போன்ற துறை சார் படிப்புகளுக்கு

http://www.inserm.fr/en/inserm/

அனைத்து இணைப்புகளுக்கும் சென்று பார்க்கவும். அனைத்தும் ஒன்றுகொன்றுதொடர்பில்லாதது. அதே சமயம், ஐரோப்பாவிலிருக்கும் மற்ற பல்கலைக்கழகங்களின் (இதே போன்ற) பட்ட மேற்படிப்புத் தகவல்களைப் பெற

http://ec.europa.eu/education/programmes/mundus/projects/index_en.html

Masters in Materials Science

தற்சமயம், நான் இருக்கும் பல்கலைக் கழகத்தின் பருப்பொருள் அறிவியலில் துறையில் (Masters in Materials Science), கல்வி உதவித் தொகையுடன் கூடிய பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கவும் அதற்கான தகவல்களைப் பெறவும்,

http://etudes.univ-rennes1.fr/mamaself/english

இதே துறையில் (Materials Science), ஐரோப்பாவிலிருக்கும் மற்ற பல்கலைக்கழகங்களிலிருக்கும் படிப்புத் தகவல்களை

http://www.getscholarship.net/79/erasmus-mundus-scholarships-for-european-master-in-material-science என்ற இணையத்தில் பெறலாம்.

Masters in Nano Science and Nanomaterials
http://etudes.univ-rennes1.fr/master-nanosciences/english

http://www.univ-lille1.fr/masters2-mnt-tac/mnt.htm


Materials for Energy Storage and Conservation (MESC)
http://www.u-picardie.fr/mundus_MESC/page.php?p=applications

இது ஒரு Erasmus Mundus கல்வி உதவித் தொகையின் கீழ்வரும் படிப்பாகும்.

Ampère excellence Scholarships - Master's programme
http://www.ens-lyon.eu/web/nav/article.php?id=23

AtoSiM Master of Science

http://www.erasmusmundus-atosim.cecam.org/

International masters in Chemistry at University of Rennes1

http://www.immc.univ-rennes1.fr/

II ஆராய்ச்சிப் படிப்புத் தகவல்கள் (PhD opportunities)

பொதுவாகவே, மற்ற வளர்ச்சியடைந்த ஐரோப்பியா நாடுகளைப் போலவே, பிரான்சிலும் ஆராய்ச்சி செய்யத்தேவையான சுதந்திரமும், வசதிகளும் மற்றும் வழிகாட்டுதலும் உள்ளது. ஆராய்சி செய்ய போதுமான நிதி வசதி, நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் அல்லது அரசின் கல்வி அமைச்சிலிருந்து நிதி பெறுவதாக இருந்தால் தான் இவர்கள் மாணவர்களை எடுப்பதால், பெரும்பாலும் கல்வி உதவித் தொகை பற்றி கவலைப் படத்தேவையில்லை.

அ) குறுகிய கால கல்வி உதவித் தொகை (Fellowship for PhD Sandwich programmes)

அயல்நாட்டு மாணவர்களுக்கு (ஏற்கனவே ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுள்ளோருக்கு), பிரான்ஸ் அதன் தூதரகங்களின் மூலம் இந்த திட்டத்திற்கான மாணவர்களை தேர்வுசெய்கின்றது. இதன் மூலம் தேர்வு செய்யப் படும் மாணவர்களுக்கு பயணம், கல்விக் கட்டணம் + மருத்துவக் காப்பீட்டு தொகை வழங்குவதோடு மற்றும் இதர செலவீனங்களுக்கு தேவையான மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இது 6 மாததிலிருந்து 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது.

இதற்கான தகவல்களை, http://www.frenchsciencetoday.org/ என்னும் இணையதளைத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். மற்றும்

http://www.ifan.in/index.php?option=com_content&task=view&id=68&Itemid=49

http://www.france-in-india.org/en/article.php3?id_article=3774

போன்ற இணைய தளங்களில் இந்த ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக்கின்றன.

கணிணி மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு

http://www.inria.fr/travailler/stage/index.en.html

http://www.inria.fr/recherche/equipes/listes/index.en.html

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை, நீங்கள் இப்போது ஆராய்சி செய்து கொண்டிருக்கும் ஆய்வகத்தின் நிர்வாகிக்கு (பேராசிரியர் என்றும் எடுத்துக் கொள்ளலாம் !!!!) அறிவித்துவிட்டு, பிரான்சில், நீங்கள் ஆராய்சி செய்துகொண்டிருக்கும் துறையில் ஒரு பேராசிரியரை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்வது தான். பிரான்சில் இருக்கும் அனைத்துப் பல்கலை மற்றும் ஆய்வு நிறுவனங்களை நீங்கள், http://www.findaschool.org/index.php?Country=France என்னும் வலைத்தளத்தின் உதவியுடன் தேடலாம்.

தேவையானவை: இதற்கு நீங்கள் முதலில் ஒரு சுயவிவரத்தை (CV) தயார் செய்து கொள்ளவும், அதில் நீங்கள் உங்களைப் பற்றிய விபரங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிடவும். அதனை உங்கள் மின்னஞ்சலில் இணைத்து, நீங்கள் தொடர்பு கொள்ளும் பேராசிரியருக்கு அனுப்பவும்.

ஐரோப்பாவிலிருக்கும் மற்ற பல்கலைக்கழகங்களிலிருக்கும் தகவல்கள்

http://cordis.europa.eu/fp6/mobility.htm

http://ec.europa.eu/euraxess/index_en.cfm

ஆ ) மூன்றாண்டுகளுக்கான உதவித்தொகை (Full time PhD fellowships)

பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள், முடித்துவிட்டு பணியிலிருப்பவர்கள் என ஆர்வமும் விருப்பமும் இருக்கும் யாவரும், பிரான்சில் மூன்றாண்டுகளுக்கு மேல் கால அவகாசம் எடுக்கும், முழு நேர ஆராய்ச்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல, ஆராய்சி செய்ய போதுமான நிதி வசதி, நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் அல்லது அரசின் கல்வி அமைச்சிலிருந்து நிதி பெறுவதாக இருந்தால் தான் இவர்கள் மாணவர்களை எடுப்பதால், பெரும்பாலும் கல்வி உதவித் தொகை பற்றி பொதுவாக கவலைப் படத்தேவையில்லை.

இதற்கான தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது சற்றே சிரமம் தான். ஆனால், சிறிது முயற்சித்தால், தேவையான தகவல்களை எளிதில் பெறலாம். உங்களுக்கு, ஆய்வுக் கட்டுரைகளின் மூலமும், கருத்தரங்குகள், நண்பர்கள் வழியாகவும், உங்களுக்கு விருப்பமான துறையில் ஏதேனும் பேரசிரியர்கள் மற்றும் அவர்களின் ஆய்வகங்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் அவர்களை தொடர்பு கொள்வது எளிது. அப்படி இல்லாவிடினும், http://www.findaschool.org/index.php?Country=France என்னும் வலைத்தளத்தின் உதவியுடன் பிரான்சில் இருக்கும் அனைத்துப் பல்கலை மற்றும் ஆய்வு நிறுவனங்களையும் தேடலாம்.

பேராசிரியர்களை உங்கள் சுயவிவரத்துடன் (CV) மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்வதே மிகச் சிறந்த வழி. அதே சமயம், இப்படிப்பிற்கான விளம்பரங்களையும், தகவல்களையும் நீங்கள் கீழ்கண்ட இணையதள முகவரிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

www.abg.asso.fr

http://www.cnrs.fr/en/join/Grants-Fellowships.htm

http://www.francecontact.net/

http://www.scholarshipnet.info/

http://www.findaphd.com/

http://france-in-india.org/en/

கணிணி, கணிதவியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு (Applied Mathematics, Computation, Simulation Algorithmics, Programming, Software, Architecture, Networks, Systems, Services, Distributed Computing, Perception, Cognition, Interaction, Computational Sciences for Biology, Medicine and the Environment)

http://www.inria.fr/travailler/opportunites/doc.en.html

http://www.inria.fr/travailler/jeunes_chercheurs/index.en.html

http://www.irisa.fr/education/subjects/index_html?set_language=en

http://www.iarc.fr/en/Education-Training/Fellowships

உயிரித் தொழில் நுட்பம், வேளாண்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைசார்ந்தவர்களுக்கு,

http://www.international.inra.fr/join_us/inra_is_recruiting_19_phd_students_on_special_contracts

உயிரியல், மருத்துவம், உயிரித் தொழில்நுட்பம் (biological, medical and public health research) போன்ற துறை சார் படிப்புகளுக்கு

http://www.cemagref.fr/English/

Materials Science

http://iemn.univ-lille1.fr/cnanono//offres_en.htm

அனைத்து இணைப்புகளுக்கும் சென்று பார்க்கவும், ஏனெனில், அனைத்தும் ஒன்றுகொன்று தொடர்பில்லாதது. பெரும்பாலும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு (PhD Studies) குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல், ஆண்டின் அனைத்து காலங்களிலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

III விஞ்ஞானிகளுக்கு (for post-doc & scientists)

அயல் நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கும் அவர்களது குழுவினருக்கும், குறுகிய காலம் (6 மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரை), பிரான்சில் ஆராய்சிப் பணிகளைத் தொடரவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தவும், கீழ்கண்ட இணையதளங்களில் தகவல்கள் உள்ளன.

http://www.cnrs.fr/en/join/Postdoctoral.htm

http://www.cefipra.org/cefipra/IPR.htm

http://www.stic-dst.org/download/networkcall.htm

http://www.francecontact.net/

http://www.pasteurfoundation.org/PostDoct.html

http://www.iarc.fr/en/Vacancies/Postdoctoral-Opportunities

கணிணி, கணிதவியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு (Applied Mathematics, Computation, Simulation Algorithmics, Programming, Software, Architecture, Networks, Systems, Services, Distributed Computing, Perception, Cognition, Interaction, Computational Sciences for Biology, Medicine and the Environment)

http://www.inria.fr/travailler/opportunites/doc.en.html

உயிரித் தொழில் நுட்பம், வேளாண்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைசார்ந்தவர்களுக்கு,

http://www.international.inra.fr/

http://www.cemagref.fr/English/

Materials Science

http://iemn.univ-lille1.fr/cnanono/offres_en.htm


இது, இத்தொடரினை எழுத ஊக்கமாக இருந்த பதிவு......... :)

http://vinaiooki.blogspot.com/2008/10/blog-post_10.html


பின்குறிப்பு : சில இணைப்புகளுக்கு மட்டும் அந்தப் விண்ணப்பத்திற்கான கடைசி தேதியினை குறிப்பிட்டுள்ளேன் ஏதேனும் இணைப்புகள் வேலை செய்யாவிடின் சுட்டிக்காட்டவும். :)