France லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
France லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஜூன், 2009

தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா உயர் அதிகாரிகள் - லெ மாந்த் பத்திரிக்கை குற்றச்சாட்டு

இந்த கட்டுரையின் தமிழாக்கத்தில் சிறிது பங்கெடுத்திருந்தாலும், இதன் தேவையும் அவசியமும் கருதி கையேடு(இரஞ்சித்) அவர்களின் முன் அனுமதியுடன் இங்கு பதிகின்றேன்.

************************************************************************************

இலங்கை விவகாரத்தில், ஐ.நா செய்த திரைமறைவுக் குளறுபடிகளால் தனது கடமையில் இருந்து தவறியிருக்கிறது என்ற பிரதானக் குற்றச்சாட்டுடன் , மே 28 ஆம் தேதி ப்ரெஞ்ச் பத்திரிக்கையான "லெ மாந்த்" (Le Monde), கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. "Philippe Bolopion" என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

பத்திரிக்கையின் சுட்டி : http://www.lemonde.fr/asie-pacifique/article/2009/05/28/sri-lanka-l-onu-a-cache-l-ampleur-des-massacres_1199091_3216.html

இனி அக்கட்டுரையிலிருந்து..

"L'ONU a caché l'ampleur des massacres au Sri Lanka,"

"தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா"


இறப்பு எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு பதிலில்லை. இறப்பு எண்ணிக்கை குறைத்தே வெளியிடப்பட்டுள்ளது. முறைதவறியுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கெதிராக போதிய ஆவணங்கள் இருந்தும் ஐ.நா வின் மேல்மட்டம் அமைதிகாத்திருப்பது "லெ மாந்த்" பத்திரிக்கையின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

போரின் இறுதி நிகழ்வுகளை "இரத்த வெள்ளம்" என்று குறிப்பிட்டாலும், கொழும்பின் மீதான பக்கச் சார்பினால், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் தமது கடமையிலிருந்து ஐ.நா மன்றம் தவறியிருக்கிறது.
இறந்தவர் எண்ணிக்கை பற்றிய உண்மையான அறிக்கையை வெளியிட மறுத்தது அதன் செயல்பாடுகளின் குறைகளைச் சுட்டுகிறது.

புலிகளுக்கெதிராக நடைபெற்ற இந்தப் போரில், ஐ.நாவின் கள ஊழியர்கள், அரசு சாரா உதவிக்குழுக்கள் (NGOs), மருத்துவர்கள் மற்றும் மத போதகர்கள் அளித்த உயிரழப்புக்கள் குறித்த எண்ணிக்கைகளை ஐ.நாவின் அதிகாரக்குழுக்களுள் சில, தொடர்ந்து இடையீடு செய்ததோடு, எண்களைக் குறைத்தும், திருத்தியும் இருக்கின்றனர்.

இதன் உச்சகட்டமாக சனவரி 20 ஆம் தேதியிலிருந்து மே 13 வரை ( இறுதித் தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்புவரை ) இறந்தவரின் எண்ணிக்கை 7,720 (678 குழ்ந்தைகள் உட்பட) எனவும், படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை 18,465 ( 2,384 குழந்தைகள் உட்பட) எனவும் தெரிவிக்கிறது அறிக்கை. " இவ்வறிக்கையை மறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது" என்று குறிப்பிடுகிறார் ஐ.நா வின் ஊழியர் ஒருவர்.

இறப்பு எண்ணிக்கைகள் பத்திரிக்கைகளுக்கு பல வழிகளில் சென்றடைந்த போதும், கொழும்பிலிருந்த ஐ.நா வின் ஒருங்கிணைப்பாளரான Neil Buhne மட்டுமே இதுகுறித்து பதிலளிப்பவராக இருந்தார். ஆனால், பொதுவாக ஐ.நா வின் மூத்த அதிகாரிகள் இது குறித்து பேசுவதிலிருந்து விலகியேயிருந்தனர்.

ஐ.நா வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரின் சிறப்பு தனிச் செயளர் விஜய் நம்பியாரின் கருத்திற்கு எதிரானதாக இருந்த போதிலும், மனித உரிமைகள் செயலாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் நம்பிக்கைக்குறிய தகவல்களை (அப்பொழுது சாவு எண்ணிக்கை 2,800) வெளியிடவேண்டுமென விரும்பினார். ஆனால், இத்தரவுகள் கொழும்பினுடனான உறவினை சீர் கெடுக்கும் என மனித உரிமைகள் செயலகத்தின் தொடர்பாளரான ஜான் ஹோல்ம்ஸ் கூறியிருந்தார்.

இறந்தவர் எண்ணிக்கை 20,000 ஐத் (இது ஒரு உத்தேசமான மதிப்பீடு) தொடலாம் என்ற நம்பிக்கை ஐ.நா அதிகாரியான விஜய் நம்பியாரிடம் தெரிவிக்கப் பட்டிருந்த போதும், இறுதித் தாக்குதல் வாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல், இந்த 7,700 என்ற எண் தொடர்ந்து அச்சு ஊடகத்தில் குறிப்பிடப்பட்டு வருகிறது.

துவக்கத்திலிருந்தே ஐ.நா இம்மோசமான சூழலை எதிர்பார்த்திருக்க வேண்டும்.

23 சனவரி 2009 அன்று, இரண்டு சர்வதேச உறுப்பினர் உட்பட 17 ஐ.நா ஊழியர்கள், பாதுகாப்புப் பிரதேசம் என அறிவிக்கப் பட்ட உடையார்காடு முகாமில் உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கை இராணுவம் அவ்விடத்தை குண்டுவீசி தாக்கியதில், பத்துக்கும் மேற்பட்டோர் பலியானர் எனக் குறிப்பிடுகின்றனர். மேலும், அருகிலிருந்த மருத்துவமனையில் பணியாற்றிய ஐ.நா வின் ஊழியர்கள், காயமடைந்த பெண்கள், உருக்குலைந்த, கருகிய மற்றும் உறுப்புகளிழந்த குழந்தைகளின் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

அடுத்தடுத்த வாரங்களில், போர்ப்பகுதிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட ஐ.நாவின் ஊழியர்களும், அரசு சாரா உதவிக்குழுக்களின் ஊழியர்களும், தொடர்ந்து ஐ.நாவின் அதிகாரிகளுக்குப் போர்நிலவரங்களை குறுஞ்செய்திகள் "SMS" மூலமாகத் தெரிவித்திருக்கின்றனர். இலங்கை இராணுவத்தினரால் குண்டு வீசப்பட்ட மருத்துவமனைகள் குறித்தும், நூற்றுக் கணக்கான இறந்தவர் பற்றியும், ஆயிரக்கணக்கான காயமடைந்தோர் பற்றியும் தொடர்ந்து போர்நிலவரம் பற்றி குறுஞ்செய்திகள் மூலம் தெரிவித்திருக்கின்றனர் அவ்வூழியர்கள்.

9 மார்ச் 2009 அன்று வந்த குறுஞ்செய்தி - "தயவு செய்து இலங்கை இராணுவத்தின் தாக்குதலை நிறுத்தச் சொல்லுங்கள்"

14 மார்ச் 2009 - "எங்கேயிருக்கிறது பாதுகாப்பு வலையம்"

இத்தனைக் குழப்பங்களுக்குமிடையே புலிகளின் பலவந்தமான ஆள் எடுப்பு நிகழ்வும் நடைபெற்றிருக்கிறது.

12 மார்ச் 2009 - " இரண்டு முகாம்களும் வதைக்கின்றன" " நாங்கள் இறந்து கொண்டிருக்கிறோம். பத்து மீட்டருக்கருகில் இரண்டு குண்டுகள் வீழ்ந்து வெடித்திருக்கிறது."

19 மார்ச் 2009 - "இளவயதினர் போர்களத்திற்குக் கொண்டு செல்லப் படுகின்றனர். என்ன செய்யப் போகிறது சர்வதேச சமூகம்"

21 மார்ச் 2009 - "தப்பிக்க முயன்ற நூற்றுக்கணக்கான மக்களைச் சில குண்டர்கள் தடுத்துச் சிறைபிடிக்கின்றனர். அவர்கள் வயது வித்தியாசமும், பாலின வித்தியாசமும் பாராமல், அவர்களைக் கம்புகளால் கடுமையாகத் தாக்குகின்றனர்." " ஏன் சர்வதேச சமூகம் அமைதி காக்கிறது?"

இக்கட்டான இச்சூழலில் ஐ.நா தனது "UNOSAT" பிரிவின் உதவியை நாடி, மக்கள் இடம்பெயர்வு குறித்து செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கோரியது. செயற்கைக்கோள் படங்கள் வான் வழித்தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங்களின் பயன்பாட்டால் விளைந்த 12 மீட்டர் விட்டம் கொண்ட குழிகளைக் கொண்டிருந்தன.

"ஐ.நாவின் தலைமையிடம், இலங்கை அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்த போதிலும், ஒரு நாள் கூட அங்கு கனரக ஆயுதங்களின் பாவிப்பு நிறுத்தப்படவில்லை," என ஒரு பிரதிநிதி தெரிவித்திருக்கிறார். ஐ.நா இவ்வாதாரங்களை தன் கைகளில் கொண்டிருந்தாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏப்ரல் மாதத்தின் இடைக்காலத்தில், ஐ.நா விற்கு விஜயம் செய்த விஜய் நம்பியார், "ஐ.நா இப்பிரச்சனையில் அடக்கி வாசிக்க வேண்டும்" என்றும் " இலங்கை அரசாங்கத்துடன் இணக்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயத்தில் பொதுமக்களினது இறப்புகளின் எண்ணிக்கையும் காயம்பட்டோரின் எண்ணிக்கையும் சில ஆயிரங்களைத் தொட்டுவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், கொழும்பு, போர்ப்பகுதிகளுக்கு மனிதநேய உதவிக்குழுக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஐ.நா அறிவித்தது. ஆனால், அப்படி ஒரு நிகழ்வை உலகம் காணவில்லை.

நியூயார்க்கிலிருந்து கொழும்பு வரையுள்ள ஐ.நாவின் மேல்மட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் பலருக்கு் அதிருப்தியளித்திருக்கிறது. "அவர்கள் ஒரு பாரிய மனிதப் படுகொலைக்குத் தயாராகிவிட்டிருந்தனர்" என்று ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். "பல மாதங்களாகப் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் யாரும் அரசாங்கத்தின் கதவுகளைத் தட்டவில்லை" என்று ஒரு மக்கள் ஊழியர் குறிப்பிட்டிருக்கிறார். அதேநேரம், உயர்மட்டத்தில் இல்லாத எந்தவொரு ஊழியரையும், நசுக்கவும், மிரட்டவும், அச்சுறுத்தவும், வெளியேற்றவும் இலங்கை அரசாங்கம் சிறிதும் தயங்கவேயில்லை.

மே 11 ஆம் தேதி, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக வந்த செய்தியை அடுத்து, கொழும்புவிற்கான ஐ.நா வின் பிரதிநிதியான திரு. Gordan Weiss இதனை இறுதியில் ஒரு "இரத்த வெள்ளம்" என்று குறிப்பிடுகிறார். உடனடியாக இலங்கை அரசாங்கம் இதற்கான விளக்கத்தினைக் கோருகிறது. பின்னர் அவ்வதிகாரி அக்குறிப்பினை கைவிடுகிறார். இச்செய்தி பற்றி BBCல் Amin Awad, எனும் அகதிகளுக்கான உயர் கமிஷனின் பிராந்திய அதிகாரி குறிப்பிடுகையில், இரண்டு தரப்புகளின் குற்றச்சாட்டுகளைப் பிரித்தறிவது கடினமான செயலாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

17 மே 2009 அரசாங்கம் தனது வெற்றிச் செய்தியினை அறிவித்ததை சந்தேகிக்கும் அல்ஜசீராவைச் சேர்ந்த திரு. Awad, அதற்கு காரணமாக, போர்ப்பகுதியிலிருந்த 20,000 மக்கள் வெளியேறினர் என்று அரசாங்கம் பின்னர் வெளியிட்ட செய்தியினை சுட்டிக் காட்டுகின்றார். மேலும், "இந்த அறிவிப்பானது அரசாங்கம் அங்கு குண்டுமழை பொழிவதற்கான முன் ஏற்பாடக கருதலாம்" என ஐ.நா வின் ஊழியர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

போரின் முடிவு, இருக்கும் பிரச்சனைகளின் முடிவல்ல. 3,00,000 க்கும் மேலான இடம்பெயர்ந்தோர் உள்ள முகாம்களில் அரசு சாரா உதவிக் குழுக்கள் (NGO) கடுமையான இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். "செய்து கொண்ட சமரசங்கள் போதும்" என்று பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கும், முகாம்களில் மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கும், முகாம்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கும், ஆவன செய்யாத ஐ.நா வை நோக்கி தன்னுடைய குற்றச்சாட்டினை வைக்கிறார் ஒரு NGO ஊழியர்.

மே 11 ஆம் தேதி, திரு.Neil Buhne, என்பவருக்கு 7 NGO க்கள் கூட்டாக எழுதிய கடிதத்தில், வடக்கில் Menik Farm எனும் முகாமில் ஐ.நா உதவியுடன் இலங்கை அரசாங்கம் செய்து வரும் போருக்குப் பின்னான புனரமைப்புப் பணிகளில், "ஏறத்தாழ நிரந்தரமாக மக்களை முகாம்களில் தங்க வைக்கும் திட்டமும்" முகாமைச் சுற்றி நிகழும் கட்டுமானச் செயல்களும் ஒரு நிரந்தரத் தங்குமுகாமிற்கான கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது என்று குறிப்பிடுகின்றனர். மேலும், "நம்முடைய செயல்கள் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களின் சுயமரியாதையும், சுதந்திரத்தையும் உறுதி செய்யும் முகமாக அமையவேண்டும்" என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

- Philippe Bolopion
************************************************************************************

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

பிரான்சில் மேற்படிப்புத் தகவல்கள் - 2

வணக்கம்,

நண்பர்கள் சிலர் புதிதாக சில இணைப்புகள் கொடுத்ததினால் அதை ஏற்கனவே பதிவிட்டிருந்த இடுகையில் இணைத்தேன்.

ஆனால், இதனை தொடரும் நண்பர்களுக்கு புதிய இணைப்புகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும் என எண்னியதால் அந்த புதிய இணைப்புகள் மட்டும் உங்கள் பார்வைக்கு...

I பட்ட மேற்படிப்புத் தகவல்கள் (For Masters)
Masters in Nano Science and Nanomaterials
http://etudes.univ-rennes1.fr/master-nanosciences/english
http://www.univ-lille1.fr/masters2-mnt-tac/mnt.htm

Materials for Energy Storage and Conservation (MESC)
http://www.u-picardie.fr/mundus_MESC/page.php?p=applications
இது ஒரு Erasmus Mundus கல்வி உதவித் தொகையின் கீழ்வரும் படிப்பாகும்

Ampère excellence Scholarships - Master's programme
http://www.ens-lyon.eu/web/nav/article.php?id=23

(Deadline March 27)

AtoSiM Master of Science
http://www.erasmusmundus-atosim.cecam.org/

II ஆராய்ச்சிப் படிப்புத் தகவல்கள் (PhD opportunities)

http://iemn.univ-lille1.fr/cnanono//offres_en.htm
http://www.iarc.fr/en/Education-Training/Fellowships

பொதுவாக தேட மற்றும் ஒரு தளம் http://www.scholarshipnet.info/

III விஞ்ஞானிகளுக்கு (for post-doc & scientists)

http://iemn.univ-lille1.fr/cnanono//offres_en.htm

http://www.pasteurfoundation.org/PostDoct.html

http://www.iarc.fr/en/Vacancies/Postdoctoral-Opportunities

இவை அனைத்தும் ஏற்கனவே, பிரான்சில் மேற்படிப்புத் தகவல்கள்
என்னும் தலைப்பில் இடப்பட்டிருந்த இடுகையில் பகுதிவாரியாக தொகுக்கப்பட்டுள்ளது.

வியாழன், 12 பிப்ரவரி, 2009

பிரான்சில் மேற்படிப்புத் தகவல்கள் !!!!!

வணக்கம்.....

மேற்படிப்பு (பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி துறை சார்ந்தவை) படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அதற்குறிய சரியான தகவல்கள் உரிய நேரத்திற்க்கு கிடைக்கப்பெருமா என்பது சந்தேகமே... ஏனெனில், சரியான வாய்ப்புகளைத் தேடி சில ஆண்டுகளை கழித்தவர்களில் நானும் ஒருவன் !!!!! அதனால், நான் தற்போது இருக்கும் பிரான்சில், மேற்படிப்பு சம்பந்தமான தகவல்களை தமிழில் பதிய எண்ணிக்க்கொண்டிருந்த பொழுது, நண்பர் ஒருவரால், சுவீடனில் மேற்படிப்பு சம்பந்தமாக வினையூக்கி அவர்களால் இடப் பட்டிருந்த பதிவை காண நேர்ந்தது... அதனால் உந்தப் பட்டு, இங்கிருக்கும் பல்வேறு படிப்புகளைப் பற்றி என்னால் இயன்ற அளவிற்கு தகவல்கள் சேகரித்து இதை எழுத முயன்றுள்ளேன்....

பிரான்சில், சீதோசண நிலை ஒரு பெரும் பிரச்சனையா இருக்காது. அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் மட்டுமின்றி கலை மற்றும் மொழி சார்ந்த படிப்புகளுக்கும் பிரான்ஸ் புகழ் பெற்றது. இங்கு மேற்படிப்பு படிக்க, ஆங்கில மொழித் தேர்வு மதிப்பெண் (IELTS/TOEFL)சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது பாடத்திட்டதிற்கு ஏற்ப வேறுபடுகிறது. (பெரும்பான்மையான படிப்புகளுக்கு ஆங்கிலப் புலமைத் தேர்வு அவசியம் இல்லை !!!!).

பிரான்சில் 81க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அனைத்தும் பிரான்ஸ் அரசின் கல்வி அமைச்சகத்தின் மேற்பார்வையிலும் கண்காணிப்பிலும் இருப்பவையாகும்.

http://www.findaschool.org/index.php?Country=France

கல்விச் செலவுக்கான பெரும் பகுதியை அரசே ஏற்பதால், கட்டணத்தொகையானது மிகக் குறைவே, பெரும்பாலான சமயங்களில் முழுவதுமாக கல்விக் கட்டணம் கட்டத் தேவையிருக்காது. 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, மருத்துவக் காப்பீட்டுத் தொகையையும் அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த வயது வரம்பை கடந்தவர்களுக்கு இது இரண்டு ஆண்டிற்கு அதிகபட்சமாக 700 யூரோ வரை ஆகும். (பெரும்பாலும் இரண்டு ஆண்டிற்கும் சேர்த்து, கல்விக் கட்டணம் + மருத்துவக் காப்பீட்டுத் தொகை 1000 யூரோ வரை ஆகலாம்). படிப்பு முடித்து இங்கேயே வேலை பார்க்க விரும்புவோர், பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்வது நன்மை தரும். அதே சமயம், மேற்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை பெறதா மாணவர்களுக்கும் பிரெஞ்சு கற்றுக் கொள்வதன் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பினை அதிகரித்துக் கொள்ளலாம். இந்தியாவில், Allience de Francaise என்னும் அமைப்பு பிரெஞ்சு மொழியினை கற்றுத்தருகிறது. பல்வேறு வகையான படிப்புகளையும் அதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளையும் தனித்தனியே பார்ப்போம்.

கல்வி உதவித்தொகை (Scholaships/Fellowships/Assistantship)

பொதுவாக, இந்த கல்வி உதவித்தொகை பற்றி பலருக்கும் இருக்கும் சந்தேகம்

மற்ற ஐரோப்பிய/அமெரிக்க நாடுகளைப் போலவே இங்கும் கல்வி உதவித் தொகையானது உங்களுடை கல்விச் செலவுக்கு மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட செலவுகளுக்கும் (உணவு, உடை, மருத்துவம், ஊர் சுற்றல்) போதுமானதாகவே இருக்கும். பகுதி நேர வேலைக்குச் சென்று பணம் ஈட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இந்த தொகையின் அளவானது படிப்பையும் (Masters/PhD), நாம் எந்த மாதிரியான உதவியின் கீழ் வருகின்றோம் என்பதனையும் பொறுத்து மாறுபடும்...

பொதுவாக PhD மாணவர்களுக்கு, 1300 - 1700 யூரோ வரை ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். அனைத்து செலவுகளுக்கு பிறகும் பாதிக்கு மேல் சேமிக்கலாம்.

I பட்ட மேற்படிப்புத் தகவல்கள் (For Masters)

அ) இளங்கலைப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமல்லாது முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும் கூட, பிரான்சிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கு பட்ட மேற்படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்.

பல்வேறு வகையான படிப்புகளையும், அதன் வரையரைகளையும் விரிவாக தெரிந்து கொள்ள EduFrance என்னும் அமைப்பு உதவுகிறது. இது, Allience de Francaise ன் ஒரு அங்கமாகும். இவர்களின் இணைய முகவரிகள்

http://www.india-campusfrance.org/

www.edufrance.fr/en/

இந்த EduFrance அமைப்பானது இந்தியாவில் ஏழு இடங்களில் (சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், சண்டிகார், மும்பை, புது தில்லி, பூனே) அமைந்துள்ளது.

இவர்கள், பிரான்சின் கல்வி முறைகளைப் பற்றியும், அதற்கு விண்ணப்பிக்கும் முறைகளையும் மற்றும் கல்வி உதவித் தொகைப் பெறுவதற்கும் ஆலோசனை வழங்குவார்கள். இந்த அமைப்பினை, மின்னஞ்சல், தொலைபேசி அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம். இவர்களின் மேற்குறிப்பிட்டுள்ள இணைய முகவரிகளை தொடர்ந்து கவனித்து வரவும்.

ஆ) இந்தியாவில் தமிழகத்தில் உள்ள சில பல்கலைகழகங்களும் கல்லூரிகளும் பிரான்சில் உள்ள சில பல்கலைகழங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளன. [உதாரணம் : லயோலா கல்லூரியின் உயிர்த் தொழில் நுட்பத்துறையினர் (Biotechnology department, Loyala college) பிரான்சின் லில்லி பல்கலைக் கழகத்துடன் (University of Lille) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளனர்]. அதேபோல, நீங்கள் இப்போது படித்துக் கொண்டுள்ள கல்வி நிறுவனம் இது போன்ற ஏதாவது ஒரு பிரான்ஸ் பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியிருக்கும் பட்சத்தில், உங்களுடைய பட்ட மேற்படிப்பின் ஒரு பகுதியையோ, 6 மாதப் படிப்பையோ அல்லது ஒரு ஆண்டு படிப்பையோ (உங்களுடைய படிப்பு 2 ஆண்டுகளாக இருக்கும் பட்சத்தில்) பிரான்சில் உதவித்தொகையுடன் தொடரலாம்.

இ) ஒவ்வொரு ஆண்டும், பட்ட மேற்படிப்புக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை நீங்கள் கீழ்கண்ட இணையதள முகவரிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

http://www.india-campusfrance.org/

www.edufrance.fr/en/

http://www.france-in-india.org/en/

http://www.egide.asso.fr/jahia/Jahia/

மற்றும், http://www.egide.asso.fr/jahia/Jahia/lang/en/accueil/etudiants

http://www.education.gouv.fr/cid1012/programme-erasmus.html

http://www.ifan.in/index.php?option=com_content&task=view&id=117&Itemid=47

கணிணி, கணிதவியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு (Applied Mathematics, Computation, Simulation Algorithmics, Programming, Software, Architecture, Networks, Systems, Services, Distributed Computing, Perception, Cognition, Interaction, Computational Sciences for Biology, Medicine and the Environment)

http://www.inria.fr/travailler/stage/index.en.html

http://www.inria.fr/recherche/equipes/listes/index.en.html

http://www.irisa.fr/education/doctoral/teaching/

உயிரியல், மருத்துவம், உயிரித் தொழில்நுட்பம் (biological, medical and public health research) போன்ற துறை சார் படிப்புகளுக்கு

http://www.inserm.fr/en/inserm/

அனைத்து இணைப்புகளுக்கும் சென்று பார்க்கவும். அனைத்தும் ஒன்றுகொன்றுதொடர்பில்லாதது. அதே சமயம், ஐரோப்பாவிலிருக்கும் மற்ற பல்கலைக்கழகங்களின் (இதே போன்ற) பட்ட மேற்படிப்புத் தகவல்களைப் பெற

http://ec.europa.eu/education/programmes/mundus/projects/index_en.html

Masters in Materials Science

தற்சமயம், நான் இருக்கும் பல்கலைக் கழகத்தின் பருப்பொருள் அறிவியலில் துறையில் (Masters in Materials Science), கல்வி உதவித் தொகையுடன் கூடிய பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கவும் அதற்கான தகவல்களைப் பெறவும்,

http://etudes.univ-rennes1.fr/mamaself/english

இதே துறையில் (Materials Science), ஐரோப்பாவிலிருக்கும் மற்ற பல்கலைக்கழகங்களிலிருக்கும் படிப்புத் தகவல்களை

http://www.getscholarship.net/79/erasmus-mundus-scholarships-for-european-master-in-material-science என்ற இணையத்தில் பெறலாம்.

Masters in Nano Science and Nanomaterials
http://etudes.univ-rennes1.fr/master-nanosciences/english

http://www.univ-lille1.fr/masters2-mnt-tac/mnt.htm


Materials for Energy Storage and Conservation (MESC)
http://www.u-picardie.fr/mundus_MESC/page.php?p=applications

இது ஒரு Erasmus Mundus கல்வி உதவித் தொகையின் கீழ்வரும் படிப்பாகும்.

Ampère excellence Scholarships - Master's programme
http://www.ens-lyon.eu/web/nav/article.php?id=23

AtoSiM Master of Science

http://www.erasmusmundus-atosim.cecam.org/

International masters in Chemistry at University of Rennes1

http://www.immc.univ-rennes1.fr/

II ஆராய்ச்சிப் படிப்புத் தகவல்கள் (PhD opportunities)

பொதுவாகவே, மற்ற வளர்ச்சியடைந்த ஐரோப்பியா நாடுகளைப் போலவே, பிரான்சிலும் ஆராய்ச்சி செய்யத்தேவையான சுதந்திரமும், வசதிகளும் மற்றும் வழிகாட்டுதலும் உள்ளது. ஆராய்சி செய்ய போதுமான நிதி வசதி, நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் அல்லது அரசின் கல்வி அமைச்சிலிருந்து நிதி பெறுவதாக இருந்தால் தான் இவர்கள் மாணவர்களை எடுப்பதால், பெரும்பாலும் கல்வி உதவித் தொகை பற்றி கவலைப் படத்தேவையில்லை.

அ) குறுகிய கால கல்வி உதவித் தொகை (Fellowship for PhD Sandwich programmes)

அயல்நாட்டு மாணவர்களுக்கு (ஏற்கனவே ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுள்ளோருக்கு), பிரான்ஸ் அதன் தூதரகங்களின் மூலம் இந்த திட்டத்திற்கான மாணவர்களை தேர்வுசெய்கின்றது. இதன் மூலம் தேர்வு செய்யப் படும் மாணவர்களுக்கு பயணம், கல்விக் கட்டணம் + மருத்துவக் காப்பீட்டு தொகை வழங்குவதோடு மற்றும் இதர செலவீனங்களுக்கு தேவையான மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இது 6 மாததிலிருந்து 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது.

இதற்கான தகவல்களை, http://www.frenchsciencetoday.org/ என்னும் இணையதளைத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். மற்றும்

http://www.ifan.in/index.php?option=com_content&task=view&id=68&Itemid=49

http://www.france-in-india.org/en/article.php3?id_article=3774

போன்ற இணைய தளங்களில் இந்த ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக்கின்றன.

கணிணி மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு

http://www.inria.fr/travailler/stage/index.en.html

http://www.inria.fr/recherche/equipes/listes/index.en.html

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை, நீங்கள் இப்போது ஆராய்சி செய்து கொண்டிருக்கும் ஆய்வகத்தின் நிர்வாகிக்கு (பேராசிரியர் என்றும் எடுத்துக் கொள்ளலாம் !!!!) அறிவித்துவிட்டு, பிரான்சில், நீங்கள் ஆராய்சி செய்துகொண்டிருக்கும் துறையில் ஒரு பேராசிரியரை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்வது தான். பிரான்சில் இருக்கும் அனைத்துப் பல்கலை மற்றும் ஆய்வு நிறுவனங்களை நீங்கள், http://www.findaschool.org/index.php?Country=France என்னும் வலைத்தளத்தின் உதவியுடன் தேடலாம்.

தேவையானவை: இதற்கு நீங்கள் முதலில் ஒரு சுயவிவரத்தை (CV) தயார் செய்து கொள்ளவும், அதில் நீங்கள் உங்களைப் பற்றிய விபரங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிடவும். அதனை உங்கள் மின்னஞ்சலில் இணைத்து, நீங்கள் தொடர்பு கொள்ளும் பேராசிரியருக்கு அனுப்பவும்.

ஐரோப்பாவிலிருக்கும் மற்ற பல்கலைக்கழகங்களிலிருக்கும் தகவல்கள்

http://cordis.europa.eu/fp6/mobility.htm

http://ec.europa.eu/euraxess/index_en.cfm

ஆ ) மூன்றாண்டுகளுக்கான உதவித்தொகை (Full time PhD fellowships)

பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள், முடித்துவிட்டு பணியிலிருப்பவர்கள் என ஆர்வமும் விருப்பமும் இருக்கும் யாவரும், பிரான்சில் மூன்றாண்டுகளுக்கு மேல் கால அவகாசம் எடுக்கும், முழு நேர ஆராய்ச்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல, ஆராய்சி செய்ய போதுமான நிதி வசதி, நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் அல்லது அரசின் கல்வி அமைச்சிலிருந்து நிதி பெறுவதாக இருந்தால் தான் இவர்கள் மாணவர்களை எடுப்பதால், பெரும்பாலும் கல்வி உதவித் தொகை பற்றி பொதுவாக கவலைப் படத்தேவையில்லை.

இதற்கான தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது சற்றே சிரமம் தான். ஆனால், சிறிது முயற்சித்தால், தேவையான தகவல்களை எளிதில் பெறலாம். உங்களுக்கு, ஆய்வுக் கட்டுரைகளின் மூலமும், கருத்தரங்குகள், நண்பர்கள் வழியாகவும், உங்களுக்கு விருப்பமான துறையில் ஏதேனும் பேரசிரியர்கள் மற்றும் அவர்களின் ஆய்வகங்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் அவர்களை தொடர்பு கொள்வது எளிது. அப்படி இல்லாவிடினும், http://www.findaschool.org/index.php?Country=France என்னும் வலைத்தளத்தின் உதவியுடன் பிரான்சில் இருக்கும் அனைத்துப் பல்கலை மற்றும் ஆய்வு நிறுவனங்களையும் தேடலாம்.

பேராசிரியர்களை உங்கள் சுயவிவரத்துடன் (CV) மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்வதே மிகச் சிறந்த வழி. அதே சமயம், இப்படிப்பிற்கான விளம்பரங்களையும், தகவல்களையும் நீங்கள் கீழ்கண்ட இணையதள முகவரிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

www.abg.asso.fr

http://www.cnrs.fr/en/join/Grants-Fellowships.htm

http://www.francecontact.net/

http://www.scholarshipnet.info/

http://www.findaphd.com/

http://france-in-india.org/en/

கணிணி, கணிதவியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு (Applied Mathematics, Computation, Simulation Algorithmics, Programming, Software, Architecture, Networks, Systems, Services, Distributed Computing, Perception, Cognition, Interaction, Computational Sciences for Biology, Medicine and the Environment)

http://www.inria.fr/travailler/opportunites/doc.en.html

http://www.inria.fr/travailler/jeunes_chercheurs/index.en.html

http://www.irisa.fr/education/subjects/index_html?set_language=en

http://www.iarc.fr/en/Education-Training/Fellowships

உயிரித் தொழில் நுட்பம், வேளாண்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைசார்ந்தவர்களுக்கு,

http://www.international.inra.fr/join_us/inra_is_recruiting_19_phd_students_on_special_contracts

உயிரியல், மருத்துவம், உயிரித் தொழில்நுட்பம் (biological, medical and public health research) போன்ற துறை சார் படிப்புகளுக்கு

http://www.cemagref.fr/English/

Materials Science

http://iemn.univ-lille1.fr/cnanono//offres_en.htm

அனைத்து இணைப்புகளுக்கும் சென்று பார்க்கவும், ஏனெனில், அனைத்தும் ஒன்றுகொன்று தொடர்பில்லாதது. பெரும்பாலும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு (PhD Studies) குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல், ஆண்டின் அனைத்து காலங்களிலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

III விஞ்ஞானிகளுக்கு (for post-doc & scientists)

அயல் நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கும் அவர்களது குழுவினருக்கும், குறுகிய காலம் (6 மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரை), பிரான்சில் ஆராய்சிப் பணிகளைத் தொடரவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தவும், கீழ்கண்ட இணையதளங்களில் தகவல்கள் உள்ளன.

http://www.cnrs.fr/en/join/Postdoctoral.htm

http://www.cefipra.org/cefipra/IPR.htm

http://www.stic-dst.org/download/networkcall.htm

http://www.francecontact.net/

http://www.pasteurfoundation.org/PostDoct.html

http://www.iarc.fr/en/Vacancies/Postdoctoral-Opportunities

கணிணி, கணிதவியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு (Applied Mathematics, Computation, Simulation Algorithmics, Programming, Software, Architecture, Networks, Systems, Services, Distributed Computing, Perception, Cognition, Interaction, Computational Sciences for Biology, Medicine and the Environment)

http://www.inria.fr/travailler/opportunites/doc.en.html

உயிரித் தொழில் நுட்பம், வேளாண்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைசார்ந்தவர்களுக்கு,

http://www.international.inra.fr/

http://www.cemagref.fr/English/

Materials Science

http://iemn.univ-lille1.fr/cnanono/offres_en.htm


இது, இத்தொடரினை எழுத ஊக்கமாக இருந்த பதிவு......... :)

http://vinaiooki.blogspot.com/2008/10/blog-post_10.html


பின்குறிப்பு : சில இணைப்புகளுக்கு மட்டும் அந்தப் விண்ணப்பத்திற்கான கடைசி தேதியினை குறிப்பிட்டுள்ளேன் ஏதேனும் இணைப்புகள் வேலை செய்யாவிடின் சுட்டிக்காட்டவும். :)